Showing posts with label சென்ஷி. Show all posts
Showing posts with label சென்ஷி. Show all posts

December 5, 2008

ரசம் பூசிய கண்ணாடியென வாழ்க்கை...

எதுவும் தனியே கிடைப்பதில்லை.
நான் எனும் தனிமைச்சொல்
கொண்டிருப்பதோ இரண்டெழுத்து.
இன்பமிருக்கும் இடத்தில் துன்பமிருக்கும்
துன்பமிருக்கும் இடத்தில் இன்பமிருக்கும்
பிரிக்க இயலா உறவு அது
உறவின் பொருளி்லிலும் இவையடங்கியே இருக்கும்.
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .
தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்.





photo .. thanks Leslie marr


சென்ஷியின் நான் எனும் தனிமைச் சொல் கவிதைக்கு எதிர் கவிதை. மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))