October 23, 2013

காற்றினிலே வரும் தண்ணென்ற தென்றல் - உதய்பூர்

ஊரைப்பற்றிய குறிப்புகள் எதையுமே நான் படிக்கவில்லை. முன்பே திட்டமிட்ட விடுதியில் அறையில் சேர்ந்ததும் ஆச்சரியம் இணைய இணைப்பு கிடைத்தது. வந்து சேர்ந்ததை கூகிள் ப்ளஸில் தெரிவித்தேன். வெளிநாட்டவர்களின் வருகையால் இணைய இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் விடுதிகளிலும் பெயர்பலகையிலேயே இலவச இணைய இணைப்பு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் வெளிநாட்டவர்கள். யாரையாவது நிறுத்தி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடும் ஆர்வம் கடைசி நிமிடம் வரை இருந்தது. தனியாக செல்லும் சிலர் பலகாலமாக இங்கேயே இருக்கும் மண்ணின் மைந்தர்களைப்போல நடமாடுகிறார்கள்.
காலை உணவுக்கு ரோட்டோரக்கடைகளைத் தேடினோம். பொதுவாக வடநாட்டு சுற்றுலாவில் காலை உணவாக கிடைக்கும் ஆலு பராத்தா அன்று கிடைக்கவில்லை. அன்று உணவு ப்ரட் பக்கோரா கொரித்து வைத்துக்கொண்டோம்.


 பிறகு ஆட்டோ ஓட்டுனரே சில ஏரிகள் , பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றார். வெயில் அடித்தாலும் தண்ணென்று ஒரு தென்றல். மேலே இருப்பது ஃபதெ சாகர் ஏரி. சிறிது படகு சவாரி செய்து ஏரியின் நடுவில் ஒரு சிறு தோட்டம். அங்கே சென்றதும் அமைதியும்  அங்கேயே இருந்துவிடத்தோன்ற வைக்கும் குளுமையும் வரவேற்றது.




 சஹேலியோன்கி பாரி - தோழியரின் தோட்டம் 18 நூற்றாண்டில் ஒரு ராணி கல்யாணமாகி வரும்போதே 40 தோழிமாருடன் வந்தாளென்று தனக்காக செய்த தோட்டத்தை ராணிக்கும் தோழியருக்கும் ராஜா பரிசளித்துவிட்டாராம். ஏரியெல்லாம் ஊரில் அழகா கட்டி இருக்காரே என்று  பார்த்தேன். இந்த தோட்டத்திலோ அத்தனையத்தனை நீரூற்றுக்கள். எப்படி அந்தகாலத்தில் நீரூற்றுகள் வேலைசெய்திருக்கும் என்று நானும் மகளும் யோசித்துக்கொண்டிருந்தோம். ஏரியிலிருந்து தான் நீரூற்றுகளுக்கு தண்ணீர் வந்திருக்கிறது. வாழ்ந்திருக்காங்க. இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இருக்கின்றன நீரூற்றுகள்.





மழையைப்போல தோன்றவேண்டுமென்று  சுழலும் பறவையின் வாயிலிருந்து நீர் தெளிக்கிறது. தோழியரின் நடனத்தின் தாளத்திற்கேற்ப நீரூற்றுகளிலிருந்து இசையும் இருந்ததாம். இந்த இடத்தை எங்கோயோ போன ஜென்மத்தில் பார்த்திருக்கோமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.



பேஸ்புக்கில் படம் பகிர்ந்த பொழுது கல்யாணி சங்கர் நினைவுப்படுத்தினார்கள். காற்றினிலே வரும் கீதம் என்று பாடியபடியே எம். எஸ் இந்த தோட்டத்தின் நீரூற்றுக்களுக்கு மத்தியில் தான் நடந்திருக்கிறார்கள்.


