June 29, 2007

நான் இயக்குனரான கதை

அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

என் கவிதை வரிகள்:


பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.





நடுவர் நிலாவின் கருத்து:





இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு: "பூங்கா"
காட்சிச் சுவை நன்று. குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்ததைத் தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம். கவிதையைக் காட்சியில் எழுதியதால் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் போகிறது சில வேளைகளில். இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு பருவத்தின்உணர்வுளையும் க்ளோஸப்பில் ஓரிரு ஃப்ரேம்களாவது வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்






அன்புடனில் வெளிவந்த புகாரியின் கடிதம்:
(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் முத்துலட்சுமி,
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி திறந்தவெளியில் பொழுதெல்லாம் இனிதாக்கிச் சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
நறுக்கென்று ஒரு நல்ல கருத்து. அதை மிக எளிமையாய்ச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதையும் காட்சிகளும்.
மரங்களை வெட்டிவிட்டு மாளிகைகள் கட்டும் முட்டாள் மனிதர்களுக்கு நல்லதோர் உபதேசம்.
கட்டிடங்களுக்கு இடமே இல்லாத நியூயார்க் நகரின் நடுவிலும் பெரியதொரு பூங்கா இருக்கும் "சென்ட்ரல் பார்க்" அது இல்லாவிட்டால் நியூயார்க்கும் ஒரு மயானம்தான்.
மீண்டும் மீண்டும் வரும் அதே காட்சிகள் அலுப்பைத்தருவது உண்மைதான் என்றாலும் நல்ல படைப்பு
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, காட்சியாய் அமைத்து தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி




அன்புடன் குழுவிற்கு நான் எழுதிய கடிதம்:


வெற்றி பெற்ற செய்திமுதலில் சகபதிவர் மங்கை மூலம் அறிந்தேன் , அப்போதே மகிழ்ச்சி அளவிட முடியாமல் இருந்தது. குடும்பத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மெயில் தமிழில் படிக்க காலதாமதம் ஆகியது நல்லதொரு நெட் சென்டரில் விண்டோஸ் எக்ஸ்பி என்றால் படிக்கலாம் என்று பொன்ஸ் சொன்னதின் பேரில் பொள்ளாச்சியில் இருக்கும் நான் இப்போது மெயில் மற்றும் அன்புடன் பக்கங்களை தமிழில் படித்து பார்க்க முடிந்தது. சேதுக்கரசி hi கோபி யின் தகடூரை உபயோகித்துத் தமிழ் தட்டச்சும் வழி சொன்னது மிக எளிதாக இருக்கிறது. நன்றி கோபி.






கவிதை உருவானகதை மிகப் பெரியது. போட்டியில் இந்த பகுதி காட்சிக்கவிதை புதுமையாக இருந்தது. இப்படி ஒரு முயற்சி செய்ய வெகுநாளாகவே ஆசையிருந்தது. இப்போட்டி அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கவிதை ஒரு நாள் காலை கண்விழித்ததும் சிறு பொறியாக தோன்றியது. உடனே அதன் சுருக்கத்தை எழுதி வைத்தேன். பின் சமையலுக்கு நடுநடுவே அதன் விரிவாக்கமும்... வீடியோவுக்கான ஸ்டோரிபோர்டுக்கான வேலையும் குறிப்பெடுத்தேன்.






உடனேயே காட்சியை எடுக்க ஆசை அளவிட முடியாமல் போனது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னால் சிந்தாநதி அவர்களின் ஒரு விவாதக்களப்போட்டியில் பரிசாக எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. நான் பதேர்பாஞ்சாலியின் நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் கேட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர் குறிப்பிட தவறி இருந்தேன் அதனால் அவர்கள் பதேர்பாஞ்சாலி படத்தினைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்கள். அதுவும் ஒரு நல்ல புத்தகமே. இளைய இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாடபுத்தகம் அது.



