நேற்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன்.வேர்ட் பேட்டை save செய்திருக்கவில்லை.. ஆனால் ஒரு வேலையாக நகரும்பொழுது கணினியை மானிட்டரில் ஆஃப் செய்துவிட்டு சென்றேன். நடுவில் கரெண்ட் கட் ஆகிவிட்டது. இப்படியாக மானிட்டர் ஆஃப் ஆகி இருக்கும் போது மானிட்டரை ஆன் செய்தால் அது ஷட்டவுன் ஆகி மீண்டும் திரை உயிர் பெறுகிறது. அந்த டாக்குமெண்ட் அழிந்துவிட்டது. தானாக அது ஆஃப் ஆகாமல் இருக்க ஏதும் வழி இருக்கிறதா?
ஒரு தோழியின் அறிவுரையில் இப்போதெல்லாம் நான் ஹைபர்னேட் தான் செய்கிறேன்.. அதனால் வேர்ட் டாக்குமெண்டை சேவ் செய்வதே இல்லை.. அப்படியே பாதியில் ஹைபர்நேட் செய்துவிட்டுப் போய்விடுவேன். மறுநாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன்.
இன்று மீண்டும் டைப் செய்துப்போட்டிருக்கிறேன். ஆனால் முன்பு தோன்றிய விதமாய் வரவில்லை பதிவு. புதுகைத்தென்றலின் கோலம் பதிவில் எழுந்த நினைவலைகள்......
எங்கம்மா நான் அஞ்சாப்பு படிக்கும்போதே பொம்பிளைப்பிள்ளைன்னா கோலம் போடத்தெரிந்தே ஆகனுன்னு மூன்று புள்ளி மூன்று வரிசை ஐந்துப்புள்ளி ஐந்துவரிசை என்று சின்னதா கத்துக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சாயங்காலம் வாசல் தெளித்துக்கோலம் போடுவது உன்வேலை என்று பொறுப்பும் ஒப்படைத்துவிட்டார்கள்.
நாங்கள் இருந்தது காலனி வீடு. மூன்று வீடுகள் சின்ன சந்தில் இருக்கும்..அதில் நடுவீடு எங்கள் வீடு. பத்து அடி பாதை தான் . சிமெண்ட் தளம். என்பதால் பெரிய வேலை இல்லை. மார்கழி மாதக்கோலங்களுக்காக மட்டும் காலனி வாசலில் போடுவோம்.
கோலங்களை வகுப்பறையில் கூட நோட்டு புத்தகத்தில் போட்டு பயிற்சி எடுத்துக்கொள்வேன்.
மார்கழிமாதக்கோலத்திற்காக அம்மா புதுகைத்தென்றலின் அம்மாவைப்போலவே முதல் நாள் இரவில் பயிற்சி எடுத்துக்கொள்வதோடு அப்பாவோடு கலந்து என்ன என்ன நிறங்கள் கொடுக்கவேண்டும் என்றும் பேசிவைத்துக்கொள்வார்கள். சாணம் தெளித்து கோலமிட்ட பின் கலர் தூவ என்னை அழைப்பார்கள். அம்மாவைப்போல நேர்த்தியாக வராது .. நான் கலர் தூவிய இடங்களை அம்மாவின் அவுட்லைன் தான் சிறப்பாக்கும்..
காலையில் முதல் ஆளாக 4 மணிக்கே எழுந்து கோலமிடுவதே அம்மாவுக்கு வழக்கம் ஒரு நாள் சிறிது தாமதமாகிவிட்டாலும் வருந்துவார்கள்.33 மூன்று புள்ளியைக்கூட சின்னதாக அழகாக நேர்த்தியாகப்போடுவார்கள்.. நான் என் முறை வரும்போது ஏழு புள்ளிக்கோலத்தையே தள்ளித்தள்ளி வைத்து பெரியதாகக்காட்டிவிடுவேன்.
சின்னவயதில் நூல்கண்டில் சிக்கெடுப்பது மிக பிடித்த பொழுதுபோக்கு. புள்ளிக்கோலம் எனப்படும் சிக்குக்கோலம் எனக்கு அதிகம் வராது. இருந்தாலும் நூலில் சிக்கெடுப்பது போல இதிலும் ஆர்வம் உண்டு. அவ்வப்போது முயற்சிப்பேன். கிருஸ்துமஸ் தினங்களில் அம்மா போடும் கிருஸ்துமஸ் தாத்தா கோலம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அப்போதெல்லாம் கேமிரா இல்லாததால் படம் எடுத்துவைக்கவில்லை.
அம்மா வாழ்த்து அட்டைகளைக்கூட கோலமாக்கி போடுவார்கள்.சின்ன அளவில் ஒரு கார்ப்பெட் போல தோன்றும். இப்போது அவற்றை படமெடுத்து ஆல்பத்தில் வைப்பது பழக்கமாகி இருக்கிறது. உங்களுக்கு காண்பிப்பதற்கு டிஜிட்டலில் இனி தான் எடுக்கவேண்டும்.
தில்லியில் இருக்கும் 3 அடி வாசலில் 6 புள்ளி 5 புள்ளி கோலங்கள் மட்டும் தான் இடலாம். அதையும் குளிர் மற்றும் நேரமின்மை என்று காரணம் காட்டி கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும் சோம்பேறியாகிவிட்டேன் நான்.மகளுக்காக விழாக்காலங்களில் வழக்கம்போல கோலமிட்டு கலர் தூவுவதை வழக்க்மாக வைத்திருக்கிறேன்.
அம்மா எப்போதும் டிகாஷன் இறக்கியபின் காப்பித்தூளை காயவைத்து அதனை ப்ரவுன் கலருக்கு உபயோகப்படுத்துவார்கள்.
