நூற்றி நாற்பதாவது வழி
சொல்லப்பட சொல்லப்பட
வலுவிழந்து கொண்டிருக்கும்
வார்த்தைகள்
எதிர்தரப்பில்
புரியக்கூடிய மொழியாகிலும்
வாசித்தறியப்படாமல்
நிரம்பிக்கொண்டிருக்குமானால்
பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்
-------------------------------------------
வழியெங்கும்
அழகான
நான் வேண்டாத பொருட்களின்
கடைகள்
முன் தள்ளிக்கொண்டிருக்கும்
கூட்டம்
எதிர்படும் முகங்களில்
ஒன்றும்
அறிந்ததில்லை
தொலைந்து கொண்டிருப்பதாகவோ
இலக்கென்று ஒன்று
இல்லையெனவோச் சொல்ல
திரும்பும் வழி ஒன்றும்
மறக்கவில்லை
12 comments:
இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நல்லாருக்கே! அருமையான சிந்தனைகள். தொடர்ந்து எழுதுங்க பின் தொடர்ந்து வருகிறேன்.
நல்லாயிருக்கு ;)
இரண்டுமே அருமையா இருந்ததுங்க... பாராட்டுகள்.
இரண்டுமே நடைமுறைக்கு மிக்க பொருத்தம்!!
கோமதிம்மா , செம்மலை , கோபி.., ஆதி, சமீரா எல்லாருக்கும் நன்றி..:)
எனக்கும் காகிதக் கப்பல் செய்யும் காலங்கள் நிறைய வந்திருக்கின்றன. இரு கவிதைகளும் எங்கும் நடந்துகொண்டிருக்கும் காட்சிகளைப் பிரதிபலிக்கின்றன. வாழ்த்துகள் கயல்.
பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்//
ஆதங்கத்தின் தீவிரம்!
நல்ல கவிதைகள்....
வல்லி , நிலாமகள், வெங்கட்..நன்றி :)
இரண்டு கவிதைகளுமே நல்லா இருந்ததுங்க. அதுவும் முதல் கவிதை ரீடரில் படிச்சுப் பாராட்டணும்னு இங்கே வந்தேன். வாழ்த்துகள்.
நன்று.
Post a Comment