 

காலையுணவு கொரித்த அளவுக்கு நேர் மாறாக மதியம் நட்ராஜ் உணவகத்தில் 160 ரூ அன்லிமிடட் தாலி. பையனுக்கு குலோப்ஜாமூன் கூட கூடுதலாக நாலு கிடைத்தது. நடராஜருக்கு பின் கூட ஒரு நீரூற்று.  ட்ராவல் ட்ரெண்ட் டீவியில் நட்ராஜில் தாப்பூ தாழம்பூ என்றால் சாதம் கொடுப்பார்கள் என்றும் எல் மாதிரி காட்டினால் ரொட்டி என்றும் ரோகன் சொன்னதாக  மாற்றி நினைவு வைத்திருந்தோம் போலும்
 அங்கே போனால் வெயிட்டர் அது ரொட்டிங்க மாற்றி சொல்லுறீங்க என்றார் . நம்ம ஊரைப்போல அங்கே சாதம் போடப்பா இங்கே ரொட்டி கொண்டுவா என்று சத்தமில்லை. எப்போதும் எல்லாரும் கவனமாக இருக்கிறார்கள். சைகையைக் கொண்டே மேலாளர் தெரிவிக்கிறார்.





 .

12 comments:

ராமலக்ஷ்மி said...

தகவல்களும் படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி:)!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய படங்கள்... இன்மையான பாடல்...

தொடர வாழ்த்துக்கள்...

pudugaithendral said...

தகவல்கள் அருமை.

கோமதி அரசு said...

அழகிய படங்களுடன் உதய்பூர் பகிர்வு அருமை.
எப்போது கேட்டாலும் எம் எஸ் அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் கண்களில் நீரை வரவழைத்து மெய் மறக்க செய்யும் கீதம்.
பாடல் பகிர்வுக்கு நன்றி.
அடுத்த பதிவு தொடர்ந்து தந்தால் நல்லது.

யாழினி said...

அருமையான பகிர்வு

புகைப்படம் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

தகவல்களும் புகைப்படங்களும் மிக அழகு.

தில்லியில் கரோல் பாக் பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்திலும் இப்படி சைகை பாஷையில் தான் பேசி உணவு வரவழைப்பார் அங்கிருக்கும் மேலாளர்.....

'பரிவை' சே.குமார் said...

படங்களும் பகிர்வும் அருமை அக்கா...
வாழ்த்துக்கள்...

கோபிநாத் said...

யப்பா ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு சுற்றுலா பதிவு பார்த்து ;)))

வல்லிசிம்ஹன் said...

மேரா சாயா படத்தில் கூட இந்த நீரூற்றுகள் வரும்.இனிமையான இடங்களை நினைவுக்குக் கொண்டுவந்தன உங்கள் எழுத்துகள். தண்ணீர் தரும் இதம்,காற்றில் வந்த கீதம் எல்லாமே இனிமை.
கல்யாணி சங்கரைப் போன்ற ஞாபகசக்தி கொண்டவர்கள் அரிது. நம் துளசி மாதிரி.

இராஜராஜேஸ்வரி said...

பாடலும் படங்களும் தகவல்களும் அருமை..பாராட்டுக்கள்..!

ADHI VENKAT said...

படங்களும், தகவல்களும் நல்லா இருக்குங்க... தொடர்ந்து வருகிறேன்...

மனதில் உறுதி வேண்டும் படத்தில் ”கண்ணா வருவாயா” பாடலும் இங்கே தானோ....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி , யாழினி ,தனபாலன், புதுகைத்தென்றல் , சே.குமார், இராஜ ராஜேஸ்வரி நன்றி :)

கோமதிம்மா அடுத்தப்பதிவு வந்துட்டே இருக்கு.. :)இணைய இணைப்பு கொஞ்சம் மெதுவா இருக்கு படங்கள் ஏறுவது கடினம்.

வெங்கட் கரோல் பாக் எந்த உணவகம் ? சாப்பாடு நல்லா இருக்குமா :).. ( ஏன் விட்டுவைக்கனும் அதையும் )

ஆமா கோபி ரொம்ப நாளாச்சு எழுதி..:)

ஆமா ஆதி எனக்கு அந்தப்பாடல் பிடிக்காது அதனால் அதைப் பார்ப்பது அபூர்வம் மறந்துவிட்டேன் மலர்வனம் லக்‌ஷ்மி சொன்னப்பறம் பார்த்தேன் . ஆனால் அதிகமாக சிட்டிப்பேலஸில் தான் எடுத்திருக்காங்க. .. அது தவிர நம்ம வல்லி வேற து ஜஹாங் ஜஹாங் ச்லேகா பாட்டுல வரும்ன்னாங்க அதில் லேக் பேலஸ் .