இரும்புக்கடையில் இருந்து ஒரு விதமான கருப்பு கலர் வாங்கி யானைக்கு நிஜமான யானைக்கலர் போடுவார்கள். அந்த அந்த கோலத்திற்கு அப்படியே அதன் நிறம் வரவேண்டும் என்பதில் மிக குறிப்பாக இருப்பார்கள். மான் கோலத்தன்றும் மஞ்சள் காவி என்று இரும்புக்கடையில் அப்பாவை வாங்கிவரச்சொல்லி வாசலில் நிஜமானே துள்ளி ஓடும்.
இரண்டு மூன்று நிறப்பொடிகளை வேறு வேறு விகிதங்களில் கலந்து அவ்வப்போது தேவையான ஒரு நிறத்தினை கொண்டுவந்து விடுவார்கள். கலர்ப்பொடிகளை வெள்ளைக்கோலமாவுடன் கலக்கும்போதே நிறம் வெளிறாமல் கலப்பதே ஒரு கலை. இப்போதெல்லாம் ஆற்றுமணலில் கலர் ஏற்றிய கோலமாவுகளை மதுரையில் இருந்து வாங்கிவருகிறார்கள். அது இன்னமும் எளிதாக அழகாக பரவுகிறது. இருந்தாலும் நாமே கலந்து செய்த அந்தக்காலம் போல வருமா?
புதுகைத்தென்றல் பதிவில் நான் பின்னூட்டம் போட்டதும் அவங்க என்னை டேக் பண்ணிட்டாங்க.. அதே பாணியைப் பின்பற்றி இந்த பதிவில் பின்னூட்டமிட்ட முதல் பெண் என்பதால் ராமலக்ஷ்மிக்கு டேக் பண்ணிட்டேன் :) ராமலக்ஷ்மி கோலம் பற்றி எழுதி அசத்துங்க பார்க்கலாம்.
மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
Showing posts with label நினைவலைகள். Show all posts
Showing posts with label நினைவலைகள். Show all posts
August 28, 2008
June 25, 2008
சாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட

(மு.கு)இந்தப் படத்தினைப்பற்றிய விவரம் பதிவு இறுதியில்.
குழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.
குழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"
பாடலை ரொம்ப நாளா நியாபகப்படுத்த முயன்று தோற்றுப்போனேன். பி.கே.பி அவர்களின் பதிவில் தற்செயலாகப் பார்த்து நினைவுக்கு வந்தது. இந்த பாடலைப் பற்றி எக்கச்சக்க பேர் எழுதி இருக்கிறார்கள்.
இந்த பாடலை வேகவேகமாக பாடி அதுவும் அந்த வாடிக்கை வரும் போது வாடிக்காய் என்று அடிப்பது போல முடிப்பேன். இப்போது மகன் அப்படித்தான் ஹிந்தி ரைம்ஸ் பாடுகிறான்.. என்னைபோலவோ..
சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது "மூக்குத்தி பூமேல காத்து " ரொம்ப எல்லாம் இல்லங்க பல்லவி மட்டும் தான்.
ஒரு முறை தம்பி தீபாவளிக்கு சாட்டை கொளுத்தனும்ன்னு கேட்டான். இப்ப இல்ல அப்பறம் ராத்திரிக்கு ன்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ.. அவன் ரொம்ப நேரம், சாட்ட ம்ம்ம்ம்.. சாட்ட... ம்ம்.. சாட்ட னு விடாம அழுதுட்டே இருந்தான்.அதை அப்படியே அவனுக்கு தெரியாமல் பதிவு செய்துட்டாங்க. இப்ப கேட்டா ஒரே சிரிப்பு தான்.
இது போல ஆச்சி தாத்தாக்களின் பேச்சுகளையும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கே என்று தேடத்தான் வேண்டும்.
இந்த் கொசுவத்திக்கேத்த ஒரு கொசுவத்தி ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது அதனை ஆவணப்படுத்த(!!!! :) ) வேண்டுமல்லவா..
April 4, 2007
அய்யோ வீடு ஆடுது!!!
நேற்று டில்லியில் நிலநடுக்கமாம் . சன் நியூஸ் ல கூட கேட்டிருப்பீங்களே . நான் உணர்ந்தேனான்னு கேக்கறீங்களா? அது நான் அடிக்கடி அப்படி உணர்வேன். அதுனால நியூஸ் ல வந்துதுன்னு சொல்லி விசாரிச்சீங்கன்னா தான் சரியா இருக்கும்.எப்ப எத்தனை மணிக்குன்னு நீங்களே சொல்லிடறதும் நல்லது. அப்பத்தான் எப்படி உணர்ந்தேன்னு சொல்ல வசதியா இருக்கும். எதுக்குன்னு பாக்கறீங்களா?
ஆறோ ஏழோ வருஷம் முன்ன நடந்தது அது . வெயில் காலத்துல அப்பல்லாம் கூலர் இருக்கும் வரவேற்பரையில் தூங்குவோம் . தரையில் விரித்து இருக்கும் மெத்தை . ராத்திரி 2 மணி இருக்கும் வீடு ஆடுது . எழுந்து உட்கார்ந்து பார்த்தாச் சின்னதா முன்னும் பின்னுமா ஒரு தொட்டில் ஆட்டறமாதிரியான ஆட்டம் டீவி ஸ்டேண்ட் மேல வச்சிருக்கற போட்டோ எல்லாம் ஆடி ஆடிப் பார்க்க பார்க்கவே முன்னாடி வந்து விழுந்து ஒடஞ்சிடுச்சு.
என்ன என்னன்னு யோசிக்கறதுக்குள்ள நின்னும் போச்சு. அப்புறம் தூக்கம் எங்க . ஒரே பயம் தான். அடுத்த நாள் ஊரிலேர்ந்து ஃபோன் மயம் தான். நிலநடுக்கமாமே ..டில்லி அதிகமா நிலநடுக்கம் வரும் இடமாமே ..இந்த பக்கம் மாத்தி வந்துடுங்க ..மாமனார் , அப்பா அம்மா , சித்தி , பெரியப்பா எல்லாம் கூப்பிட்டுச் சொல்லியாச்சு.
