November 20, 2007

லவகுசா,துர்கையானா அமிர்தசரஸ்ஸ்பெஷல்-4

அமிர்தசரஸ் தொடர் 1,2,3
ராம் தீர்த் என்கிற இடம் அமிர்தசரஸிலிருந்து சௌகன்வான் சாலையில் 16 கிமீ தூரத்திலிருக்கிறது இங்கே தான் வால்மீகி ஆசிரமத்தில் சீதைதன் மகன்கள் லவாகுசாவைப் பெற்றெடுத்தாளாம். வால்மீகி ராமாயணத்தை எழுதிய இடமும் இது என்று சொல்கிறார்கள்.


மிகப்பெரிய குளம் அதை சுற்றியும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன.இப்போது பூஜ்ய மாதா என்கிற வயதான அம்மா பெயரால் குளக்கரை
யில் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன .





லவாகுசாவின் பிறப்பிலிருந்து வளர்ப்புவரை பொம்மைகளால் செய்யப்பட்ட காட்சி கண்ணாடி ஓவியங்கள் என்று இப்போது தான் தயாராகிறது. குகை போன்ற ஒன்றில் அழகான காட்சிகள் செய்துவருகிறார்கள் பின்னாளில் இதுவும் ஒரு நல்ல சுற்றுலா தலமாகிவிடும்.






மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை. வைஷ்ணோதேவியின் குகைக்கோயிலைப்போன்ற மாடல்கள் தான் எத்தனை விதம். ஒரு சுண்டெலியின் வாயில் குகை இன்னொருகோயிலில் முதலையின் வாய் தான் குகை வாயில். குழந்தைகள் குதித்தபடி உள்ளே ஓடுவதும் ஆடுவதும் என்று ஆனந்தம். குளத்தில் பொரி போட்டு கொஞ்சம் மீன்களோடு விளையாட்டு.




வால்வீகி ஆசிரமத்தில் ஒருவர் சாம்பல் மடித்து கொடுத்துக்கொண்டிருந்தார் பக்கத்தில் ஒரு ஹோம குண்டம் அவரைப்பார்த்தால் முஸ்லீம் துறவி போலக்கூட இருந்தார் வாய்விட்டு எதையோ மந்திரம் முணுமுணுத்தபடி இருந்தார் அதனால் ஒன்றும் கேட்க இயலவில்லை. அங்கெல்லாம் நம் ஓட்டை ஹிந்தியும் கிராமத்தாளுகளிடம் செல்லுபடியும் ஆவதில்லை என்பது வேறு விசயம்.


நவம்பர் மாதம் பௌர்ணமி நாளில் விழா நடக்குமாம்.. 4 நாட்களுக்கு.அங்கே குளிப்பதற்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா ம்.அத்தனை பெரிய குளம் தான் இந்த படத்தை பாருங்களேன் சிறப்பு பேருந்துகள் இருக்குமாம் அப்போது . ஆனால் சாதாரண நாட்களில் பேருந்துகளைக்கண்களில் காண்பதே அபூர்வமாகத்தெரிகிறது.அமிர்தசரஸில் உள்ளூர் வாகனங்கள் மிக மோசம். எல்லாரும் புகைக்கக்கும் வாகனங்களோடு அதிவேகமாக ஓட்டுகிறார்கள். சின்ன சின்ன சந்துகளில் கூட வளைத்து நெளித்து, ஆனால் இடித்தால் சண்டைப்போட்டு அந்த இரு நாட்களில் பார்க்கவில்லை அது அப்படித்தான் என்று போய்க்கொண்டிருந்தார்கள்.



துர்கையானா தீர்த் இது இன்னொரு பொற்கோயில் போன்ற தோற்றம் தருகிறது.. இக்கோயில் அமிர்தசரஸிலேயே தான் இருக்கிறது ஆட்டோவில் 150 ரூபாய் பேசிக்கொண்டு 4 அல்லது 5 இடங்கள் ஒரு நாளில் பார்த்தோம்.தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் எப்போதும் அங்கே பஜன் நடந்த வண்ணம் இருக்கிறது. தங்க கோபுரம் நிறைவு பெறவில்லை தங்கம் தானம் செய்யக்கோருகிறார்கள்.இத்தீர்த்ததில் குளிக்க நோய் போகும் என்று நம்பிக்கை .. கொய்யா கனிகள் வைத்து பூஜை செய்வார்களாம்.. இப்படத்தை பெரிதுசெய்து இந்தி தெரிந்தவர்கள் கதையைப் புரிந்துகொள்ளுங்கள்.. இங்கே (130 வருடங்கள் என்று ஞாபகம்..)சியமாளா தேவிக்கோயில் இருக்கிறது..






பூஜ்ய மாதாவின் கோயில் இன்னொன்று அமிர்த சரஸிலேயே ஒரு வைஷ்னோ மாதா கோயில் இது நிஜமாகவே தவழ்ந்து செல்லும்படி ஒரிடத்தில் வருகிறது பிறகு தன்ணீர் காலை நனைக்கும் படியான குகைக்குள் போய் பார்க்கவேண்டும் சாமியை.. ஒரிஜனல் வைஷ்ணோ தேவிகோயில் போக இன்னும் வாய்ப்புகிடைக்கவில்லை..கோயிலில் பெங்களூர் கெம்ப் போர்ட் சிவன் கோயில் போல எல்லா சாமியும் இருக்கிறார்கள் அதில் நம்மூர் சாமிகளும் உண்டு.. மீனாட்சி , ரங்கநாதர் போன்று சில தெய்வங்கள்.

November 18, 2007

விதையாய் வந்து விழுந்த சிறுமுயற்சி

நன்றி என்கிற ஒரு கவிதைப் பதிவுடன் ஆரம்பித்த என் சிறுமுயற்சி வலைப்பதிவு ஒரு வருடம் நிறைந்து நிற்கிறது. நான் 15 நவம்பரில் எழுதி இருந்தாலும் அது தமிழ்மணத்தில் காட்டப்பட்டது நவம்பர் 18 தான்.. இதோ
அந்த சிறப்புமிக்க நிகழ்வின் புகைப்படம்.. :)

நன்றி , வன்முறைமனிதர்கள் , யாருக்கு போர்வேண்டும்? இவை மூன்றும் தான் அன்று சேர்ந்தார்ப்போல தமிழ்மணத்தில் வகைப்படுத்தாதவை பகுதியில் காண்பிக்கப்பட்டது.



மீள்பதிவு போடத்தெரியாம அந்த பதிவை டேட் மாத்தி எல்லாம் போட்டுப்பாத்ததில் அது இப்போது வேறு தேதியைக்காண்பிக்கிறது . பின்னூட்டங்களில் லக்ஷ்மி என்று இருக்கும்.. முத்துலெட்சுமியா 30 பதிவுக்கு பின்னர் தானே மாறினேன்.





என் முதல் ப்ளாக் அக்டோபர் 26 ஆரம்பித்தேன் அது இரு பதிவுகளோடு நின்று விட்டது.
பூங்காவில் பதிவு வந்த போதே "ஊக்கு" வித்தவர்கள் எல்லாருக்கும் நன்றி என்று சலாம் போட்டேன்....
இப்போதும் எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. என் சிறுமுயற்சிக்கு ஆதரவளித்து "ஊக்கு" விக்கறதுக்கு... நன்றி நன்றி.