December 21, 2011

எண்ணப்பின்னல்கள்


எண்ணப்பின்னல்கள்
பின்னலும் பிரித்தலும்
பிரித்தலும் பின்னலுமாய்

பின்னிக்கொண்ட மகிழ்ச்சிகள்
மகிழ்விழை இழைந்தோர் நிலையும் - நீ
நிலைத்த நெஞ்சில் ஈரமுமாய்

ஈரவிழிச் சொற்கள்
சொல்லிழந்தோர்ப் புள்ளியில் மலரவும்
மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்
முதல்முறையாக பின்னல்கோலாட்டம் கண்டபோது தோன்றியது முதல் மூன்றுவரிகள்

13 comments:

pudugaithendral said...

நல்லா இருக்கு.

இந்த பின்னல் கோலாட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்

ராமலக்ஷ்மி said...

தோன்றிய வரிகளை அந்தாதி வடிவில் தொடர்ந்தமை நன்று:)!

கோமதி அரசு said...

மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்.//

கவிதை நன்றாக இருக்கிறது.

ராதா கல்யாணத்தில் இநத கோலாட்டம் நடக்கும்.

ADHI VENKAT said...

அழகா இருக்குங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு... சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது விழாக்களில் அக்கா ஆடியிருக்கிறார்.... அது நினைவுக்கு வந்தது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தென்றல்.. நன்றிப்பா :)

ராமலக்‌ஷ்மி நன்றிப்பா :)

கோமதிம்மா நன்றி எனக்கு நினைவே இல்லை பார்த்தமாதிரி :)

ஆதி நன்றீங்க:)

வெங்கட் நன்றிங்க :)

Asiya Omar said...

மிக்க அருமை.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

முத்தக்கா...சந்தோஷமான மனம் நிறைந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆசியா
ஹேமா
நன்றி நன்றி .. உங்களுக்கும் புது ஆண்டு சிறக்க வாழ்த்துகள்..:)

பாச மலர் / Paasa Malar said...

எண்ணப்பின்னல் அந்தாதி நன்றாக இருக்கிறது...

புத்தாண்டு வாழ்த்துகள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களுக்கும் வாழ்த்துகள் பாசமலர்..:)

Chitra said...

nice.

HAPPY NEW YEAR!

HAPPY PONGAL!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்ரா மகிழ்ச்சி வாங்க..
உங்களுக்கும் வாழ்த்துகள் ப்பா..:)