அதில்குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விசயம். சத்யஜித்ரே ஒரு காட்சியை மூங்கில் புதர்களில் எடுத்தாராம். பணம் குறைந்ததால் மீதி காட்சி தொடர நாள் ஆகியதாம் அதற்குள் புதர் காடாகிவிட்டதாம். அதே காட்சி தொடர அவர் ஒரு ஆறு மாதம் காத்திருந்தாராம் காட்சியமைப்பில் அத்தனை ஒரு கவனம். அட யாரையெல்லாம் உவமை சொல்றான்னு நினைக்காதீங்க. முயற்சி செய்யும் போதே பெரியதாக கனவு காணனும் இல்லையா. அதனால் காத்திருந்து ஒரு 10 நாட்களாக காட்சிகளை எடுத்து பின் எடிட் செய்தேன். பின் அதனை ஒரு வடிவத்துக்கு கொண்டுவர மேலும் ஒரு வாரம் ஆனது எனக்கு ஏனென்றால் முதல் முயற்சி , கணினி தொழிட்நுட்பத்தில் தடுமாற்றம்.






நடுவர் நிலாவுக்கு நன்றி. அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் பாடலாக அதை பிண்ணனியில் ஒலிக்க செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது அதற்கும் முயற்சி செய்தேன் அப்போது எனக்கு பாடலை பதிவு செய்ய ஒரு நல்லதொரு சாப்ட்வேர் தெரியவில்லை. நிழல் படிந்தது போல் சில இடம் என்றது எனக்கு தெரிந்தே இருந்தது. அது மிக த்தொலைவில் விளையாண்ட குழந்தைகளின் காட்சி , எடுத்தபின் தான் தெரிந்தது நிழல் விழுந்தது. காட்சி திரும்ப கிடைக்காது என்பதால் அதை இணைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் வந்தது அது எல்லா காட்சியை இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட வீடியோ சாப்ட்வேர் அப்படித்தான் இருமுறை காட்சிகளை காண்பிக்கிறது எப்போதுமே.. கவிதை எழுத்தாக வருவதால் காட்சிகளை மறுமுறை பார்க்க வசதியாக இருக்கட்டுமே என்று அப்படியே விட்டுவிட்டேன்.


அன்புடனின் இக்கவிதைப்போட்டி மிகசிறப்பான ஒன்று. நன்றாக நடந்தது. எல்லாருக்கும் அறிவிப்பு சென்று சேர்க்க எடுத்த முயற்சி ஆகட்டும் , அடிக்கடி மெயில் செய்து தகவல்களை தெரிவிப்பதில் ஆகட்டும் மிக சிறப்பான செயல்பாடுகள். மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். அதற்கான ஆலோசனை தரும் அளவு யோசனை என்னிடம் இல்லை. என்னைப்போன்ற முயற்சி செய்போர்களுக்கு இது ஒரு நல்லதொரு வாய்ப்பளித்தது. அன்புடன் குழுமேல்மேலும் வளர ....வாழ்க வளமுடன். நன்றி
முத்துலெட்சுமி

26 comments:

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் முத்துலட்சுமி :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சேதுக்கரசி... ஒரு இயக்குனரை உருவாக்கியதற்கும் சேர்த்து நன்றிகள். :))

ஜி said...

இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...

வாழ்த்துக்கள் அக்கா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா ஜி தம்பி எல்லாமே ஓவராத்தான் சொல்லுவீங்க போல
பேசினா ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி..குறும்படம் எடுத்தா அதும்
கண்ட நாள் முதல் பிரியா வா...சே புல்லரிக்குது ப்பா!

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி....

மேலும் பல வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துக்கள்....

ஊர்ஸ் என்பதால் டபுள் சந்தோஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நன்றி நாகை சிவா ...எதோ முதல் முயற்சியே கிளிக் ஆகிடுச்சு ...

நாகை சிவா said...

:-)

என்ன படிச்சப்ப வேற தலைப்பு இருந்துச்சு, இப்ப வேற தலைப்பு இருக்கு...

நீங்க மாத்திட்டீங்களா. இல்ல கவிதை படிச்சதால் எனக்கு குழம்பி விட்டதா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா நீங்க படிக்கும் போது வேற தலைப்பு தான். பயப்படாதீங்க நீங்க தெளிவாத்தான் இருக்கீங்க..வாஸ்து சரியில்லையோன்னு மாத்தினேன்.:)

காட்டாறு said...

