அபி அப்பா தான் முதலில் நீங்க மாயவரம் போறீங்களா நானும் அந்த சமயம் வந்தாலும் வருவேன் பாக்கலாம் என்றார். கோபிநாத் மெயில் செய்து நானும் வரேன் அக்கா என்றார். கோவை பட்டறைக்கு சொல்லிக்காம் தில்லியிலிருந்து கிளம்பி வந்த சென்ஷி அங்கேயே டேரா போட்டிருந்ததால் அவரும் வருவார் என்று தெரிந்தது .அதுக்கப்புறம் பார்த்தா இம்சை (அதாங்க பேசாம உட்கார்ந்து இம்சை பண்ணாங்களே) , பாலைத்திணை காயத்ரி , மூத்தபதிவர் ராயல் ராம் , ஜி எல்லாரும் வராங்கன்னாங்க சரிதான் கச்சேரி களைகட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்...சந்திப்புக்கு முதல் நாள் தான் சொர்ணாக்கா (கண்மணி) வந்தாலும் வருவாங்க அப்படின்னு ஒரு செய்தி..
நான் உள்ள போன போது இம்சை குளிக்க போயிருந்ததால் காயத்ரியை காயத்ரி என்றும் அவர்கள் அம்மாவை அவர்கள் அம்மா என்றும் ஜி யை கோபி என்றும் கோபி யை ஜி என்றும் அறிமுகப்படுத்தினார்கள்.. ராயல் ராம் சின்ன கைப்புள்ளை என்ற அடைமொழியோடு அறிமுகப்படுத்தினார்கள். சின்ன வயசுல குளிக்கப்போன இம்சை கொஞ்சம் பெரிய பொண்ணா வெளிய வந்தாங்க. .
குளிக்கப்போன ராயல் ராம் இம்சையை விட அதிக நேரம் ஆக்கிட்டார் இதுக்கிடையில் வந்த சென்ஷிக்கான அறிமுகப்படலத்தில் இம்சையை காயத்ரி என்று குழப்பி சொன்னவுடன் ஏ ..மாத்தி சொல்றாங்கப்பான்னேன்.அட உங்களுக்கு ஜி யாரு கோபி யாருன்னே தெரியாது நீங்க சொல்ல வந்திட்டீங்களான்னாங்க
தலைவி என்ற ஒரு கெட்டப்போடு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ...எத்தனை மணிக்கு வருவார்கள் என்று தெரியாது என்று கண்மணியின் வ்ருகை எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் எல்லாரும் காலைஉணவு சாப்பிட்டாங்க. காயத்ரி எல்லாத்துக்கும் என்னப்பா இது நான் கேட்டனா அப்படின்னு சிரிச்சுக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாங்க .அவங்க அம்மா ஒரு புத்தகத்தோடு மூழ்கி எப்பவாவது அவங்க பொண்ண கலாய்ச்சா கொஞ்சமா கண்ணெடுத்து பார்த்துகிட்டாங்க.
காயத்ரி யின் அருமை பெருமையெல்லாம் அங்க போய் தான் தெரிஞ்சுகிட்டேன்
அஜெண்டா உண்டான்னு கேட்டேன் ..இது பதிவர் சந்திப்பு இல்லை ..நாமெல்லாம் ஒரு குடும்பம் . அப்படின்னாங்க...இம்சை எதாச்சும் பேசுங்க ...நீங்க பேசவே மாட்டிங்களான்னு கேட்டா...ஏன் ஏன் பேசுவேனே அப்படின்னு சொல்லிட்டு புல்ஸ்டாப் வச்சிட்டாங்க...ஏங்க இப்படி டப்புன்னு முடிச்சிட்டா எப்படிங்க பேச்சு வளரும்..அதான் வேற வழி இல்லாம் நானே பேச வேண்டிய தா இருந்தது..அப்படியும் ஒவ்வொருத்தரையும் ஜி நீங்க எப்படி எழுத வந்தீங்க..கோபி எப்படி எழுத வந்தீங்கன்னு கேள்வி கேட்டு பேச வச்சதும் நாந்தான். ..
ராயல் ராம் கிட்ட மூத்த பதிவரா நீங்க என்ன சொல்ல விரும்பரீங்கன்னு கேட்டதும் அவர் வெட்கப்பட்டுகிட்டே தன் அனுபவங்கள் சொல்ல ஆரம்பித்தார்.ஆனா குறுக்க வேறயாராவது பேசினா ட்ப்புன்னு டாபிக்க் மாறிப்போயிடும்.தமிழ் மணத்தோட புது மாற்றங்கள் பற்றி சந்தோஷமா பேசிக்கிட்டோம்.
