
தேர்தல் நேரத்து வழக்கமாக தொலைக்காட்சியில் ப்ரச்சாரக்கூட்டங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஜே வின் பேச்சைக் கொஞ்ச நேரம் கேட்டபின் மகளுக்கு எதோ சந்தேகம்..
அம்மா இவங்க யாரு பேரு மறந்துடுச்சு..
இவங்க தான் ஜெயலலிதா பழய முதலமைச்சர்.
சரி இவங்க யாரை இப்படி திட்டிக்கிட்டிருக்காங்க?
இப்பத்தைய முதலமைச்சரை..
ஏன் திட்டறாங்க?
தேர்தல்ல்ன்னா அப்படித்தான் .. இன்னன்ன செய்வோம் இன்னன்னத்துக்காக எனக்கு ஓட்டுபோடுங்கன்னு எல்லாம் இப்ப கேட்பதில்லைம்மா இதான் ட்ரெண்ட்..
பள்ளியில் எர்த்டே கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்த அன்று சொல்கிறாள்...
"அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)
தில்லியில் பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லியிருந்தும் பல இடங்களில் இன்னமும் அதே பழக்கம்தான் இருக்கிறது என்றாலும் மக்கள் அதிகம் துணிப்பைகளுடன் பார்க்க முடிகிறது. வழக்கமாக வாங்கும் மளிகைக்கடையில் ப்ரவுன் கவர் கொடுக்கிறார்கள்.. வீட்டிலிருந்து பை கொண்டுவந்தால் நேராக அதிலேயே வாங்கிக்கொள்ளலாம்.
அரசின் காய்கறிக்கடையான சஃபலுக்கு சென்றிருந்தேன். அவரசரத்திற்கு நாலு தக்காளி தேவை.. கைகளிலேயே எடுத்துச் சென்றுவிடலாம் கார் அருகில் தானே என்று நினைத்தேன்.அதிகப்படியாக மாம்பழங்களையும் வாங்கி விட்டேன். வெளியே சென்றுவிட்டு திடீரென்று நினைத்துக்கொண்டு சஃபலுக்கு சென்றதால் பை கொண்டு செல்லவில்லை. கடைக்காரப் பையன் ஒரு பையைக் காட்டி 20 ரூ தான் வேண்டுமா என்றான்.. இது எதுக்கு ஒரு நாள் கூத்துக்கு என்று வாய் திறப்பதற்குள்.. இது திருப்பி குடுத்தால் நாங்க 20 ரூபாயைத்தந்துவிடுவோம் என்றான். ஆகா என்று வாங்கிக்கொண்டுவந்தேன்.. நல்ல ஐடியா தானே..

பத்திரமாக எடுத்துவைத்து அடுத்த வாரத்திலேயே அந்த பக்கம் போகும் போது கொடுத்துவிட்டு 20 ரூபாய் வாங்கிட்டோம்ல..
(ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டு வாரசந்தையில் காய்கறி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
பயன்படுத்தி பழசாக்கிட்டு சிறிது நாள் கழித்து எல்லாம் குடுக்காதீங்க மக்களே!!..)
இன்னைக்கு கூகிளில் படம் எர்த்டே... அதான் இந்த பதிவு..