அடடே..... யக்கோவ்வ்வ்வ்..... இனிமே மருவாதையா கூப்பிடனுமப்பா... ஜியின் வாழ்த்து பலிக்க என் வாழ்த்துக்கள்!

கலக்குங்க அம்மணி நீங்க! உதவி இயக்குனர் தேவைன்னா சொல்லியனுப்புங்க.... வெளிச்சம் பிடிக்க ஓடோடி வந்துருவோமில்ல....
;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா காட்டாறு அப்பறம் என்ன டிக்கெட் ப்ளாக் பண்ணி வச்சுக்கப்பா
எப்பவேணுமோ கூப்பிடறேன். சரியா?

சென்ஷி said...

//ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...

வாழ்த்துக்கள் அக்கா... //

ரிப்பீட்டே

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;)))

இந்த சிறு முயற்சியிலேயே கலக்கிட்டிங்க...மேலும் பல வெற்றிகள் கிட்ட மீண்டும் வாழ்த்துக்கள் ;))

கோபிநாத் said...

\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...

வாழ்த்துக்கள் அக்கா...\\


இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;)))

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள்.

Jazeela said...

வாழ்த்துகள் முத்துலெட்சுமி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி , கோபி நாத்,ஒப்பாரி , ஜெஸிலா எல்லாருக்கும் நன்றி..

ஒப்பாரி எங்க ரொம்ப பிஸியா ?

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் [லட்சுமி.]முத்துலட்சுமி

வெற்றி said...

முத்துலட்சுமி,
வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி ,வெற்றி நன்றி ப்பா .

துளசி கோபால் said...

மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள் !!!!

மொதல்லே கவிதைன்னதும் கண்டுக்காமப் போயிட்டேன்(-:

அண்ணாத்தை சூப்பரா இருக்கார்:-)

அருமையா எடுத்திருக்கீங்கப்பா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி துளசி... நான் இயக்குனாரன கதைன்னு தலைப்பு வச்சிருந்தா வந்திருப்பீங்க...பரவால்ல இப்பவாவது படிச்சீங்களே..

ஜி said...

//கோபிநாத் said...
\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...

வாழ்த்துக்கள் அக்கா...\\


இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;))) //

நல்ல வேளை சென்ஷி ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு போடல.. எனக்குத்தான் க்ரெடிட் கெடச்சிருக்கு :))

Anonymous said...

ஜி said...
//கோபிநாத் said...
\\ ஜி said...
இந்திரா 'சுஹாசினி', கண்ட நாள் முதல் 'ப்ரியா' வரிசையில் இன்னுமொரு...

வாழ்த்துக்கள் அக்கா...\\


இந்த இடத்தில் ஒரு "ரீப்பீட்டே" கண்டிப்பாக போட வேண்டும் ;))) //

நல்ல வேளை சென்ஷி ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு போடல.. எனக்குத்தான் க்ரெடிட் கெடச்சிருக்கு :))


:)))

SENSHE

சேதுக்கரசி said...

முத்துலட்சுமி, உங்க பரிசுப் புத்தகத் தெரிவுகளை விரைவில் அன்புடன் கவிதைப் போட்டி முகவரிக்கு அனுப்புங்க. இன்னும் தெரிவு செய்யாதவங்களால மத்தவங்களுக்கும் தாமதமாகுது. நன்றி...

சேதுக்கரசி said...

//சேதுக்கரசி hi கோபி யின் தகடூரை உபயோகித்துத் தமிழ் தட்டச்சும் வழி சொன்னது மிக எளிதாக இருக்கிறது. நன்றி கோபி.//

அவரை, தகடூர் கோபின்னு அழைக்கணுமாம்.. இந்தப் பதிவைப் பாருங்க :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மன்னிக்கவும் சேதுக்கரசி...இன்று முக்கால் வாசி தேர்ந்தெடுத்துவிட்டேன் புத்தகங்களை நாளை கண்டிப்பாக மெயில் செய்துவிடுகிறேன்..

தகடூர் கோபி யா சரி இனிமே அப்படியே சொல்லிவிடலாம்.. :)