குண்டு வெடிப்பு மாதிரி இதுவும் ஒரு சாதாரண விஷயம் தான் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அன்னைலேர்ந்து தூக்கத்துல எழுந்து அய்யோ வீடு ஆடுதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அட மனுசன நிம்மதியாத் தூங்க விடறதுல்லயான்னு வீட்டுல பாவம் , ஒன்னும் ஆடல பேசாம தூங்குன்னு வாங்க.
ஒரு சில சமயம் குழந்தையத் தூக்கிட்டு கிளம்பிடுவேன் .
ஆடுனா மாதிரியே கனவு வருமோ தெரியாது. முழித்து இருக்கும் போது கூட தோணும். அதுவும் குஜராத் பூகம்பத்துக்கப்புறம் இன்னும் அதிகமாகிவிட்டது . ஒரு சின்ன பையில் குளிருக்கான போர்வை டார்ச் இப்படி குழந்தைக்கு அத்தியாவசமான பொருள் வைத்து [கதவு பக்கத்தில்] எடுத்துக் கொண்டு நிலநடுக்கும் வந்தால் ஓடக்கூடத் தயாராக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு ஒரு கதை படித்துத் தனியா நிர்க்கதியா அப்படி நம்ம குழந்தை நிக்குமோன்னு கவலையா ஆகிவிடும். மேல்மாடியில் இன்னோர் வீடு சொல்லாமலே எடுத்த மாடி வீட்டுக்காரியிடம் லஞ்சம் வாங்கியவன் தனி வீட்டில் இருப்பான் வீடு இடிந்தால் மாட்டுவது நாம் தானே என்றால் அவளுக்கு புரியவில்லை .
இத்தோடு ஐந்தாறு முறை பார்த்தாயிற்று . ஒரு முறை நன்றாகவே ஆடி வீட்டை விட்டு எல்லோரும் ஓடி கீழே போனபின் ஒருத்தர் சொல்கிறார் " நிற்க எதுங்க நல்ல இடம் கட்டிடம் இடிஞ்சா நடுவில் நாம நிக்கற இந்த இடத்துல தானே விழணும்" .
அடுத்து கொஞ்ச நாளுக்கு பானை ஆடுதா ஃபேன் ஆடுதான்னு பாத்துபாத்தே ஓடும். சும்மா தலை சுத்துனா கூட அது நிலநடுக்கமோன்னு பதட்டமாகிடும்.
நேத்து காலையில் கூட ஒரு மாதிரி இருந்தது. சே பழக்க தோஷம் நிலநடுக்கமெல்லாம் இல்லன்னு நானே சொல்லிக்கிட்டேன். யாராவது ஃபோன் பண்ணட்டும் பாத்துகலாம்ன்னு ...வந்துடுச்சே அம்மாகிட்ட இருந்து என்ன நிலநடுக்கமாமே .
அப்படியா எங்க இங்க டில்லியிலயா எத்தனை மணி இருக்கும், காலையில் எனக்கு என்னவோ தோணியது ஆனா சாப்பிட நேரமானதால் இருக்கும்ன்னு விட்டுட்டேன்.
என்ன மணி இருக்குமாம்?
எந்த நியூஸ்ல சொன்னான்?
ஆறோ ஏழோ வருஷம் முன்ன நடந்தது அது . வெயில் காலத்துல அப்பல்லாம் கூலர் இருக்கும் வரவேற்பரையில் தூங்குவோம் . தரையில் விரித்து இருக்கும் மெத்தை . ராத்திரி 2 மணி இருக்கும் வீடு ஆடுது . எழுந்து உட்கார்ந்து பார்த்தாச் சின்னதா முன்னும் பின்னுமா ஒரு தொட்டில் ஆட்டறமாதிரியான ஆட்டம் டீவி ஸ்டேண்ட் மேல வச்சிருக்கற போட்டோ எல்லாம் ஆடி ஆடிப் பார்க்க பார்க்கவே முன்னாடி வந்து விழுந்து ஒடஞ்சிடுச்சு.
என்ன என்னன்னு யோசிக்கறதுக்குள்ள நின்னும் போச்சு. அப்புறம் தூக்கம் எங்க . ஒரே பயம் தான். அடுத்த நாள் ஊரிலேர்ந்து ஃபோன் மயம் தான். நிலநடுக்கமாமே ..டில்லி அதிகமா நிலநடுக்கம் வரும் இடமாமே ..இந்த பக்கம் மாத்தி வந்துடுங்க ..மாமனார் , அப்பா அம்மா , சித்தி , பெரியப்பா எல்லாம் கூப்பிட்டுச் சொல்லியாச்சு.
குண்டு வெடிப்பு மாதிரி இதுவும் ஒரு சாதாரண விஷயம் தான் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அன்னைலேர்ந்து தூக்கத்துல எழுந்து அய்யோ வீடு ஆடுதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அட மனுசன நிம்மதியாத் தூங்க விடறதுல்லயான்னு வீட்டுல பாவம் , ஒன்னும் ஆடல பேசாம தூங்குன்னு வாங்க.
ஒரு சில சமயம் குழந்தையத் தூக்கிட்டு கிளம்பிடுவேன் .