கண்மணி வந்ததும் நானே யாராருன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொன்னாங்க..அசத்தலா கண்டும்பிடிச்சாங்க...ஆனா ஆஜானுபகவா ஒரு ஆள நினைச்சேன் இப்படி இருக்கீங்களேன்னு கொஞ்ச நேரத்துக்கு புலம்பிக்கிட்டே இருந்தாங்க என்னைப்பார்த்து. சரவெடியை கொளுத்திப்போட்ட மாதிரி படபடன்னு இருந்தது அவங்க பேச்சு..ரொம்ப வெளிப்படையா தனக்கு ஜூனியரான அபி அப்பாவின் காமெடி பதிவுகள் பார்த்து அவங்க பொறாமைப்பட்டதையும் அப்புறம் நட்பானதையும் சொன்னபோது உயர்ந்துட்டாங்க அப்படியே.
எனக்கு ராத்திரி ரயிலுக்கு போகவேண்டியதால சாப்பாடு எத்தனைமணிக்கு போடுவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன்..அப்படியும் அபி அப்பா 3 மணிக்கு த்தான் போட்டார். நல்லவேளை அவங்க அக்கா வந்து கொஞ்சம் உதவி எல்லாம் செஞ்சாங்க இல்லன்னா அவருக்கென்ன பொறுப்பாவது ஒன்னாவது.
சும்மா உட்காராமா சுத்தி வேலை செய்யர மாதிரி ஆக்ட் விட்டார்.
அபி அவள் அப்பாவின் வண்டவாளங்களை தண்டவாளங்கள் ஏற்றினாள்..
சாப்பிட்டவுடன் காலையில் வெளியே போன ஆண்கள் சிறிது நேரம் பிறகு வ்ந்தார்கள்..இதற்கிடையில் மங்கை போன் செய்து ஏன் நீங்க போலயான்னு கேட்டாங்க ...எனக்கு பழக்கமில்லைங்கன்னு சொன்னேன்.பிறகு எல்லாருடனும் அவங்க டில்லியிலிருந்தே அறிமுகம் செய்து கொண்டார்கள்.
நான் பேசவே ஆரம்பிக்கவில்லை என்று சென்ஷி சொன்னதும் பாவம் அவங்களுக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு. அப்புறம் இல்லையில்லை கொஞ்சமா பேசிகிட்டு இருக்கேன்னு கண்ணாடியை கழட்டிகிட்டே சினிமா டாக்டராட்டம் சொல்லி மங்கையை அபாயக்
கட்டத்திலிருந்து சென்ஷியே காப்பாத்திட்டார்.
குடும்பத்தில் ஒருத்தராக தன்னை இணைத்துக்கொண்ட அய்யனாரின் சில கவிதைகள் புரியாமலும் சில வார்த்தை பிரயோகங்கள் எங்களுக்கு பிடிக்காமலும் இருப்பதை பேசிக்கொண்டோம்.. இனிமே எல்லாரும் அப்பப்பவாச்சும் எதாச்சும் உருப்படியா எழுதுங்கன்னு கேட்டு கிட்டேன். எனக்கும் சேர்த்துத்தான் இது .
ஜி மற்றும் இம்சை ரொம்ப அமைதியானவங்க மாதிரி தெரிஞ்சாலும் உண்மையில் ரொம்ப ஆர்பாட்டமான ஆளுங்க...எழுத்துல யும் அவங்க ரொம்ப க்ளோஸான வட்டத்துலயும் ரொம்ப ஜாலியா இருக்காங்க..
கோபி அதிகம் பேசவே இல்லை...நான் தான் அடிக்கடி என்ன சொல்றீங்க ன்னு கேட்டு கேட்டு பேச வேண்டி இருந்தது..சென்ஷி க்கிட்ட முத்துலெட்சுமி இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலன்னாராம் என்கிட்ட இல்ல சொல்லி இருக்கணும்..இப்படியே அமைதியா இருந்து நல்லபிள்ளை பட்டம் வாங்கியவர் கோபி ஒருவர் தான்.
பேசிய விஷயத்தில் நிறைய குடும்ப ரகசியம் அதனால அதெல்லாம் எழுதல.கல்யாணத்தில் நீங்கள்ளாம் சேரை வட்டமா இழுத்துப்போட்டு அரட்டை அடிப்பீங்களா அந்த மாதிரி ஒரு அழகான அனுபவம். தெரு முக்குக்கு கேட்டுச்சாம் சிரிப்பு சத்தம். அபி தம்பிக்கு நன்றி.
ஒரு விஷயம் மறந்து போய் சேர்க்கிறேன்..வராத மீத ஃபர்ஸ்ட் தங்கச்சிய எல்லாரும் சந்திப்பின் போது நினைச்சிக்கிட்டோம்.