June 11, 2010

சிதல் அரிக்கும் நாட்கள்

பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்

சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்

கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி




*சிதல் - கரையான்





நன்றி :ஈழநேசன்

24 comments:

கோபிநாத் said...

அருமை ;)

நசரேயன் said...

இன்னும் படிச்சிகிட்டு இருக்கேன், ஆனா புரியவே இல்லை !!

ரோகிணிசிவா said...

நல்லா இருக்குங்க ., ஆனா புரியல ,

Thekkikattan|தெகா said...

இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு, நான் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)

ராமலக்ஷ்மி said...

Thekkikattan|தெகா said...
//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//

உண்மை.

கவிதை மிக அருமை முத்துலெட்சுமி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

தி பெஸ்ட் டைட்டில்.

Chitra said...

Thekkikattan|தெகா said...

இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு, நான் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)


.........நானும் கேட்டே தெரிஞ்சிக்கிறேன் :)

மதுரை சரவணன் said...

//சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்//
அருமை . வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

//நாட்களில் புயற்கண் அமைதி//

அருமையான சொல்லாடல்.. அருமையான கவிதை முத்துலெட்சுமி.

பாச மலர் / Paasa Malar said...

நன்றாக இருக்கிறது முத்துலட்சுமி..

Anonymous said...

manathaiyum ariththadhu kavithai varigal.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி,
நசரேயன் , ரோகிணி , தெகா, சித்ரா.. இதெல்லாம் ஓவர்ப்பா.. :))

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி பா.ரா
நன்றி மதுரை சரவணன்

சித்ரா இன்னும் நீங்க கேக்கவே இல்லையே :P

சாரல் எனக்கும் அந்த இடம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)

நன்றி பாசமலர்

நன்றி தமிழரசி ..

சென்ஷி said...

நல்லா இருக்குது.

கோமதி அரசு said...

கவிதை நல்லா இருக்கு முத்துலெட்சுமி.

அம்பிகா said...

கவிதை நல்லாயிருக்கு முத்துலெட்சுமி
//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//

உண்மை.

மாதேவி said...

அருமை.

அன்புடன் அருணா said...

கவிதை நல்லாயிருக்கு முத்துலெட்சுமி!

Muruganandan M.K. said...

"மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி..."

ஆழமான வரிகள். உங்களை மட்டுமல்ல என்னையும் கூட இவ்வாறுதான் உறிஞ்சுகிறது. மாற்றுவழி என்ன?

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான வரிகள். இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன் நான் said...

ரோகிணிசிவா said...

நல்லா இருக்குங்க ., ஆனா புரியல ,//

இதே நேர்மைத்தான் எனக்கும்.

Unknown said...

கரையான் என்னும் உருவகம் முழுக் கவிதையையும் மனச்சுவற்றில் ஏற்றி வைத்து விட்டது...

கண்ணுக்கு புலப்படாத ஈரப்பதம் வரிகளுக்குள் வேரோடிப் போயிருப்பதால் இது நிகழ்ந்திருக்கக்கூடும்..

வாழ்த்துக்கள்..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்//

கஷ்டம் தான் இந்த நிலை... நல்லா இருக்குங்க ...

ஆயில்யன் said...

//இது படிக்கப் படிக்க புது பொருள் தருகிற மாதிரி இருக்கு//

அதுதானே கவிதையோட ஸ்பெஷாலிட்டி?! :)

ஆயில்யன் said...

//பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

தி பெஸ்ட் டைட்டில்.
//

என்னோடதும் ஸேம் கருத்து ! :)