ஆடுனா மாதிரியே கனவு வருமோ தெரியாது. முழித்து இருக்கும் போது கூட தோணும். அதுவும் குஜராத் பூகம்பத்துக்கப்புறம் இன்னும் அதிகமாகிவிட்டது . ஒரு சின்ன பையில் குளிருக்கான போர்வை டார்ச் இப்படி குழந்தைக்கு அத்தியாவசமான பொருள் வைத்து [கதவு பக்கத்தில்] எடுத்துக் கொண்டு நிலநடுக்கும் வந்தால் ஓடக்கூடத் தயாராக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு ஒரு கதை படித்துத் தனியா நிர்க்கதியா அப்படி நம்ம குழந்தை நிக்குமோன்னு கவலையா ஆகிவிடும். மேல்மாடியில் இன்னோர் வீடு சொல்லாமலே எடுத்த மாடி வீட்டுக்காரியிடம் லஞ்சம் வாங்கியவன் தனி வீட்டில் இருப்பான் வீடு இடிந்தால் மாட்டுவது நாம் தானே என்றால் அவளுக்கு புரியவில்லை .
இத்தோடு ஐந்தாறு முறை பார்த்தாயிற்று . ஒரு முறை நன்றாகவே ஆடி வீட்டை விட்டு எல்லோரும் ஓடி கீழே போனபின் ஒருத்தர் சொல்கிறார் " நிற்க எதுங்க நல்ல இடம் கட்டிடம் இடிஞ்சா நடுவில் நாம நிக்கற இந்த இடத்துல தானே விழணும்" .
அடுத்து கொஞ்ச நாளுக்கு பானை ஆடுதா ஃபேன் ஆடுதான்னு பாத்துபாத்தே ஓடும். சும்மா தலை சுத்துனா கூட அது நிலநடுக்கமோன்னு பதட்டமாகிடும்.
நேத்து காலையில் கூட ஒரு மாதிரி இருந்தது. சே பழக்க தோஷம் நிலநடுக்கமெல்லாம் இல்லன்னு நானே சொல்லிக்கிட்டேன். யாராவது ஃபோன் பண்ணட்டும் பாத்துகலாம்ன்னு ...வந்துடுச்சே அம்மாகிட்ட இருந்து என்ன நிலநடுக்கமாமே .
அப்படியா எங்க இங்க டில்லியிலயா எத்தனை மணி இருக்கும், காலையில் எனக்கு என்னவோ தோணியது ஆனா சாப்பிட நேரமானதால் இருக்கும்ன்னு விட்டுட்டேன்.
என்ன மணி இருக்குமாம்?
எந்த நியூஸ்ல சொன்னான்?
March 6, 2007
ரேடியோ டேப்ரெக்கார்டர்
பாடல்கள் என்றால் ஒரு அளவுக்கு இல்லாமல் பயித்தம் பிடித்து அலைபவள் நான் . எங்கள் வீட்டில் டி.வி. வாங்கியபோது நான் 11 ம் வகுப்பு . அதற்கு முன்பு வரை என் தோழி ரேடியோ தான்.
எங்கள் வீட்டில் பெரிய பேட்டரி ரெண்டு போடும் வண்ணம் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. நன்றாகவே பாடும். காலையில் மூன்று மதப் பாடல்களோடு விடியும். அதுவும் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.
இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும் அந்த ரேடியோவால் நியுஸ் கேட்பது தடைஆகிறது என்று முடிவெடுத்த அப்பா, ஒரு நாள் ஒரு குட்டி சோனி டேப் ரெக்கார்டருடன் சேர்ந்த ரேடியோ வாங்கி வந்தார்கள். 1200 ரூ.
குட்டியாக ஒல்லியாக கருப்பு கலரில் சும்மா சூப்பராக இருந்தது அந்த சோனி. அப்புறம் ஒரே கொண்டாட்டம் தான். பிடித்த பாடல் களை ரேடியோ விலிருந்து டேப் செய்வது நாங்களே பாடி பதிவு செய்து கேட்பது என்று ஒரே சந்தோஷம். பிள்ளை யார் சதுர்த்தியா பிள்ளையார் பாட்டாக பிடித்து வைத்துப் போடுவார்கள் அப்பா. பொங்கலா தை திருநாள் சினிமா பாட்டாக
சேர்த்து போடுவார்கள். எங்களிஷ்டம் ஆகிவிட்டது.

ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன தவறு நேர்ந்து வந்தது . சேர்ந்தார்ப் போல் ப்ளே பட்டனையும் அழிக்கும் பட்டனையும் அமுத்தி இருப்பார்கள் யாராவது . ஒரு முறை என் ஆச்சி "கொழுக்கட்டை அதிகம் தின்னைநாக்கி அப்புறம்" அப்படின்னு சொன்னது கூட பதிவாகிடுச்சு. எப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும் பிள்ளளயார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டிற்கு இடையில் ஆச்சி குரலும் அந்த வார்த்தையும் ஒரே சிரிப்பு தான்.
நாங்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை எல்லாம் பிடித்து வைத்து இப்போது கேட்டாலும் சிரிப்பு தான். வேரென்ன அசோகர் மரங்களை நட்டார் தான். சிலோன் ரேடியோ நல்ல நல்ல பாட்டா போடுவாங்க. ஆனா என்ன ஒரு பாட்டோட ஆரம்பம் போட்டுட்டு நடுவில் வந்து அவங்க கொஞ்சம் வர்ணனை சொல்லிட்டு ப் போவாங்க ...பதிவு பண்ண சிரமமா இருக்கும்.
அப்படியும் பழய பாடல் , ஹிந்திப் பாடல் களை அதிலிருந்து பதிவு செய்திடுவேன்.
கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். ரேடியோவில் ஒரு முறை ராமாயணம் நாடக விழாவில் போட்டார்கள் அப்பா அதைப் பூராவும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
எத்தனையோ இரவில் பாட்டு கேட்டபடி தூங்கிப் போயிருப்பேன் அனைக்க மறந்து , அப்பா வந்து அனைத்து , மேலே எடுத்து வைத்திருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பா இல்லையென்றால் ஊருக்கே கேட்கும்படி பாட்டை அலறவிட்டு கேட்போம். ஆமா அந்த குட்டி ஸ்பீக்கரில் கேட்டதுக்கே அப்போ அப்படி சொன்னாங்க இன்னைக்கு இருக்கும் ஸ்டீரியோ செட்டில் என் பிள்ளைங்க க்ரேஸிக்கியாரே அலறி அடிக்கறத கேட்டா என்ன சொல்லுவாங்களோ.
