July 23, 2014

புனைவற்ற உண்மைக்கதை



 
கண்ணிலிருந்து விண்ணேறி
நட்சத்திரங்களாகிவிட்ட
உப்புகற்களைப் பற்றிய கதைககளும்
உண்ணுகையில் அழும் விலங்கின்
இதயப்பசி கதைகளும்
மறுப்பினால் மறுகி
அலங்காரம் களையாத
மூப்பியின் பழியும்
முரண் பேசி குளத்தில் விழாமலிருக்க
அடர்காட்டில் வழிமறந்து
அப்பங்களோடு அவியாமலிருக்க
புனையப்பட்ட கதைகளுமாய் நிறைந்த
புத்தக அறைக்கு வெளியே
மறைவற்ற வெட்டவெளியில்
சிக்கிக்கொள்வதன்பது
புனைவற்ற உண்மைக்கதை

-------------------
ஆச்சரியங்களையும்
அதிசயங்களையும்
விரும்புபவள் வாழ்வில்
ஆச்சரியங்கள்
அதிசயமாய் நிகழத்தொடங்கியது
விருப்பங்களை விரும்பாமல்
இருப்பது எப்படி

ஒளியை
ஒரு  கூண்டில் ஏந்தி
இருளைப் பிரித்து
உள்நுழைந்து
கனவுப் பரணிலிருந்து
எடுத்து அடுக்குகிறாள்
வாழ்வின் பார்வைக்கு 

No comments: