August 24, 2013

ஆயுதங்களற்ற உன் தேசம்




மீள் ஒலிகள் 
வரைய வரைய 

உருபெற்றுக் கொண்டிருந்தபோது
’உம்’ கொட்டியபடி
பதிவாக்கிய சொற்களில்
விடையறியா - உன்
வியூகம் உடைத்தேன்
ஆயுதங்களற்ற உன் தேசத்தில் 
மேற்கொண்டு என்ன செய்ய?




-----------------------------------
அன்றொரு 
சின்ன சொல்லில் தடங்கலாகி 
இடைவிடாது
நேற்றிலிருந்தும் நாளையிலிருந்தும் 
அம்பாரமாய் சொற்கள் 

உயர வளர்ந்த 
மணற்குன்றெங்கும்
சீரான காற்றின் தழுவலில் 
அலையலையாய் 
அழகிய பதிவுகள்


இன்றது 
அமைதியில் இசைக்கவும் 
தொடங்கியது

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை....!

தொடர வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

இரண்டும் மிகப் பிடித்தன.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

சீரான காற்றின் தழுவலில்
அலையலையாய்
அழகிய பதிவுகள்//

படமும் கவிதை வரிகளும் மிக அருமை.