Showing posts with label டேக். Show all posts
Showing posts with label டேக். Show all posts

April 5, 2007

இன்றைக்கு என்ன கிழமை

சில சமயம் இன்னைக்கு என்ன கிழமை ன்னு மறந்து போவதுண்டு .இங்க அபி அப்பா எனக்கு அனுப்பிய கமெண்ட் ல இருந்த விஷயத்த பாருங்க.

""நேத்து காலை எழுந்திருக்கும் போதே இங்க துபாய்ல மழை வரும் போல இருந்துது. நான் வியாழக்கிழமைன்னு நெனச்சுகிட்டு(இங்கு வெள்ளி லீவ்) வீக் எண்ட்தானேன்னு ஜாலியா ஆபீஸ் போய், தமிழ்மணத்துல பூந்துகிட்டேன். ஒரு ஆணி கூட புடுங்கலை. ஜாலியா ஸ்டார் பதிவர் ஜெஸீலா பதிவுல போய் லந்து பண்ணிகிட்டு இருந்தேன். அதோட வீட்டுக்கு வந்து நாளை லீவ்ன்னு நெனச்சுகிட்டு ஜாலியா தூங்கிபோயிட்டேன்.காலைல ஆபீஸ்ல இருந்து போன்"என்ன வரலியா, லீவான்னு" சரி வெள்ளி கிழமை கூட ஆணியான்னு நெனச்சுகிட்டு கேசுவல் ட்ரஸ்ல ஆபீசுக்கு வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லாரும் பிரசண்ட், அப்பகூட என்னது எல்லாருக்கும் ஆணி போலன்னு நெனச்சுகிட்டேன். சற்று முன்புதான் இன்னிக்கு வியாழன்ன்னு த்ரிஞ்சுது. ஆஹா பர்முடாஸ்ல வந்துட்டோமேன்னு என் கேபின் விட்டு வெளியே வரவேயில்லை. அதனால இன்னிக்கும் தமிழ்மணம் தான் கதி. இது போல யாருக்காவது எப்பவாவது நடந்திருக்கா? என்னைப்போல லூசு யாரவது உண்டா? சொல்லுங்கப்பா:-) ""

இத பதிவா போட உரிமை வாங்கி இருக்கேன் அவர்கிட்ட இருந்து.

கிழமை மறந்து போவது நிறைய நடக்கும்.. வெள்ளிக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்க்ன்னா ஞாயிற்றுக்கிழமைய திங்களா நினைக்கறது ...
வியாழக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்கன்னா வெள்ளிக்கிழமைய சனிக்கிழமையா நினைச்சுட்டு பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பனுமே வீட்டுக்காரர் ஆபீஸ் போனுமேன்னு இல்லாம தூங்கிட்டு இருப்பேன்.


எனக்கு இப்படி மட்டுமில்ல ரொம்ப நாள் லீவ் விட்டு பள்ளிக்கூடம் திறக்கற அன்னைக்கு பாதிவழியில் அதே கலர் சீருடை எங்காவது தெரியலன்னா
இன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ

ஒரு முறை எங்க மாமா குடும்பம் சுத்திப் பார்க்க வந்திருந்தாங்க அவங்களுக்கு சுற்றுலா பஸ்ஸில் புக் செய்து வைத்திருந்தோம்.
காலையில் இட்லி செய்து சப்பாத்தி செய்துன்னு 4 மணிக்கு எந்திரிச்சு பிள்ளைங்கள தயார் செய்து 9 மணிக்கு கடை வாசலில் போய் உட்கார்ந்தா வண்டி வரவே இல்லை. திங்கள் கடையெல்லாம் வேற லீவ் எங்க விசாரிக்க , போன் செய்து தலைமை ஆபீஸ் ல கேட்டா ராத்திரி ஒன்பதுங்கறாங்க.

