கவனமாய் கோத்த
முத்தாரத்தில்
எல்லாமுமாய் கூடி
கவனம் ஈர்த்தபடி
இருக்க
ஒற்றைக் கூழாங்கல்
அமைதியாய் அங்கே
பொருந்திவிட்டிருந்தது
-----------------------------------------------------
நிலா பார்த்து
நட்சத்திரங்கள் எண்ணிமுடித்து
என்றொருநாள் பாலைக்கனவு
மலையேறி முகடெட்டி
பள்ளத்தாக்கில் கரைந்து
என்றொருநாள் பனிமலைக்கனவு
எங்கேயும் போகப்போவதில்லை
என்பதைத்தான்
கனவில் வந்த கனவு
சொல்லிக்கொண்டிருக்கிறது
11 comments:
இரண்டாவது கவிதை....
கனவிலாவது அங்கே போக முடிகிறதே...
இரண்டு கவிதைகளும் நன்று பாராட்டுகள்.
சிறுமுயற்சி நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் முத்துலட்சுமி.
ரெண்டுமே அருமைன்னாலும்,.. முதலாவது க்ளாஸ் :-)
சிறு முயற்சி எடுத்தால் கனவெல்லாம் நிஜமாகுமே.
மே தின வாழ்த்துகள்.
சில கனவுகளில் வழிதெரியாமல் தொலைவேன். அதைவிட உங்கள் கவிதை அழகு.
கூழாங்கல் கவிதையில் உண்மைகள் பல விரிகின்றன...
கனவுகளின் வெளிப்பாடும் அழகு...
இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
2ம் சூப்பரு ;-)
இரண்டுமே அருமை. வாழ்த்துகள்.
நல்லா இருக்குப்பா
/எங்கேயும் போகப்போவதில்லை என்பதைத்தான் கனவில் வந்த கனவு சொல்லிக்கொண்டிருக்கிறது/
அற்புதம்.
நன்றி வெங்கட்.. :)
நன்றி புவனேஸ்வரி :)
நன்றி சாரல்:)
நன்றி வல்லி :)
பாசமலர் நன்றி :)
கோமதிம்மா நன்றி :)
கோபி நன்றிப்பா..:)
ஆதி நன்றிப்பா :)
Post a Comment