December 14, 2006

கோவர்த்தன கிரிவலம் [1]

குடையாக பிடித்த கோவர்த்தன மலையை பார்க்கவேண்டும் என்று வெகுநாட்களாகவே ஆசையாக இருந்தது.உறவினர் ஒருவர் முழுநிலவு நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது போல் இங்கும் கோவர்த்தன கிரிவலம் வருவதை அறிந்து மேலும் ஆர்வம் மிகுந்தது.





கோவர்த்தனம் தில்லியிலிருந்து ஆக்ரா போகும் வழியில் பிருந்தாவனம் செல்ல இருக்கும் பாதையின் எதிர்ப்புறம் பிரிகிறது.அந்த பாதை ராதாகுளம் ஷ்யாமா குளம் என்னும் இடத்திற்கு அருகில் செல்கிறது.அங்கிருந்து தான் பரிகிரமா என்னும் கிரிவலம் துவங்கப்படுகிறது.மிக நெருக்கடியான தெரு.இரு குளங்களும் பக்தர்கள் மலர்மாலைகளையும் மற்ற பூஜைப் பொருட்களை அங்கே போடுவதால் அசுத்தமடைந்து இருக்கிறது. வெகுநாட்களாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை போலும். வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தாரும் வரும் இங்கே கைடுகளின் தொல்லையும் பண்டிட்களின் தொந்திரவும் இருக்கவே இருக்கிறது.





அதன் பின்னர் அங்கிருந்து குசும சரோவர் என்னும் இடம் இந்த ஏரிக்கரையிலொரு கட்டிடம் இருக்கிறது. 1764 ல் பரத்ப்புர அரசர் ஜவாஹிர்சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.கட்டடக்கலை கண்ணை கவர்ந்தது. குசும என்றால் மலர்கள் என்றும் சரோவர் என்றால் ஏரி என்றும் பொருள்.முன்பு இந்த் ஏரியை சுற்றிலும் புஷ்பவனம் இருந்ததாம்.
ராதா மற்றும் தோழியரோடு பூப்பறித்து விளையாடும் இடமாக இருந்ததாம்.
அதனுள்ளே ஓவியங்கள் இருப்பதாக படித்திருந்தோம் நேரமின்மையால் பார்க்க முடியவைல்லை எங்களால்.


1 comment:

Anonymous said...

புதிய செய்தி. நன்றி.