ரொம்ப பயம்மா இருந்தது. ஊசிக்கு பயமில்லை. ஆனா வாய்க்குள்ள ஊசியா? அது எப்படி இருக்கும்? என்னால் முடியாத ஒன்றுக்காக மகளை மட்டும் எப்படி அழைத்துப்போனேன்? (அவளுக்கு பல்லை உள்புறமாக அமைப்பதற்கு நான்கு பற்களை எடுத்திருக்கிறோம்.) பயந்த அளவு இல்லை.. முதல் ஊசிக்கு கொஞ்சம் வலி இருந்தது. அடுத்த ஊசிகள் இறங்குவதே தெரியவில்லை. பல் எடுத்தபின்னும் தெரியவில்லை. எடுத்துவிட்டீர்களா என்ற என் ஆச்சரியத்தைப் பார்த்து மருத்துவருக்கு சிரிப்பு.
மரத்துப் போகவைத்து நமக்கு தேவையில்லாதவற்றை எடுப்பது என்பது எவ்வளவு வசதி. நம் மனதுகுள் இருந்து ரணமாக்கும் விசயங்களைக் கூட மரத்துப் போகவைக்க ஏதும் ஊசி உண்டா? வலியில்லாமல் எடுத்து எறிய...
உணர்வு வரும்போது இழப்பின் இடம் காலியாக இருக்கிறது. இரண்டு நாள் பெப்சியும் , ஐஸ்கிரீமும் வலியை மறக்க செய்தது.
அம்பிகா ஒரு தொடர்பதிவு எழுதச்சொன்னார்கள். ஆசைகள் கனவுகள் ..நான் என்ன படிக்க ஆசைப்பட்டேன்? பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன். மற்றதெல்லாம் என்னை குழப்பியது. போராடவேண்டி இருந்தது. ஓம் டாலர் டீச்சர் வகுப்பெடுக்கும் போது தூங்கும் தோழியை கிள்ளி எழுப்பிவிட்டேன்.’ எவ்வளவு நல்லா சொல்லித்தராங்க தூங்காதேடி’. நல்ல கல்லூரியில் படிக்கனும் என்பது கனவா இருந்தது. திருச்சியில் சீதாலக்ஷ்மியில் படிக்க ஆசைப்பட்டேன். எப்படியோ விண்ணப்பமெல்லாம் பூர்த்தி செய்து அனுப்பியாயிற்று.இடம் இருக்கிறது. ஆனால் தங்குமிடம் மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உறவினர் வீட்டிலிருந்தபடி போக வேண்டாம் என அட்மிசன் கிடைத்தபின் அம்மா திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.
கணினி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் தோழிகள் சிலர் கணினி எடுத்த போதும் நான் கெமிஸ்ட்ரியைத் தேர்ந்தெடுத்தேன். மேலே படிக்கமுடியவில்லை. வேறுஎன்ன டொனேசன் தான் அங்கே எல்லாம் .. இல்லைன்னா நல்ல மார்காவது வாங்கி இருக்கனும். நான் எந்த மெடலுமே வாங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று கல்லூரி போட்டியில் கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் .
அதற்கு பிறகும் ஆசை விட்டதா? பேஷன் டிசைன் படித்து தொழிலதிபர் ஆகனும் என்று கனவு . கல்லூரி முடித்தவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்குமென அறிந்து ஒரு தோழியின் உறவினரிடம் விசாரித்து வைத்திருந்தேன். சென்னை கோத்தாரி அகடமியில் விண்ணம் போட்டு , கிடைத்து ,அட்மிசனுக்கு வரச் சொல்லி இருந்தார்கள் . இம்முறை உறவினர் வீட்டில், சென்னையில், பெண் தனியாக சென்று வர இவ்வூர் வசதிப்படாது(!!!) என்றும்சொல்லிவிட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் வெளியிலும் தங்குமிடங்கள் இருப்பது தெரியாது. சிறிது வருடங்களுக்குப் பிறகு என் உறவுப்பெண்களே வெளியில் தங்குமிடத்தில் தங்கி வேலை , படிப்பு எல்லாம் செய்த போது தான் தெரிந்து கொண்டேன்.
தங்குமிடம் வேண்டும் என்பதை முதலிலேயே தேர்வு செய்யாமல் விட்டதற்கு இம்முறை என்னைத்தான் குறை கூறவேண்டும். அதற்காக அழுத கண்ணீரை கணக்கில் எடுக்கமுடியாது. அடுத்தவருடமும் முயற்சி செய்தேன். ஆனால் ஃப்ரஷர்ஷ்களைத்தான் எடுப்பார்களாக இருக்கும்.
எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) . என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம். ஒரு கட்டத்தில் நான் படிப்பு வேலை பற்றிய
கனவு காண்பதையே விட்டுவிட்டேன். வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.
தற்போது சில நண்பர்களின் உதவியால் இந்த ப்ளாக் உலகின் உதவியால் பல புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இணையத்தை சுற்றிவருவது எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அந்த பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்யச்சொன்னால் சிரமம் இல்லையே.. இணையதளங்களுக்கு எழுதித்தருகிற வேலை சில சமயம் செய்கிறேன். ஆல் இஸ் வெல் (? !)
மரத்துப் போகவைத்து நமக்கு தேவையில்லாதவற்றை எடுப்பது என்பது எவ்வளவு வசதி. நம் மனதுகுள் இருந்து ரணமாக்கும் விசயங்களைக் கூட மரத்துப் போகவைக்க ஏதும் ஊசி உண்டா? வலியில்லாமல் எடுத்து எறிய...
உணர்வு வரும்போது இழப்பின் இடம் காலியாக இருக்கிறது. இரண்டு நாள் பெப்சியும் , ஐஸ்கிரீமும் வலியை மறக்க செய்தது.
அம்பிகா ஒரு தொடர்பதிவு எழுதச்சொன்னார்கள். ஆசைகள் கனவுகள் ..நான் என்ன படிக்க ஆசைப்பட்டேன்? பதினோராம் வகுப்பில் பாட்டனி வகுப்பில் ஆர்வமாய் இருந்தேன். மற்றதெல்லாம் என்னை குழப்பியது. போராடவேண்டி இருந்தது. ஓம் டாலர் டீச்சர் வகுப்பெடுக்கும் போது தூங்கும் தோழியை கிள்ளி எழுப்பிவிட்டேன்.’ எவ்வளவு நல்லா சொல்லித்தராங்க தூங்காதேடி’. நல்ல கல்லூரியில் படிக்கனும் என்பது கனவா இருந்தது. திருச்சியில் சீதாலக்ஷ்மியில் படிக்க ஆசைப்பட்டேன். எப்படியோ விண்ணப்பமெல்லாம் பூர்த்தி செய்து அனுப்பியாயிற்று.இடம் இருக்கிறது. ஆனால் தங்குமிடம் மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உறவினர் வீட்டிலிருந்தபடி போக வேண்டாம் என அட்மிசன் கிடைத்தபின் அம்மா திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.
கணினி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. என் தோழிகள் சிலர் கணினி எடுத்த போதும் நான் கெமிஸ்ட்ரியைத் தேர்ந்தெடுத்தேன். மேலே படிக்கமுடியவில்லை. வேறுஎன்ன டொனேசன் தான் அங்கே எல்லாம் .. இல்லைன்னா நல்ல மார்காவது வாங்கி இருக்கனும். நான் எந்த மெடலுமே வாங்கவில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று கல்லூரி போட்டியில் கம்பிவாத்தியப்பிரிவில் (வயலின்) யாருமே போட்டிக்கு இல்லாததால் கிடைத்த மெடலை ரொம்ப நாளாக வைத்திருந்தேன் .
அதற்கு பிறகும் ஆசை விட்டதா? பேஷன் டிசைன் படித்து தொழிலதிபர் ஆகனும் என்று கனவு . கல்லூரி முடித்தவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்குமென அறிந்து ஒரு தோழியின் உறவினரிடம் விசாரித்து வைத்திருந்தேன். சென்னை கோத்தாரி அகடமியில் விண்ணம் போட்டு , கிடைத்து ,அட்மிசனுக்கு வரச் சொல்லி இருந்தார்கள் . இம்முறை உறவினர் வீட்டில், சென்னையில், பெண் தனியாக சென்று வர இவ்வூர் வசதிப்படாது(!!!) என்றும்சொல்லிவிட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் வெளியிலும் தங்குமிடங்கள் இருப்பது தெரியாது. சிறிது வருடங்களுக்குப் பிறகு என் உறவுப்பெண்களே வெளியில் தங்குமிடத்தில் தங்கி வேலை , படிப்பு எல்லாம் செய்த போது தான் தெரிந்து கொண்டேன்.
தங்குமிடம் வேண்டும் என்பதை முதலிலேயே தேர்வு செய்யாமல் விட்டதற்கு இம்முறை என்னைத்தான் குறை கூறவேண்டும். அதற்காக அழுத கண்ணீரை கணக்கில் எடுக்கமுடியாது. அடுத்தவருடமும் முயற்சி செய்தேன். ஆனால் ஃப்ரஷர்ஷ்களைத்தான் எடுப்பார்களாக இருக்கும்.
எப்படியோ பெண் என்பதால் ஏற்பட இருந்த பலவிபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்( !!!!!!!!!) . என் இழப்புகளுக்கும் என் தெரிவுகளுக்கும், என் தெளிவின்மை தான் காரணம். ஒரு கட்டத்தில் நான் படிப்பு வேலை பற்றிய
கனவு காண்பதையே விட்டுவிட்டேன். வாழ்க்கை என்பது அது பாட்டிலும் போய்க்கொண்டிருக்கிறது.
தற்போது சில நண்பர்களின் உதவியால் இந்த ப்ளாக் உலகின் உதவியால் பல புதிய விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இணையத்தை சுற்றிவருவது எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அந்த பிடித்தமான வேலையையே வேலையாகச் செய்யச்சொன்னால் சிரமம் இல்லையே.. இணையதளங்களுக்கு எழுதித்தருகிற வேலை சில சமயம் செய்கிறேன். ஆல் இஸ் வெல் (? !)