மீள் ஒலிகள்
வரைய வரைய
உருபெற்றுக் கொண்டிருந்தபோது
’உம்’ கொட்டியபடி
பதிவாக்கிய சொற்களில்
விடையறியா - உன்
வியூகம் உடைத்தேன்
ஆயுதங்களற்ற உன் தேசத்தில்
மேற்கொண்டு என்ன செய்ய?
-----------------------------------
அன்றொரு
சின்ன சொல்லில் தடங்கலாகி
இடைவிடாது
நேற்றிலிருந்தும் நாளையிலிருந்தும்
அம்பாரமாய் சொற்கள்
உயர வளர்ந்த
மணற்குன்றெங்கும்
சீரான காற்றின் தழுவலில்
அலையலையாய்
அழகிய பதிவுகள்
இன்றது
அமைதியில் இசைக்கவும்
தொடங்கியது
4 comments:
அருமை....!
தொடர வாழ்த்துக்கள்...
இரண்டும் மிகப் பிடித்தன.
கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.
சீரான காற்றின் தழுவலில்
அலையலையாய்
அழகிய பதிவுகள்//
படமும் கவிதை வரிகளும் மிக அருமை.
Post a Comment