டீவி வாங்கியும் அந்த க்ரேஸ் போகல . டி.வி. ல அப்போல்லாம் etc ன்னு நினைக்கிறேன் . ஹிந்திப் பாட்டா போடுவான். சின்ன சோனிக்கு கூடுதல் இணைப்பெல்லாம் குடுத்து டி.வி. ஸ்பீக்கர் பக்கத்தில் வைத்துப் பாட்டைப் பிடிப்பேன். இன்று பெரிய செட் வாங்கி வைத்திருந்தாலும் அதன் துல்லியமெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இடம் விட்டு இடம் நகர்த்த முடியாதது தான் எனக்கு பிடிக்கவில்லை. வாங்கும் போது கூட வந்த மாமானார் என் கிட்ட அந்த காலத்துல 1500 ரூ வாக்மேன் வாங்க உண்ணாவிரதம் இருந்தான் இன்னைக்கு 17,000 போட்டு வாங்கறான் என்று சந்தோஷப்பட்டது தனிக்கதை.
எனக்கென்று ஒன்று சின்னதாக கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சமையல் அறையோ , மற்ற வேலையோ பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது.
எங்கள் வீட்டில் பெரிய பேட்டரி ரெண்டு போடும் வண்ணம் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. நன்றாகவே பாடும். காலையில் மூன்று மதப் பாடல்களோடு விடியும். அதுவும் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.
இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும் அந்த ரேடியோவால் நியுஸ் கேட்பது தடைஆகிறது என்று முடிவெடுத்த அப்பா, ஒரு நாள் ஒரு குட்டி சோனி டேப் ரெக்கார்டருடன் சேர்ந்த ரேடியோ வாங்கி வந்தார்கள். 1200 ரூ.
குட்டியாக ஒல்லியாக கருப்பு கலரில் சும்மா சூப்பராக இருந்தது அந்த சோனி. அப்புறம் ஒரே கொண்டாட்டம் தான். பிடித்த பாடல் களை ரேடியோ விலிருந்து டேப் செய்வது நாங்களே பாடி பதிவு செய்து கேட்பது என்று ஒரே சந்தோஷம். பிள்ளை யார் சதுர்த்தியா பிள்ளையார் பாட்டாக பிடித்து வைத்துப் போடுவார்கள் அப்பா. பொங்கலா தை திருநாள் சினிமா பாட்டாக
சேர்த்து போடுவார்கள். எங்களிஷ்டம் ஆகிவிட்டது.

ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன தவறு நேர்ந்து வந்தது . சேர்ந்தார்ப் போல் ப்ளே பட்டனையும் அழிக்கும் பட்டனையும் அமுத்தி இருப்பார்கள் யாராவது . ஒரு முறை என் ஆச்சி "கொழுக்கட்டை அதிகம் தின்னைநாக்கி அப்புறம்" அப்படின்னு சொன்னது கூட பதிவாகிடுச்சு. எப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும் பிள்ளளயார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டிற்கு இடையில் ஆச்சி குரலும் அந்த வார்த்தையும் ஒரே சிரிப்பு தான்.
நாங்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை எல்லாம் பிடித்து வைத்து இப்போது கேட்டாலும் சிரிப்பு தான். வேரென்ன அசோகர் மரங்களை நட்டார் தான். சிலோன் ரேடியோ நல்ல நல்ல பாட்டா போடுவாங்க. ஆனா என்ன ஒரு பாட்டோட ஆரம்பம் போட்டுட்டு நடுவில் வந்து அவங்க கொஞ்சம் வர்ணனை சொல்லிட்டு ப் போவாங்க ...பதிவு பண்ண சிரமமா இருக்கும்.
அப்படியும் பழய பாடல் , ஹிந்திப் பாடல் களை அதிலிருந்து பதிவு செய்திடுவேன்.
கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். ரேடியோவில் ஒரு முறை ராமாயணம் நாடக விழாவில் போட்டார்கள் அப்பா அதைப் பூராவும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
எத்தனையோ இரவில் பாட்டு கேட்டபடி தூங்கிப் போயிருப்பேன் அனைக்க மறந்து , அப்பா வந்து அனைத்து , மேலே எடுத்து வைத்திருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பா இல்லையென்றால் ஊருக்கே கேட்கும்படி பாட்டை அலறவிட்டு கேட்போம். ஆமா அந்த குட்டி ஸ்பீக்கரில் கேட்டதுக்கே அப்போ அப்படி சொன்னாங்க இன்னைக்கு இருக்கும் ஸ்டீரியோ செட்டில் என் பிள்ளைங்க க்ரேஸிக்கியாரே அலறி அடிக்கறத கேட்டா என்ன சொல்லுவாங்களோ.
டீவி வாங்கியும் அந்த க்ரேஸ் போகல . டி.வி. ல அப்போல்லாம் etc ன்னு நினைக்கிறேன் . ஹிந்திப் பாட்டா போடுவான். சின்ன சோனிக்கு கூடுதல் இணைப்பெல்லாம் குடுத்து டி.வி. ஸ்பீக்கர் பக்கத்தில் வைத்துப் பாட்டைப் பிடிப்பேன். இன்று பெரிய செட் வாங்கி வைத்திருந்தாலும் அதன் துல்லியமெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இடம் விட்டு இடம் நகர்த்த முடியாதது தான் எனக்கு பிடிக்கவில்லை. வாங்கும் போது கூட வந்த மாமானார் என் கிட்ட அந்த காலத்துல 1500 ரூ வாக்மேன் வாங்க உண்ணாவிரதம் இருந்தான் இன்னைக்கு 17,000 போட்டு வாங்கறான் என்று சந்தோஷப்பட்டது தனிக்கதை.
