August 22, 2012

இயல்

ஆர்க்கும் கரையிலிருந்து
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை

மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை 
பழகவிடாத ஒளிக்கத்திகள்

இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்

---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின் 
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ 
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று 
பட்டை உரித்தார் 
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?