September 17, 2007

நாட்டிய நாடகம் 'மித்தாலஜீஸ் ரிடோல்ட்"

ரசஜா ஃபவுண்டேஷன் ஜயா அப்பாசாமியின் பல விதமான பெண் கடவுள்களின் ஓவியத்தின்
அடிப்படையில் சந்த்யா ராமன் மற்றும் ரத்னா ராமன் இவர்களின் முனைப்பில் , நடனமணி பத்மஸ்ரீகீதா சந்திரன் ம்ற்றும் ராஷ்மி வைத்தியலிங்கம் இவர்களால் நடத்தப்பட்ட நாட்டிய நாடகம் 'மித்தாலஜி ரிடோல்ட்" தில்லியில் காமினி ஆடிட்டோரியத்தில் 15 .9.2007 நடந்தது.
அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பகிர்வு இங்கே.

ரேணுகாசவுத்ரி முன்னுரையில்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பின்னாலும் பெண்களுக்கான உரிமைக்காக பேசவேண்டி இருக்கிறது அதற்காக ஆண்களே உங்களை நாங்கள் வெறுக்கிறோம் என்று நினைக்காதீர்கள். எங்களின் ஒரு பக்கத்துணையாக நீங்கள் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம் என்று நகைச்சுவை துணுக்குகளோடு உரையாற்றினார்.

சிவன் ,பிரம்மன் , விஷ்ணு என்று புராணங்கள் எல்லாம் புகழ்வது முன்னிருத்துவதும் ஆண்கடவுள்களைத்தான். இவர்களின் நாட்டியத்தில் பெண் கடவுள் களை முன்னிறுத்தி யதாக அமைத்திருந்தார்கள்.

சந்த்யா ராமனின் குறிப்பில்... the story we have put together here is about the origins of these gooddesses. Our attempt is not to take oru viewers into a space of ritulaized worship and adoration , but to imaginatively visualize these goodesses as symbols that have liberated m renewed and celebrated female energy from the beginnings of time - all the way to now.

அம்மாவாரா என்கிற ஒரு பெண்ணிடம் இருந்து உலகம் வந்ததாக கற்பனை செய்யப்பட்டு... ஐந்து பூதங்களையும் பெண்களாக உருவகப்படுத்தி இருந்தார்கள். இருளிலிருந்து முதலில் நீர் உலகமெங்கும் நிறைந்திருந்த காட்சியை அதிருந்து ஐந்து பூதங்களான நீர் நில நெருப்பு வான பூமி பெண்கள் எழுந்து வ்ந்து ஒவ்வொருவரும் அவரவரின் இயல்புகளை நாட்டியத்தில் உணர்ந்த்தினர்.


காட்சியும் இசையும் மிக அருமையாக பொருந்தி அனைவரையும் ஒரு புது உலகத்திற்கு அழைத்து சென்றது. அம்மாவாரா நீ எங்கே எனக் கேட்டு அரற்றும் பெண் முன் தேவி தோன்று கிறாள். பின்னாலேயே எந்த தேவியோ அந்த தேவியின் ஓவியம் சிறியதாக இறங்குறது . ஒவ்வொரு தேவியாக அவள் தோன்றுவதையும் அவள் இயல்புகளை கூறுவதும் என்று அமைத்திருந்தார்கள்.

ஹூ ஆர் யூ என்றதும் நான் தான் உஷா ... என் தோழி உஷாவா இல்லையில்லை யார் நீ ? நான் தான் ஒளியின் கடவுள் உஷா .ஆ அது சூரியன் அல்லவா நீ தான் ஒளியின் க்டவுள் என்கிறாயே எங்கே நிரூபி என்றதும் பின்னால் ஓவியத்தில் குதிரை பூட்டிய வண்டியில் இருக்கும் தேவியைப்போல்வே கற்பனை குதிரை யை ஓட்டியபடி கீதா உலகெங்கும் ஒளி நிரப்பும் காட்சி கண் முன் உண்மையிலேயே நடப்பது போன்ற காட்சியாக விரிகிறது.


அனைவருக்கும் உணவளித்து அரவணைக்கும் அன்னபூரணியாக, வெறுப்பு இல்லாத உலகமாக அன்பும் காதலும் நிரம்பிய உலகமாகச் செய்யும் ரதி தேவியாக , அறியாமை இருள் போக்கும் வாக்குவாணியாக , என்று ஒவ்வொரு காட்சியாக விரிகிறது. இன்றைய பெண் கருக்கொலைகளையும் காட்சியாக்கி இருக்கிறார்கள்.


எத்தனையோ பெண் குழந்தைகளை கருவிலேயே கொன்று குவித்த அன்மைக்கால நிகழ்ச்சியை விவரித்து தேவியின் கோபத்தையும் மீண்டும் அவள் வரவேண்டும் என்று
"" எங்கிருக்கிறாய் அம்மாவாரா! வா!! எங்கும் தலைவிரித்தாடும் அறியாமையும் , வெறுப்பும் , ஏழ்மையும் மறைய நீ வா!! "" என்று அழுது புலம்பும் பெண் முன் தேவி மீண்டும் தோன்றி ""நான் எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கிறேன்"" என்கிறாள். இந்த விவேகா இந்த ஸ்வேதா ..போன்ற எல்லா பெண்களுக்குள்ளும் இருப்பது என் சக்தி தான் உணர்ந்து கொள்ளுங்கள் "
நானே அவள் அவளே நான் நான் யோசிக்கலாம் நான் எனக்கான முடிவை நானே எடுக்கலாம் நாம் யோசிக்கலாம் நாம் நமக்கான முடிவை எடுக்கலாம் என்ற பாடலுடன் முடிவடைந்தது. (we can dream we can think we can take our own decision )

கீதா சந்திரன் தில்லி டைம்ஸுக்கு தந்திருக்கும் சின்ன பேட்டி ... idont want to be called a femisit. often depcts women and their problems through dance but feels that the feminist tag puts me in a minority. mythologies retold is fictional account of a search for the feminine energy at the beginning of human histroy. Most myths speak of the male trinity of Bramha , Vishnu and Mahesh. but what about the role of the gooddessses?" . it s not just the myths - even today , goddesses are sacrificed . " It happeens when the female foetus is sacrificed in the womb , or when parliament refuses to give 33 per cent reservation to women . theis fictionalised account is a stinging critique of our times. this is an attempt ot bring to the youth an awerness of the absence of goddesses.

September 13, 2007

கோபால்சாமி பெட்டா மைசூர்

மைசூருக்கு பிறகு நஞ்சன்கோடு கோயிலுக்கு போனோம்... அங்கிருந்து பாந்திப்பூர் பாதையில்NH212 hangala village ஹங்காலா கிராமத்தில் ஒரு பெயர்பலகை வலது பக்கம் திரும்ப ஹிமாடா கோபால் சாமி பெட்டா என்று இருக்கும் பாதையில் சென்றால் வனத்துறை சேர்ந்த சின்ன குன்று. பாதை சிறிது கடினமானதாக இருந்ததாக நினைவு. 45 டிகிரி ஏற்றமாகவும் சில கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டதாக இருந்தது. ஆனால் அழகான குளிர்ச்சியான இடம். அடிவாரத்தில் வனத்துறையினருக்கு பணம் கட்டிவிட்டு தொடர்ந்தோம் .



பாந்திப்பூர் வனச்சரணாலயத்தின் முழுமையையும் இங்கிருந்து கண்காணிக்கமுடியுமாம்.1454 மீ உயரம் கொண்டது. எப்போதும் பனி(மிஸ்ட்) படர்ந்த் மாதிரியான குளிரிச்சி யுடன் இருப்பதால் தான் ஹிமாடா என்று அழைக்கப்படுவதாக தோன்றுகிறது.
மேலே சின்னதாக கிருஷ்ணர் கோயில். நாங்கள் போன நேரத்திற்கு எங்களுக்கு முன்னர் இரு குடும்பங்கள் இருந்தார்கள். அமைதியான இடம் .சன்னதில் போட்டு இருந்த திரையில் நெல்லை லாலா மிட்டாய் கடை என்று தமிழில் எழுத்து. உள்ளே அழைத்து கன்னடத்தில் எல்லாருக்கும் கதை சொன்ன குருக்கள் எல்லாருக்கும் துளசி தீர்த்தம் குடுத்து பூசை காண்பித்தார்.




கிருஷ்ணன் புடைவை அணிந்த மாத்ரி தோற்றம். அழகான மரம் கல்லால் இலைகளும் கிளைகளும் இடைவெளியோட ரொம்ப அருமையான சிற்பம். அவர் கதை சொன்னபடியே அந்த கிருஷ்ணனின் மேலிருந்த மரத்தின் மேல் கைவைத்தார் அங்கே ஒரு சிறு பள்ளம் . அதில் இருந்த தண்ணீரை எல்லார் மேலும் தெளித்தார். வெளியே வந்து உட்கார்ந்து இருந்த போது அவர் யாரிடமோ தமிழில் பேசினார் அப்போ அவரிடம் தமிழில் அந்த கதையை கேட்கலாமே என்று காத்திருந்தேன்.ஆனால் இப்போது கேட்ட கதை முழுதுமாக நினைவில் இல்லை மறந்து விட்டது.


மீதி வந்திருந்த குடும்பங்கள் கும்பிட்டு முடித்து அவர் அமரும் போது போய் கேட்டேன் . கிருஷ்ணனின் மேலே அந்த மரத்தில் இருந்த அந்த தண்ணீர்
எப்படி அங்கே வருகிறது என்பது தெரியாது எப்போதும் பனி நீர் அங்கே இருக்கும் என்றார். நானும் சும்மா இருக்காமல் மேலே கோபுரத்தில் எதாவ்து துளை இருக்கிறதோ என்றேன் கோபப்படாமல் இல்லையம்மா என்றார்... பனி நீர் என்றதும் ஒரு வேளை பனி தான் சேர்ந்து இருக்கிறதோ என்று நினைத்தேன்.


அந்த மலையை சுற்றியும் எத்தனையோ தீர்த்தம் இருப்பதாக சொன்னார் சரியாக இப்போது நினைவு இல்லை 31 இல்லனா 71 இப்படி..திருப்பதியில் இருக்கும் பாபம் தீர்க்க்கும் தீர்த்தத்தின் ஆரம்பம் இங்கு தான் என்றும் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் கீழே ஒரு பாறை இருப்பதாகவும் அதில் ஒரு பூஜை செய்தால் குழந்தை பிறக்காதவர்களுக்கு பிறக்கும் என்றும் அதற்கு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். லாலா மிட்டாய்காரர் குடும்பத்துடன் அடிக்கடி அங்கு வருவாராம்.


காகமே அந்த மலைப்பகுதியில் வராதாம். அந்த கதையும் மறந்துடுச்சு அப்பறமா கேட்டு பின்னூட்டத்தில் இடுகிறேன். வெளியே வந்ததும் உண்மைதானா என்று சுற்றி முற்றி தேடினோம் தன்னிச்சையாக என்ன தான் இருந்தாலும் படித்தால் நாமெல்லாம் கடவுளை நம்புவது குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டோம். பஸ் நிறைய ஆட்களும் சாப்பாட்டு டிரம் களும் வந்து இறங்கியது.


அங்கிருந்து மலையின் அழகு ரொம்பவும் அருமை.. இடத்தைவிட்டு வரவே மனமில்லை நாமும் சாப்பாடு கட்டி வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். ஆனா மக்களே சாப்பிட்டுட்டு அழகான இடத்தைக் குப்பையாக்கிடாதீங்கப்பா !!!


சற்று தொலைவில் வனத்துறையினர் கட்டும் கட்டிடம். பாதி எழும்பி இருந்தது . கீழ் பகுதியில் வெறும் தாங்கும் தூண்களும் மேலே இரு காட்டேஜ் போல இருந்தது. டூரிஸ்ட் இடமாக மாற்றவேண்டும் என்பதற்காக இருக்குமோ என்னவோ அதை விசாரிக்கவில்லை.. பைக்கிலேயே கூட ஒரு குடும்பம் வந்திருந்தது. .

September 8, 2007

அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?


அன்பைப்போன்றதொரு
கெடுதியான விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
புருவம் நெறித்து ஏனென்கிறாய்?
அன்போடே சேர்ந்து வருகிறது ஆசை.
ஆசையோடே சேர்ந்து வருகிறது பேராசை.
பேராசை கொண்டு வருகிறது ஏமாற்றம்.
ஏமாற்றம் கொண்டு வருகிறது சோகம்.
'ம்'என்கிறாய் மறுபேச்சின்றி.
அன்பைப்போன்றதொரு
அற்புத விசயமில்லை இவ்வுலகில்
என்கிறேன்.
அப்படியா வியந்தபடி வினவுகிறாய்?
அடக்கமுடியாத கோபத்துடன் நான் -
சரிதான் உனக்கு என் மேல் அன்பே இல்லை.
உண்மையில்
அன்பிருந்தால் இப்படி கேட்பாயா?

September 5, 2007

மாடர்ன் கிருஷ்ணரும் தில்லி கிருஷ்ணஜெயந்தியும்

தில்லியில் கிருஷ்ணஜெயந்தி அன்று இரவு குழந்தைகள் கிருஷ்ணனின் பர்த்டேயை அவங்க பர்த்டேயை விட சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முப்பையில் இருந்து வந்த ஒர் பெண் வருடா வருடம் இப்படி கொண்டாடுவீங்களா என்னையும் இனிமே சேத்துக்கோங்களேன் என்று கேட்டாள் ...அப்ப மும்பையில் இப்படி பழக்கமில்லை போல என்று நினைத்துக் கொண்டேன்..



அவரவர் வீட்டிலிருந்து கிருஷ்ணனின் வித விதமான பொம்மைகளை கொண்டுவந்து சாலையோரத்தில் செங்கல்லால் வேலி போல கட்டி அதனுள் மண் நிரப்பி ஒரு ஓரத்தில் மலை ...ஆறு ஓடுவது போல என்று நம் கொலுவில் பக்கத்தில் ஊர் அமைப்போமே அது போல செய்து கோயில் கட்டுவார்கள்.


இரவாக இரவாக மெழுகுவத்தி ஏற்றி வரும் போவோர்களுக்கு பிரசாதம் தந்து உற்சாகமடைவார்கள். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரி இடமும் அலங்காரமும் அதிகமாகும்..ஒவ்வொரு வரும் விதவிதமான அலங்காரங்களுடனும் பவனி வருவார்கள்..



பெரிவர்கள் சாமி கும்பிட்டபின் ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கோயிலில் தருவது போலவே காணிக்கையும் தருவார்கள் அது குழந்தைகளின் சேமிப்பில் சேர்ந்து விடும்... பலர் வந்து அவர்களின் வித்தியாசமான அலங்காரமான கோயிலை பாராட்டும் போது அவர்கள் பெருமிதமாக உணர்வார்கள் .



நேற்றைய கொண்டாட்டத்தின் சில புகைப்படங்கள் இங்கே.....












கீழ் வீடாக இருப்பவர்கள் கரெண்ட் கனெக்ஷன் எடுத்து லைட் போட்டிருக்கிறார்கள்.


கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு நடந்த ஒரு பேன்சி டிரஸ் போட்டியில் சின்ன கிருஷ்ணன் செய்த ஒரு குறும்பைக் கேளுங்கள் .3 லிருந்து 5 வயதுக்கான குழுவைச்சேர்ந்த பையன் அவன் மேடையில் ஏறவேண்டுமென்றால் ஃபோனைக் குடு என்று அவன் அம்மாவிடம் வாங்கி வைத்திருந்திருக்கிறான் . மேடை ஏறும்போது "சரி அதைக்குடுத்துவிட்டு புல்லாங்குழலை வாங்கிக்கொள்ளடா" என்றால் "அது வேணாம் போ" என்று மேடையில் மைக்கில் சொல்லிவிட்டு போன் நம்பர்களை அழுத்திக்கொண்டே கொஞ்ச நேரம் மேடையில் நின்று விட்டு வந்து விட்டான்.


ஆமாம் மாடர்ன் கிருஷ்ணன் இல்லையா..இன்னும் எத்தனை நாள் தான் ராதையை புல்லாங்குழல் ஊதி அழைப்பது. இப்போது தான் மொபைல் வந்து விட்டதே...."ஹலோ ராதா ஐ யம் வெயிட்டிங் ஃபார் யூ" ன்னா , "எங்கே இருக்கிறாயென்று " கேட்டு விட்டு அவளும் தேடாமல் கொள்ளாமல் நேராக வந்துவிடப்போகிறாள்...