எனக்கென்று ஒன்று சின்னதாக கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சமையல் அறையோ , மற்ற வேலையோ பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது.
February 23, 2007
மிடி,மேக்ஸி, ஜீன்ஸ் குர்தா
அப்போல்லாம் கவுனு,மிடி, மேக்ஸியும் தான் ஃபேஷன்.
மாமா அவங்க பேண்ட் ஐ மிடியாக்கி தச்சு தருவாங்க.அதுக்கு மேலே போட ஆம்பளைங்க போல
முழுக்கை வச்ச கட்டம் போட்ட சட்டை. கீழே உள்ளது கருப்போ சிவப்போ கொஞ்சம் நிறம் அடர்த்தியா மேலே உள்ளது வெள்ளையில் மிடியின் நிறத்தில் கோடு போட்டதாக இருக்கும்.
மேக்ஸி போட்டா இந்த பூந்தளிர்
பைகோ கிளாசிக் ல் படித்த ஷேக்ஸ்பியர் அப்புறம் சார்லஸ் கதையில் வரும் இங்கிலாந்து , ரஷ்ய பேரரசிகள் போல தோற்றமளிப்பதாக தோன்றும். பாதம் வரை வரும் அடுக்குகளும் முழுக்கை மூடிய பஞ்சு போன்ற ஆடை .மேக்ஸியில் ரெட்டை சடையை முன்னால் போட்டால் ரெபக்கா . சிறுமியா இருக்கும் போது இது எல்லாம்.
கொஞ்சநாள் அப்புறமா சுடிதார் வழக்கம் வந்த போது ஆச்சி பேத்திகளை இல்லை இல்லை தாவணி தான் போடணும் என்றார்கள் . வீட்டில் கல்யாணம் வந்தால் வாங்கும் பட்டு பாவாடை தாவணி தவிரவும் மாமா முறை ஆச்சி முறைக்கு வரும் தாவணி தவிர வேறு வாங்கவே இல்லை . நன்றாகத்தான் இருக்கும் கட்டினால் ஆனால் யார் அதைப்போட்டு கொண்டு பஸ் ஏறி மற்றவர் கண் பார்வையில் விழாமல் போவது.
நைட்டியா என்னவொரு அங்கி என்று ஒன்றை சுற்றிக்கொண்டு என்பார்கள். ஊருக்கு போனால் பெரியவர்களின் பாட்டுக்களை கண்டும் காணாமல் போய்விடுவது தான். அதே ஆச்சி வயசுக்காலத்தில் தில்லிக்கு வந்துட்டு என் மருமகளுக்கு நைட்டி ரெண்டு வாங்கித்தா, பேத்திகளுக்கு சுடிதார் வாங்கித்தா வந்ததுக்கு நியாபகமா அவங்களுக்கு எதாச்சும் வாங்கிப்போனும்
என்ற போது நாங்கள்ளாம் அந்த காலத்துல வாங்கின
பாட்டு நியாபகம் வந்தது, தவிர்க்க முடியாமல்.
ஜீன்ஸ் போடனுங்கறது ஒரு கனவு. ஒருமுறை கல்லூரி சுற்றுலாவில் தோழியின் ஜீன்ஸ் போட்டு புகைப்படம் எடுத்தோம் . அது எதோ குளறுபடியாகி சரியாக வரவில்லை. அம்மாவுக்கு தான் சந்தோஷம் . நல்லவேளை விழலை.இதெல்லாம் கல்யாணம் ஆகி அந்த வீட்டில் வச்சுக்கோ. ஹ்ம். என்ன ஒரு பயம் பாருங்க.
ஏதோ பரவாயில்லை. கல்யாணத்துக்கு பெட்டிபெட்டியா
குடுத்த புடவை எல்லாம் ரிடன் ஃகிப்டா அம்மாவுக்கும் மாமியாருக்கும் போயாச்சு. இங்க சுடிதார் தான்.
தலைவர் நம்ம நாலரை அடிக்கு அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. ஜீன்ஸ் கனவும் நிறைவேறிடிச்சு. ஜீன்ஸ்ஸும் குர்தாவும் சீருடை ஆகிவிட்டது.
இப்போது அம்மா மூச் ...பேச முடியுமா என்ன.
காலம் மாற மாற உடைகளும் நாகரீகமும் மாறுகிறது.
அன்று கூடாது என்றது இன்று வழக்கமாகிவிட்டது. இன்று
நான் படித்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். என்ன எளிதாக சைக்கிள் ஓட்டி போகிறார்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
மாற்றங்களின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இப்படி தோன்றுவது சகஜம் தானே.
மாமா அவங்க பேண்ட் ஐ மிடியாக்கி தச்சு தருவாங்க.அதுக்கு மேலே போட ஆம்பளைங்க போல
முழுக்கை வச்ச கட்டம் போட்ட சட்டை. கீழே உள்ளது கருப்போ சிவப்போ கொஞ்சம் நிறம் அடர்த்தியா மேலே உள்ளது வெள்ளையில் மிடியின் நிறத்தில் கோடு போட்டதாக இருக்கும்.மேக்ஸி போட்டா இந்த பூந்தளிர்
பைகோ கிளாசிக் ல் படித்த ஷேக்ஸ்பியர் அப்புறம் சார்லஸ் கதையில் வரும் இங்கிலாந்து , ரஷ்ய பேரரசிகள் போல தோற்றமளிப்பதாக தோன்றும். பாதம் வரை வரும் அடுக்குகளும் முழுக்கை மூடிய பஞ்சு போன்ற ஆடை .மேக்ஸியில் ரெட்டை சடையை முன்னால் போட்டால் ரெபக்கா . சிறுமியா இருக்கும் போது இது எல்லாம்.
கொஞ்சநாள் அப்புறமா சுடிதார் வழக்கம் வந்த போது ஆச்சி பேத்திகளை இல்லை இல்லை தாவணி தான் போடணும் என்றார்கள் . வீட்டில் கல்யாணம் வந்தால் வாங்கும் பட்டு பாவாடை தாவணி தவிரவும் மாமா முறை ஆச்சி முறைக்கு வரும் தாவணி தவிர வேறு வாங்கவே இல்லை . நன்றாகத்தான் இருக்கும் கட்டினால் ஆனால் யார் அதைப்போட்டு கொண்டு பஸ் ஏறி மற்றவர் கண் பார்வையில் விழாமல் போவது.
நைட்டியா என்னவொரு அங்கி என்று ஒன்றை சுற்றிக்கொண்டு என்பார்கள். ஊருக்கு போனால் பெரியவர்களின் பாட்டுக்களை கண்டும் காணாமல் போய்விடுவது தான். அதே ஆச்சி வயசுக்காலத்தில் தில்லிக்கு வந்துட்டு என் மருமகளுக்கு நைட்டி ரெண்டு வாங்கித்தா, பேத்திகளுக்கு சுடிதார் வாங்கித்தா வந்ததுக்கு நியாபகமா அவங்களுக்கு எதாச்சும் வாங்கிப்போனும்
என்ற போது நாங்கள்ளாம் அந்த காலத்துல வாங்கின
பாட்டு நியாபகம் வந்தது, தவிர்க்க முடியாமல்.
ஜீன்ஸ் போடனுங்கறது ஒரு கனவு. ஒருமுறை கல்லூரி சுற்றுலாவில் தோழியின் ஜீன்ஸ் போட்டு புகைப்படம் எடுத்தோம் . அது எதோ குளறுபடியாகி சரியாக வரவில்லை. அம்மாவுக்கு தான் சந்தோஷம் . நல்லவேளை விழலை.இதெல்லாம் கல்யாணம் ஆகி அந்த வீட்டில் வச்சுக்கோ. ஹ்ம். என்ன ஒரு பயம் பாருங்க.
ஏதோ பரவாயில்லை. கல்யாணத்துக்கு பெட்டிபெட்டியா
குடுத்த புடவை எல்லாம் ரிடன் ஃகிப்டா அம்மாவுக்கும் மாமியாருக்கும் போயாச்சு. இங்க சுடிதார் தான்.
தலைவர் நம்ம நாலரை அடிக்கு அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. ஜீன்ஸ் கனவும் நிறைவேறிடிச்சு. ஜீன்ஸ்ஸும் குர்தாவும் சீருடை ஆகிவிட்டது.
இப்போது அம்மா மூச் ...பேச முடியுமா என்ன.
காலம் மாற மாற உடைகளும் நாகரீகமும் மாறுகிறது.
அன்று கூடாது என்றது இன்று வழக்கமாகிவிட்டது. இன்று
நான் படித்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லாம் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். என்ன எளிதாக சைக்கிள் ஓட்டி போகிறார்கள். பொறாமையாகத்தான் இருக்கிறது.
மாற்றங்களின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இப்படி தோன்றுவது சகஜம் தானே.
January 17, 2007
சுனாமி சிடி
இந்த கடலா எண்ணற்ற உயிர்களை கேட்டது என்று ஆச்சரியம் படும் வகையில் இருந்தது. குளத்தில் காற்றால் ஏற்படும் சிற்றலைபோல கால்களை நனைத்து சென்றன கடல் அலைகள் . வேளாங்கன்னி செல்லும் எண்ணம் வந்தபோதே சுனாமி தான் கண் முன் வந்து நின்றது. அந்த மணலை மிதிக்கும் போது மனம் பதைப்பாய் தான் இருந்தது.
வீழ்ந்தால் எழும் சக்தியும் ,
வீழ்ச்சியை வெற்றியாக்கும் திடமும் ,
சுற்றிப் பார்த்து திரும்பும் போது எனக்குள்ளும் சிறிது .
சுனாமியால் இறந்தோருக்கான நினைவுத்தூண்.
இன்னமும் கட்டி முடியாத மாற்றுகுடியிருப்புகள்.
இந்த கடைகள் எல்லாம் தானே தண்ணீரில் மிதந்தது , பார்க்கும் கடைத்தெருவும் அதையே நினைவு படுத்தியது. நான்கைந்து கடைகளுக்கு ஒன்றாக வருகிற மாதா பாடல்கள் விற்கின்ற கடைகளில் எல்லாம் சுனாமிலைவ் சிடி விற்பனை க்கு என்னும் விளம்பரம். எது அவர்களுக்கு துன்பம் தந்ததோ அதையே சாதகமாக்கி வியாபாரம் செய்கிறார்கள்.வீழ்ந்தால் எழும் சக்தியும் ,
வீழ்ச்சியை வெற்றியாக்கும் திடமும் ,
சுற்றிப் பார்த்து திரும்பும் போது எனக்குள்ளும் சிறிது .
சுனாமியால் இறந்தோருக்கான நினைவுத்தூண்.
January 10, 2007
கடவுள் நேராக வருவாரா?
மருந்துக்கடையில் சீட்டை தந்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் பக்கத்துக்கடையில் ஏதோ வாங்க வந்தார்கள். கல்லூரி செல்லும் வயதுடைய பெண் கூட நடுவயது பெண்மணி . எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஆனா பேர் வரமாட்டேங்குது . போய் கேட்க யோசிக்கும்போது அவங்களும்
உத்துப் பார்க்கிறதால் நம்மள அவங்க அடையாளம் கண்டுபிடிச்சிட்டாங்க, மேற்கொண்டு பேசினால் தெரிந்துவிடும் என்ற தைரியம் வந்துவிட்டது.