எங்க வீட்டுல இன்னோருத்தங்களுக்கு நடந்த கதை இன்னொரு விதம் . ப்ளைட் மதியம் 1 மணிக்குன்னு பேக் செஞ்சுட்டு ஆமா கரெக்டா கிளம்பிருமான்னு செக் செய்தவங்களுக்கு கிடைச்ச பதில் என்ன தெரியுமா?
"கரெக்டா போய் சேர்ந்துருச்சேங்க.."
ப்ளைட் ராத்திரி ஒரு மணிக்கு இந்நேரம் ப்ளைட் லேண்ட் ஆகி எல்லாரும் வீடே போய் சேர்ந்திருப்பாங்கன்னா எப்படி இருக்கும்.


இப்படி கதை இருந்தா எழுதுங்கப்பா யாராச்சும்......டேக் எல்லாருக்கும் பொது .

March 22, 2007

சே இதெல்லாம் நல்லவா இருக்கு -5

சுடர் விளையாடும் போது நப்பாசை இருந்தது நமக்கு கொடுக்கமாட்டாங்களான்னு ...ஆனா இந்த வயர்டு விளையாட்டு
வேணாமே நமக்குன்னு இருந்தது. நாகை சிவா மூலமா வந்துடுச்சே என்கிட்டயும் . சொல்லறேன் . என்னோட பதிவுல நானே என்னப்பத்தி போட்டுக்
கொடுக்கற மாதிரி எழுதறது இது தான் முதல்.
வீடு சுத்தம் பண்ணறது , அப்படின்னதும் சுத்தம் பண்ணிகிட்டே இருப்பனோன்னு நினைச்சீங்கன்னா தப்பு... எப்பவும் வீட்ட துடைச்சு சுத்தமா வச்சுக்கறவங்களப் பாத்து அவங்களுக்கு
சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கற வியாதி இருக்கோன்னு கேக்கறவ நான். நானும் செய்வேன் ஆனா ஒரேடியா பிசாசு மாதிரி மேலே கீழே எல்லாத்தையும் எடுத்து துடைச்சு சேஞ்சுக்கு வேற இடம் மாத்தி வச்சுன்னு அல்லோல கல்லோலப் படுத்துவேன். அன்னைக்கெல்லாம் எல்லாரும் ஆகா இவளல்லவோ பெண் அப்படிங்கற மாதிரி நடப்பேன் . எப்படி என் திறமை அப்படின்னு கேட்டு பாராட்டு வாங்கிப்பேன். இல்லாட்டி
சாப்பிட்ட தட்டு ..பூஸ்ட் குடிச்ச டம்ளர் வரை பக்கத்துலயே வச்சுட்டு அப்படியே உட்கார்ந்தும் இருப்பேன். ஆனா தினமும் நீட்டா வைக்கறது , எடுத்த இடத்தில் திருப்ப வைக்கறது இதெல்லாம் பழக்கமே இல்லை...பழக சொல்லி சொல்லறவங்க
பேச்சை கேட்கற பழக்கமும் இல்லை. அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான்னு திருப்ப கேட்பேன். கஷ்டம்.


பேசிக்கிட்டே இருக்கறது...ஒரு நாலு பேர் கூட்டமா என் கூட இருந்தா நான் தான் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பப்ப இடையில் யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்கை. அப்புறம் தனியா இருக்கும் போது நினைச்சுப்பேன். சே இது எல்லாம் நல்லாவ இருக்கு . நாளைலேர்ந்து நாம கேக்கனும் மத்தவங்க பேசணும்..ஆனா முடியாது . கல்யாண வீடு நாலு மனுசங்க பேச கிடைச்சா [ உண்மையில் கேட்க கிடைச்சான்னு தான் இருக்கனும் ] குரல் பெரிதாகி கதைஅடிச்சு கதை அடிச்சு தொண்டை கட்டி
பேசமுடியா அடுத்த ரெண்டு நாள் சைகை பாஷயில் பேசுவேன். முன்னாடியே யாராவது நிறைய பேசுற போல நாளைக்கு என்ன மௌனவிரதமான்னு கேட்டு
கோடி காட்டினாலும் ...இப்படி சேருர சமயத்துல இதெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு பேசிடறது. அடுத்த நாள் எல்லாரும் அப்பாடா தொல்லை விட்டுதுன்னு இருப்பாங்க. ஆர்வக்கோளாறு இருக்கறவங்க , உப்பு போட்டு கொப்பளியேன் சரியாகிடும்ன்னு அட்வைச் பண்ணுவாங்க..எதுக்கு திருப்பி கதை கேட்கவா ...ஆனா நாம தான் வித்தியாசமான ஆள் ஆச்சே உப்பு தண்ணி கொப்பளிச்சேனோ ஒத்துக்கவே ஒத்துக்காது அப்பறம் ம்...ஆங் கூட சொல்லமுடியாத அளவு ஆகிடும். அப்படியே பேசாம சைகை காட்டிட்டு இருந்தா அடுத்த நாள் சரியாகிடும்.



சாப்பாடு .. இது ஒரு கடமை மாதிரி சமைக்கறதோ சாப்பிடறதோ ரெண்டுமே தான்.
முதல்ல சாப்பிடறது சொல்லறேனே ...சின்ன வயசில எல்லாரும் என்ன சாப்பிட்டன்னு கேட்டா தண்ணிக் குடிச்சேன்னு சொல்லுவேனாம். நிஜத்தண்ணி தான். தண்ணிக் குடிச்சே பேசுவாப்பா இவன்னு சொல்லுவாங்க.நான் பால் குடிக்கறேன், இட்லி சாப்பிடறேன்னா ஊருக்கே தெரியும் . கத்தி அழுது அட்டகாசம் செய்து தான் எதுவுமே. காலேஜ் படிக்கும் போதும் அம்மா பால் டம்ளரைக் கொண்டுவந்து கொடுப்பாங்க அங்க வைங்கன்னு சொல்லிட்டு மறந்துடுவேன் ஆறி ஆவலாப்போனப்பறம் அம்மா இன்னும் குடிக்கலயான்னப்பறம் அப்படியே ஊத்திக்குவேன். சில சமயம் அவங்க பாக்கலன்னா குடிக்காம காலேஜுக்கும் போயிடுவேன்.சாயங்காலம் திட்டு விழும் . அப்படியே வயிறு சுருங்கிப்போச்சு. பசின்னா என்னன்னு தெரியாது.பையன் வயத்துல இருந்தப்ப தவிர அப்ப மட்டும் கடோத்கஜன் மாதிரி அடுத்து அடுத்து ன்னு உள்ள தள்ளினேன். எப்பவும் ஹோட்டல் ல காசுக்கொடுக்கறவங்க வருத்தப்படறமாதிரி மீதி வைக்காம எந்திரிக்க மாட்டேன். கல்யாண வீட்டுல வைக்கற முதல் கரண்டி சாதத்திலயே ரசம் சாம்பார் வத்தகுழம்பு மோர் எல்லாம் சாப்பிட்டுறுவேன். பரிமாறறவங்க பக்கத்துலயே நின்னு ஆச்சரியமா பாப்பாங்க.


சமைக்கிறதும் அப்படியே தான். அடுக்களையிலேயே இருக்கறது பிடிக்காது ...ஹாலிலேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்து டிவி அரட்டைன்னு இருக்க சொன்னா சந்தோஷமா இருப்பேன். கடமைக்காக சரியான நேரத்துக்கு அடுக்களையில் நுழைந்து கடகட ன்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு சட்டுபுட்டுன்னு வெளியில வந்துடனும் எனக்கு. அப்புறம் யாராவது நின்னு என்ன செய்யறான்னு பாக்கவும் கூடாது .கல்யாணம் ஆனதும் மாமியார் கிட்ட என் சமையல் தானே நீங்க ஆபிஸ் போங்க சமைச்சு வைக்கறேன் மதியானம் வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். யாராவது பாத்தா படபடன்னு வந்து சரியா வராது. அடுக்களைக்குள்ள நுழையற வரை இன்னைக்கு என்ன மெனுன்னு யார் கேட்டாலும் தெரியாதுங்கறது தான் பதில். என்ன சமைக்கறதுன்னு யோசிக்கறமாதிரி கஷ்டம் உலகத்துல வேற கிடையவே கிடையாதுன்னு எனக்கு தோணும். யாரும் அதுக்கு ஹெல்ப் செய்ய மாட்டாங்க. பின்ன தோசை அப்படின்னா மாவு இல்ல வேற சொல்லுங்க... அடுத்து ...வேண்டாம் என்ன முடியுமோ அதச்செய் ன்னு பேசாம இருந்துடுவாங்க . எளிமையான விஷயம் அப்படிங்கறதுல எக்ஸ்பர்ட் ன்னு பேர் வாங்குவேன். கூட்டாஞ்சாதம் , சொதின்னா யாரு செய்யறதுன்னு கொஞ்சம் சோம்பேறித்தனம்.
மதுரா சொன்னா மாதிரி கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன். ஒரு தடவை பூரி செய்துட்டு அடுப்ப ஆப் பண்ணவே இல்லை. பெரிய வாணலியா , அடியில குறைச்சு வச்சு இருந்த தீ தெரியல. சூடாகி சூடாகி பத்திக்கிச்சு வாணலி திகு திகுன்னு எரியுது. கடவுள் தான் தினம் தினம் காப்பத்தறார்.


புத்தகம் படிக்கறது ... சின்ன வயசுலயே குண்டு குண்டு புத்தகம் அட பாட புத்தகம் இல்லங்க. நாவல் படிச்சு கண்ணாடி போடற நிலைமை . சாப்பாடு படிக்கும்போது புக் வேணும். சமைக்கும்போதும் கூடவே புக்கோ நியுஸ் பேப்பரோ எதாச்சும் இருக்கும் கையில. சின்னதுல அம்மா சொல்லுவாங்க காய் நறுக்கிட்டு இருக்கேன் போ போய் குக்கர கொறச்சி வச்சுட்டு வான்னு நான் புத்தக சுவாரசியத்துல போய் அணைச்சுட்டு வந்துருவேன். அப்பறம் அவங்க
என்ன ஒரு மாதிரி சத்தமே இல்லயேன்னு போனா தெரியும் ...அப்பா சொன்னத சரியா செஞ்சாளான்னு நீதான் பின்னாடி போய் பாக்கனும் அப்படிம்பாங்க. ஒதடு தேயறதுக்கு உள்ளங்கால் தேயலாம்பாங்க அம்மா. வீட்டுக்கு வந்து புக் போடுவாங்களே வாரப்பத்திரிக்கை அது எல்லாம் சீக்கரம் முடிச்சுட்டு அண்ணன் எப்ப வருவாங்க ன்னு ஒக்காந்து இருக்கற்து. பக்கத்து வீட்டுல வாங்கற வண்ணத்திரை கூட படிக்கறது..லீவுக்கு சித்தி ஊருக்கு போனா ரெண்டு ஸ்டூல் போட்டு பரண் மேல ஏறி பழைய பாக்கெட் நாவல் எல்லாம் எடுத்து படிக்கறது.
இப்பவும் தான் தில்லி தமிழ் சங்கத்துல இருந்து நாவல் கட்டுரைத் தொகுப்புன்னு பொழுது போகுது. சேர்ந்த புதிது ஒவ்வொரு முறையும் விகடன் கல்கி ஆண்டுவிழா மலர் இதெல்லாம் கூட எடுத்து வந்து படிச்சேன் .
பழய அமுதசுரபி , வாரப்பத்திரிக்கையில் கிழிச்சு பைண்ட் பண்ண நாவல் கள் , பழைய பூந்தளிர் , காமிக்ஸ் எதுவுமே இப்பவும் திகட்டாம திருப்ப படிப்பேன். இப்படி எல்லாம் விழுந்து விழுந்து பாடத்தை படிச்சு இருந்தா ...ஹ்ம் ...எதச்செய்யணுமோ அதத்தவிர மத்ததெல்லாம் செய்யறதே பழக்கமாகிப் போச்சு.

யார்கிட்ட குடுக்கறது தயவுசெய்து திட்டாதீங்கப்பா ...இந்த கடவுள் பத்தி எழுதிட்டு இத்தன கார்டு எழுதிப்போடுங்கன்னு சொல்லி மத்தவங்கள மாட்டி விடறமாதிரி தலைப்பா போச்சு.


பொன்ஸ்
வடுவூர் குமார்
ஒப்பாரி
சென்ஷி
அன்புத்தோழி