December 3, 2006

வர்சானா குசல் பிகாரி கோயில்[1]

தில்லியிலிருந்து ஆக்ரா போகும் வழியில் இருக்கிறது வர்சானா.பர்சானா என்றும் சொல்கிறார்கள்.இது ராதாராணி பிறந்த இடம்.போவது என்று முடிவு செய்த இடம் கோவர்த்தனம்.நேரம் கிடைத்தால் வரும் வழியில் பார்ப்பதாக எண்ணி விவரமாக வர்சானா ப் பற்றி படித்து செல்லவில்லை.

கோவர்த்தனத்தில் இருந்து குறுக்கு வழியை தேர்ந்து எடுத்தோம்.முதலில் நன்றாக இருந்தது பாதை. வயல்வெளிகளை ரசித்து கொண்டே வந்தோம். பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு சிறு டெம்போ போன்ற ஆட்டோ எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்தது.என் பெண்ணிடம் பார் எங்கிருந்தோ பள்ளி க்கு இப்படி ஒரு வண்டியில் சாமான்களை போல உட்கார்ந்து போகிறார்கள் கிராமத்து குழந்தைகள் என்று சொல்லிக்கொண்டே நாங்கள் அவர்களை கடந்தோம்.அந்த குழந்தைகள் எங்களை கவனித்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.


சற்று நேரத்தில் படுமோசமான பாதை வரத்தொடங்கியது. கணவர் சிறு கவலையுடனே ஓட்டி வந்தார்கள்.
இப்போது நாங்கள் முந்தி வந்த டிராக்டர் மற்றும் குழந்தைகளின் ஆட்டோ எங்களை முந்திக்கொண்டார்கள்..ஆனால் அக்குழந்தைகள் முகத்தில் இப்போது புன்னகை . அலுவலத்து வண்டி இருக்கும் போதே இப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்....என்று எண்ணிக் கொண்டாலும்...குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துப்போவதால் நின்றுபோனால் கூப்பிடு தொலைவில் ஒரு வீடுகூட தெரியவில்லை என்பது பயமாக இருந்தது.


எதிர்பக்கம் இன்னுமொரு பெரியகாரை கண்டதும் தான் நிம்மதி..{அடடா நம்மளப் போல் சிலர் இருக்காங்க}வர்சானா வந்ததும் ஒரு கோயில் மலை மேல் தெரிந்தது....வழியில் ஒருவரிடம் அய்யா கோயிலுக்கு எப்படி போகணும் என்றோம்..காரில் போனும் என்றால் பின்னால் ஒரு பாதை இருக்கிறது என்றார்.பக்கத்தில் இருந்தவர் என்ன காரிலா என்று சந்தேகமாக வழி சொன்னவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.






அந்த வழி மிக சிறியதாக இருந்தது இரு புறமும் வீடுகள். மாடுகள் வேறு கட்டி இருந்தனர் வழியில்.


பெரிய கார் என்பதால் இதில் போகுமா முடியவில்லை என்றால் திருப்ப இடம் இருக்குமா என்று கவலைப் பட்டு வந்தவழி திரும்பலாமா என்ற எங்களை கடந்த ஒரு சிறுவன் கோயிலுக்கா என் பின்னால் வாருங்கள் என்றான்.அட சின்ன கிருஷ்ணன் .பின்னாலேயே போனால் அங்கே ஒருவன் பத்து ரூபாய் கார் கட்டணம் வசூலித்து இது தான் பாதை என்று வருக முகப்பு வளைவுவை காண்பித்தான்.




அது பழனி கோயில் யானைப் பாதை போன்று இருந்தது.ஆனால் மிகவும் செங்குத்து வயதானவர்களுக்குரிய கவலையுடன் மாமனார் முடியுமாப்பா இல்லையென்றால் போய்விடலாம் என்கிறார்கள்...ஒரே குப்பை கூளமாக இருந்தது யாரும் உபயோகிக்கிறார்களா என்றே சந்தேகமாக இருந்தது ஆரம்ப பாதை..ஆனால் கிருஷ்ணனே வழிகாட்டிய பின்னர் போகாமல் இருப்பதா?
பின்னர் பாதை நன்றாக இருந்தது .வீடுகள் அருகில் இருந்ததால் குப்பை அங்கே கொட்டி இருப்பார்கள் போல.இதில் கொண்டைஊசி வளைவு போல் வேறு ஆனால் இந்த பயத்தில் நாங்கள் ஒரு விசயம் யோசிக்கவே இல்லை....ஒரு வண்டி தான் அந்த பாதையில் போகலாம்..அதற்கே கஷ்டம் தான்.மேலே போனபின் தான் இறங்கும் போது ஏதும் வண்டி எதிரில் வந்தால் என்று யோசித்தோம்...ஆனால் கோயில் அருமையானது.

No comments: