September 17, 2009

நான் இயக்குனரான கதை

முன் குறிப்பு : சும்மாத்தானே இருக்கோம்.. பழைய பதிவுகளுக்கு லேபிள்களை சரிப்படுத்துவோம்ன்னு நினைத்துக் கொண்டிருந்த போது.. என் முதல் முயற்சியான இக்காட்சிக் கவிதைக்கு லேபிள் குறும்படம்ன்னு போடலாமோ போட்டுட்டு அப்படியே மீள்பதிவாக்கலாமோ என்று தோன்றியது . மீள்பதிவாக்கியாச்சு. பதிவின் பழைய பின்னூட்டங்களுக்கு ...

மேலும் சில சுய விளம்பரங்கள்..
குறும்படம் எடுக்க போகிறீர்களா சில குறிப்புகள்...

என் இரண்டாவது முயற்சி


அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

என் கவிதை வரிகள்:


பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.





நடுவர் நிலாவின் கருத்து:





இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு: "பூங்கா"
காட்சிச் சுவை நன்று. குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்ததைத் தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம். கவிதையைக் காட்சியில் எழுதியதால் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் போகிறது சில வேளைகளில். இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு பருவத்தின்உணர்வுளையும் க்ளோஸப்பில் ஓரிரு ஃப்ரேம்களாவது வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்






அன்புடனில் வெளிவந்த புகாரியின் கடிதம்:
(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் முத்துலட்சுமி,
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி திறந்தவெளியில் பொழுதெல்லாம் இனிதாக்கிச் சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
நறுக்கென்று ஒரு நல்ல கருத்து. அதை மிக எளிமையாய்ச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதையும் காட்சிகளும்.
மரங்களை வெட்டிவிட்டு மாளிகைகள் கட்டும் முட்டாள் மனிதர்களுக்கு நல்லதோர் உபதேசம்.
கட்டிடங்களுக்கு இடமே இல்லாத நியூயார்க் நகரின் நடுவிலும் பெரியதொரு பூங்கா இருக்கும் "சென்ட்ரல் பார்க்" அது இல்லாவிட்டால் நியூயார்க்கும் ஒரு மயானம்தான்.
மீண்டும் மீண்டும் வரும் அதே காட்சிகள் அலுப்பைத்தருவது உண்மைதான் என்றாலும் நல்ல படைப்பு
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, காட்சியாய் அமைத்து தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி




அன்புடன் குழுவிற்கு நான் எழுதிய கடிதம்:


வெற்றி பெற்ற செய்திமுதலில் சகபதிவர் மங்கை மூலம் அறிந்தேன் , அப்போதே மகிழ்ச்சி அளவிட முடியாமல் இருந்தது. குடும்பத்தில் எல்லோரும் பாராட்டினார்கள்.
கவிதை உருவானகதை மிகப் பெரியது. போட்டியில் இந்த பகுதி காட்சிக்கவிதை புதுமையாக இருந்தது. இப்படி ஒரு முயற்சி செய்ய வெகுநாளாகவே ஆசையிருந்தது. இப்போட்டி அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கவிதை ஒரு நாள் காலை கண்விழித்ததும் சிறு பொறியாக தோன்றியது. உடனே அதன் சுருக்கத்தை எழுதி வைத்தேன். பின் சமையலுக்கு நடுநடுவே அதன் விரிவாக்கமும்... வீடியோவுக்கான ஸ்டோரிபோர்டுக்கான வேலையும் குறிப்பெடுத்தேன்.


உடனேயே காட்சியை எடுக்க ஆசை அளவிட முடியாமல் போனது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னால் சிந்தாநதி அவர்களின் ஒரு விவாதக்களப்போட்டியில் பரிசாக எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. நான் பதேர்பாஞ்சாலியின் நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் கேட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர் குறிப்பிட தவறி இருந்தேன் அதனால் அவர்கள் பதேர்பாஞ்சாலி படத்தினைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்கள். அதுவும் ஒரு நல்ல புத்தகமே. இளைய இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாடபுத்தகம் அது.



அதில்குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விசயம். சத்யஜித்ரே ஒரு காட்சியை மூங்கில் புதர்களில் எடுத்தாராம். பணம் குறைந்ததால் மீதி காட்சி தொடர நாள் ஆகியதாம் அதற்குள் புதர் காடாகிவிட்டதாம். அதே காட்சி தொடர அவர் ஒரு ஆறு மாதம் காத்திருந்தாராம் காட்சியமைப்பில் அத்தனை ஒரு கவனம். அட யாரையெல்லாம் உவமை சொல்றான்னு நினைக்காதீங்க. முயற்சி செய்யும் போதே பெரியதாக கனவு காணனும் இல்லையா. அதனால் காத்திருந்து ஒரு 10 நாட்களாக காட்சிகளை எடுத்து பின் எடிட் செய்தேன். பின் அதனை ஒரு வடிவத்துக்கு கொண்டுவர மேலும் ஒரு வாரம் ஆனது எனக்கு ஏனென்றால் முதல் முயற்சி , கணினி தொழிட்நுட்பத்தில் தடுமாற்றம்.




நடுவர் நிலாவுக்கு நன்றி. அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் பாடலாக அதை பிண்ணனியில் ஒலிக்க செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது அதற்கும் முயற்சி செய்தேன் அப்போது எனக்கு பாடலை பதிவு செய்ய ஒரு நல்லதொரு சாப்ட்வேர் தெரியவில்லை. நிழல் படிந்தது போல் சில இடம் என்றது எனக்கு தெரிந்தே இருந்தது. அது மிக த்தொலைவில் விளையாண்ட குழந்தைகளின் காட்சி , எடுத்தபின் தான் தெரிந்தது நிழல் விழுந்தது. காட்சி திரும்ப கிடைக்காது என்பதால் அதை இணைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் வந்தது அது எல்லா காட்சியை இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட வீடியோ சாப்ட்வேர் அப்படித்தான் இருமுறை காட்சிகளை காண்பிக்கிறது எப்போதுமே.. கவிதை எழுத்தாக வருவதால் காட்சிகளை மறுமுறை பார்க்க வசதியாக இருக்கட்டுமே என்று அப்படியே விட்டுவிட்டேன்.


அன்புடனின் இக்கவிதைப்போட்டி மிகசிறப்பான ஒன்று. நன்றாக நடந்தது. எல்லாருக்கும் அறிவிப்பு சென்று சேர்க்க எடுத்த முயற்சி ஆகட்டும் , அடிக்கடி மெயில் செய்து தகவல்களை தெரிவிப்பதில் ஆகட்டும் மிக சிறப்பான செயல்பாடுகள். மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். அதற்கான ஆலோசனை தரும் அளவு யோசனை என்னிடம் இல்லை. என்னைப்போன்ற முயற்சி செய்போர்களுக்கு இது ஒரு நல்லதொரு வாய்ப்பளித்தது. அன்புடன் குழுமேல்மேலும் வளர ....வாழ்க வளமுடன். நன்றி

24 comments:

கோபிநாத் said...

அடுத்து என்ன கதை!??

கோமதி அரசு said...

//அன்புடன் குழு மேல் மேலும் வளர
வாழ்க வளமுடன்//

இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

சந்தனமுல்லை said...

:-)அடுத்தது மெகா சீரியலா...?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அடுத்து என்ன கதை!??//
அதேதான் கோபிநாத் நானும் யோசிச்சிட்டிருக்கேன்.. :) ஆனா நிச்சயமா கதை தான் அடுத்தது எழுதனும்.. ஹாட்ரிக் :))
---------------------
\\கோமதி அரசு said...
//அன்புடன் குழு மேல் மேலும் வளர
வாழ்க வளமுடன்//

இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
//
நன்றி நன்றி ! :)

Anonymous said...

முத்தக்கா, இன்னைக்கு தான் பாக்கறேன். நல்லா இருக்கு. அடுத்தது என்ன கதை?

சென்ஷி said...

வாழ்த்துக்கள்!

(மங்கை அக்கா ஒரு சினிமா எடுத்தாங்களே. அது என்ன ஆச்சு)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி பாத்தீங்களா இப்ப மீள்பதிவாக்கியது நல்லதா போச்சு.. அடுத்தது என்ன எடுக்கலாம்..ஒரு டாக்குமெண்ட்ரிக்கு நல்ல ஐடியால்லாம் வந்திருக்கு ஆனா தைரியம் தான் வர மாட்டேங்குது .. களத்தில் இறங்க.. பார்க்கலாம் எப்பத்தான் ஆரம்பிக்கபோறேன்னு..

----------------------
மங்கை ஒரு நிறுவனத்தின் கீழ் இன்னோரு அமைப்பின் பணத்தில் எடுத்தாங்க அதனால் அதன் இணைய உரிமை வேற இடங்களில் சிக்கிக்கிச்சு போல.. சென்ஷி

☀நான் ஆதவன்☀ said...

இப்ப ப்ரசெண்ட் மட்டும். அப்புறம் பொறுமையா படிக்கிறேன்

குசும்பன் said...

ஆஹா உங்களுக்குள் ஒரு இயக்குனர் ஒளிஞ்சு இருக்கார் போல!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை .. தலைப்பு பாத்தீங்கள்ள - சிறுமுயற்சி.. நாங்க எல்லாத்தையும் சின்னதா தான் முயற்சி செய்வோமாக்கும்..’ மெகா’ ல்லாம் எங்க ? :)

இருந்தாலும் நீங்க பணம் தந்தா அதையும் எடுத்து ஒரு முயற்சி செய்துடுவேன்..

ஆயில்யன் said...

//:-)அடுத்தது மெகா சீரியலா...?///

நிறைய இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்! வாழ்த்துக்கள் !

மெகா சீரியலோ அல்லது வேறு எந்தவிதமான தொடர்களோ கொஞ்சம் சிரிப்பதற்கும் நிறைய சிந்திப்பதற்கும் மட்டும் வாய்ப்பிருத்தல் கட்டாயம் !

ஆயில்யன் said...

//குசும்பன் said...

ஆஹா உங்களுக்குள் ஒரு இயக்குனர் ஒளிஞ்சு இருக்கார் போல!//

ஆமாம் அக்கா ஆமாம்!

அவரை எப்படியாச்சும் வெளியில கொண்டுவந்துடுங்க!:)

அமுதா said...

வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

அழகிய கவிதை. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

சந்தனமுல்லை said...
:-)அடுத்தது மெகா சீரியலா...?
//

repeatu

Thekkikattan|தெகா said...

இது எப்போ நடந்தது? சொல்லவே இல்ல... முதல் முயற்சிங்கிறதாலே லூசுல விட்டுடுறேன் :) ...

எனக்கு ஒரு கவிஜா வந்திருக்கு அந்த தாத்தாக்களின் மாநாட்டு காட்சியைப் பார்த்தவுடன் ... :))

மங்கை said...

கலக்கல் தொடரட்டும்...வாழ்த்துக்கள்

சென்ஷி said...

/ மங்கை said...

கலக்கல் தொடரட்டும்...வாழ்த்துக்கள்//

மங்கை அக்கா இப்பத்தான் தூங்கி எழுந்து வந்த மாதிரி வாழ்த்துக்கள் சொல்றாங்க.

அக்கா இது மீள்பதிவு. இப்ப தொடரட்டும் போட்டா அடுத்த பதிவையும் மீள்பதிவாக்கிடப் போறாங்க :)

நசரேயன் said...

அடுத்த படத்துக்கு என்னை உதவி இயக்குனரா சேத்துகோங்க.. நானும் ரெண்டு மூனு கதை சொல்லி இருக்கேன்

சிங்கக்குட்டி said...

புதிய இயக்குனர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் , தெகா, மங்கை, அமுதா, கானா, உழவன், சிங்ககுட்டி நன்றிங்க..

------------------
நசரேயன் அடுத்த ப்ளைட்டை (சொந்தக்காசில்) பிடித்து வந்தீங்கன்னா .. டாக்குமெண்ட்ரி வேலைய ஆரம்பிச்சிரலாம்.. :)

சண்முகம் said...

#
என் கிட்ட கூட நல்ல லவ் சப்ஜக்ட் ஸ்டோரி ஒன்னு இருக்கு.
நல்ல கதை!??..
திரைக்கதை கூட நான் எழுதிடுறேன்.
நீங்க படத்த டைரக்ட் பண்ணா போதும்.
சென்ஷிய புரடியூசரா யூஸ் பண்ணிக்கலாம்.
உங்களுக்கு சென்ஷிய நல்ல சம்பளம் தரச்சொல்றேன். என் கதைய இயக்குறிங்களா? பிளீஷ்......

சண்முகம் said...

#
சொல்ல மறந்துட்டேன்,
கவிதை சூப்பர்....

sakthi said...

நல்லா இருக்கு நண்பரே..