August 7, 2008

என்னவெல்லாமோ நடக்குது ... சோதனை..

இன்று காலை நேற்றுப்போட்ட பதிவுக்கு பின்னூட்டம் வந்திருந்தால் பிரசுரிக்கலாமே என்று பார்த்தபோது ... பதிவில் என் நேற்றையபதிவே இரண்டுமுறை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றை டெலிட் செய்துவிட்டு பார்த்தால் வந்திருந்த 35 மறுமொழிகளையும் கூட்டிக்கொண்டு அது காணாமல் போயே போய்விட்டது. எடிட் போஸ்ட் பேஜுக்கு போனபோது அங்கே ஒன்று இருந்தது . அதை டெலிட் செய்ய வும் முடியாது சேவ் ட்ராப்டாக்கவும் முடியாது என்றது. சரி என்று மீண்டும் அதை பப்ளீஷ் செய்ததும் இரண்டு பதிவாகவே வந்து விழுந்தது. நல்லவேளை கூட்டிப்போன மறுமொழிகளோடே வந்து சேர்ந்தது.

சரி துணைக்கு இருக்கட்டும் என்று பார்த்தால் இந்த பதிவோடு 165 ஆகிறது ஆனால் டேஷ்போர்டில் 161 தான் காட்டுகிறது. இதற்கிடையில் அடுத்த பதிவுக்கும் இரண்டாக வந்து விழக்கூடாது என்றால் கெடா வெட்டுங்க என்று தமிழ்பிரியன் வேறு கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

அவர் போட்டிருந்த ப்ளாக்கர் முகப்பில் படம் வேறு முயற்சித்திருக்கிறேன்..
படமும் வருகிறதா என்று சோதனை..
இரண்டாய் விழாமல் ஒன்றாய் விழுகிறதா என்றும் சோதனை.

8 comments:

ஆயில்யன் said...

//கெடா வெட்டுங்க என்று தமிழ்பிரியன் வேறு கேட்டுக்கொண்டே இருக்கிறார்.//

ஓ யோசனை சொல்லிட்டு இப்படி கலெக்‌ஷ்ன் கட்டுறாரா தமிழ் >>>>> :)))))

ராமலக்ஷ்மி said...

//என் நேற்றையபதிவே இரண்டுமுறை காட்டிக்கொண்டிருந்தது. //

ஆமாங்க. நான் கூட எங்கே போய் பின்னூட்டமிட என விழித்தேன். சோதனை மேல் சோதனை செய்து ரிஸல்டை சொல்றாங்க எல்லாரும். ஆனாலும் சோதனை தொடருது போல..:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் அவர்கலெக்ஷன் செய்யறதா இருந்தாலும் நாம் குடுக்கற ஆளா இருந்தா இல்ல குடுப்போம்..
--------------
ராமலக்ஷ்மி ஆமாம்ப்பா இப்படி ஓட்டு பிரிஞ்சுடக்கூடாதேன்னு தான் ஒரு போஸ்ட் இருக்கட்டும்ன்னு இன்னோன்னை டெலிட் செய்யப்பார்த்தேன்.. ஆனா முடியல..

இரண்டு பதிவு இப்பவரைக்கும் வரலை.. ஆனா படம் வரலை.. :(

சந்தனமுல்லை said...

All the best :-)...நானும் பார்த்தேன் மகளிர் திரட்டியில்!!

Thamiz Priyan said...

அக்கா, நான் கெடா வெட்டுவதற்கு ரெடியானதால் தான் இன்னைக்கு இரண்டு பதிவு வரலை.... DD அனுப்பிட்டீங்கன்னா நாளைக்கு பதிவு போடும் போது தமிழ்மண முகப்பில் உங்க அவடார் படம் கண்டிப்பா வரும்... :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//கெடா வெட்டுங்க என்று தமிழ்பிரியன் வேறு கேட்டுக்கொண்டே இருக்கிறார்.//
ஓ யோசனை சொல்லிட்டு இப்படி கலெக்‌ஷ்ன் கட்டுறாரா தமிழ் >>>>> :)))))///
ஆயில்யன் அண்ணே! சந்திரமுகி படம் பாத்தீங்களா? அந்த மந்திரவாதி ரஜினியை பலி கொடுத்து தான் ஜோதிகாவிடம் இருக்கும் பேயை ஓட்டுவார். அதே மாதிரி தான் இதுவும்... கெடா வெட்ட DD அனுப்பினா எல்லாம் சரியாகிடும்... :)

narsim said...

ஒரு பதிவருக்கு இவ்வளவு சோதனையா???
வேதனை,வேதனை...ம்..
(நம்ம கலரையும் நீங்க சொன்னமாதிரி மாத்திட்டேன்க்கா..)
நர்சிம்

NewBee said...

கயலக்கா,

நலமா? :)

சோதனைப் பதிவு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் :)))

முகப்பில் படம் வர, வாழ்த்துகள் :P.

உங்க அழகான, நிஜப்படம் தானே?