அள்ளாமல் விட்ட நதிக்காய்
குறைபட்டுக்கொண்டே
பெருநதியிலிருந்து
கைநிறைய அள்ளிய நீரும்
நொடிக்கொரு துளியாய்
குறைகின்ற சலிப்பின்றி
நதியோரமாய் நடப்பதெப்படி?
----------------------------
நம்பிக்கைகளுக்கு வலிக்காமல்
சொல்லிக்கொண்டேன்
கடினமற்ற பாதையில்
கூழாங்கல் தெரிய
நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்
7 comments:
nice
நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்//
அருவி படமும், அருவி கவிதையும் அருமை.
இப்படி அடிக்கடி அருவியாக இசை பாடம்மா.
நதியின் அழகுடன் வரிகள். இரண்டும் நன்று.
நல்ல வரிகள்... (படமும்)
அருவிப் படம் மிக அழகு. தண்ணீர் பற்றாக்குறையில் நம் ஊர் அவதிப் படும் நேரம் உங்கள் கவிதை வரிகள்
இசையாய் விழுகின்றன. கயல்.
அழகான கவிதை வரிகளும்..
அவற்றிற்குப் பொருத்தமான கவிதையான அருவிப் படமும் கவர்ந்தன.
அருமையான வரிகள் கயல்..
Post a Comment