எப்படி இருக்கப்பா நல்லா இருக்கியா? இது யாரு வீட்டுக்காரரா என்னா மூணு பிள்ளைங்களா? இல்ல இல்ல அது யாரோ வாங்க வந்தவங்க பிள்ளை போல இது பொண்ணு அவங்க கையில் தூங்கறது பையன்.அப்படியா தம்பி எங்க இப்போ ? அவனா கல்யாணமாகி சென்னையில் தான். நல்லது ஜெமிலா வீட்டுக்கு போறதுண்டா ? ஆங் இப்போ தான் பேர் நியாபகம் வருது இவங்க விமலாவோட சித்தி. இது அவங்க பொண்ணு ரீனா.
இல்லைங்க விமலா இல்லாத வீட்டுக்கு போக எனக்கு மனசே வரமாட்டங்குது. அவங்க அம்மா அப்பாவ பார்த்தா சண்டைபோடனும் போல இருக்கு ஆனா முடியல.நம்ம போகம இருக்கிறது கூட ஒரு வகையில் விமலா இன்னும்
உயிருடன் இருப்பதாக நினைக்க உதவுமே .
நீங்கள்ளாம் ஒரு குடும்பம் மாதிரி இருந்தீங்க காலனியில். இப்போ எங்களுக்கு கூட அதிகம் ஒட்டு இல்லப்பா.என்ன பண்ண கடவுள் பக்தி இப்படி கண்ணை மறச்சிருச்சே.
ஆமா அந்த குட்டி எப்படி இருக்கா விமலா தங்கச்சி ..
என்ன குட்டி யா நல்லா சொன்னே அது அவங்க அம்மா ஜெமிலா மாதிரி இருக்கு இப்போ. ஆனா காதுல கையில எதுவும் போடாம இருக்கு. சங்கடமா இருக்கு.
ஆமாங்க . எங்க வீடு தான் எப்போதும் ரெண்டு பேருக்கும். கடவுள் என்ன நேரிலா வருவார் இந்த காலத்தில். டாக்டர் மூலமா தான் சரி செய்வார்.
பாருங்க உங்க மதமாகட்டும் எங்கமதமாகட்டும் எல்லாம் அப்படி தானே சொல்லுது. சரிங்க நேரமாகிடுச்சு அப்புறம் பாப்போம்.
ஆட்டோவில் வரும் போது விமலா தான் மனசெல்லாம்.உன்னை ஒருத்தங்க அடையாளாம்
கண்டு பேசிட்டாங்களே உன் ஊரில, கிண்டலாக ஆரம்பித்த கணவர்கிட்ட இவங்க விமலா வோட சித்தி .விமலா பக்கத்துவீட்டுல இருந்த பொண்ணுங்க. அவளுக்கு ருமாட்டிக் ஜுரம் வந்துச்சு. இங்க காட்டி இதுதான்னு தெரிஞ்சதும் சென்னை கூட்டி போக சொன்னாங்க..அவங்க மதத்துலயே தீவிரமான ஒரு மார்க்கத்துக்கு மாறி இருந்த நேரம். கடவுள் நோய் தருவது அவர்களை தன் கிட்ட சீக்கிரமே அழைக்கிறதுக்கு தான் அதனால் அதை தடுக்கும் மருந்து டாக்டர் இவங்க பக்கம் திரும்பி பாக்க மாட்டோம்ன்னு பிடிவாதம் பிடிச்சாங்க அவங்க அம்மா அப்பா.
எலும்பும் தோலும் மட்டும் இருக்க தலையணை முட்டு கொடுத்து உட்காரும் நிலையில் இருந்த அவளை பாக்க போனப்ப கூட அம்மா இங்க பாரு அங்க போய் டாக்டர் கிட்ட போறது பத்தி மட்டும் பேசாதே பிரசங்கமே செய்வாங்கன்னு சொல்லி தான் கூட்டிபோனாங்க.அப்புறம் அவ இறந்த செய்தி தான் கேட்டேன்.
கடவுள் டாக்டருடைய முகவரியை தான் தருவார். அவருக்கு செய்யும் திறமையை தருவார். ஆனால் எந்த கடவுளும் போதும் வாழ்ந்தது வா என்று அழைப்பாரா தெரியவில்லை.
இன்னும் இருக்கிறாள் கண்ணுக்குள். அலங்காரம் செய்து
ஒரு புது பூவைப் போல வருவாள். 6வது தான் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனை கனவு கொண்டிருந்தாயோ விமலா?//
December 17, 2006
காதலுக்கு பலியான தோழிகள்
கல்லூரியில் இதுதான் என் வட்டம் என்று இல்லாமல் எல்லாரையும் என்னுயிர் தோழியராய் பார்த்தவள் நான். யாரிடமும் உன் வட்டத்தில் எத்தனை பேர் என்றால் எல்லாருடைய வட்டத்திலும் என் பெயரிருக்கும். நாங்கள் கல்லூரி முடித்ததும் வருடத்திற்கு ஒருமுறை எல்லாரும் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால் சில தோழிகள் இன்று நம்முடன் இல்லை என்பது மீண்டும் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
பருவத்தில் காதல் வரும். ஆனால் அது வாழ்க்கையை புரட்டி போடும் என்று சிலருக்கு தெரியாது. அவள் அதிர்ந்து பேசி யாரும் பார்த்தது இல்லை. கல்லூரியின் கடைசி நாள். யாரிடமும் சொல்லாமல் அவள் கிளம்பிய போது ஏதோ பிரியும் சங்கடம் என்று நினைத்தோம். ஆனால் அவள் அன்றே தன் காதலனை திருமணம் முடிக்க எண்ணி இருந்திருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. காதலுக்கு துணை போகும் எவரும் கல்யாணத்துக்கு தைரியம் தரமாட்டார்கள் என்று எண்ணி இருப்பாள். உண்மை தான் ..யாரும் துணை போயிருக்கமாட்டோம். சம்மதத்திற்கு காத்திருக்க சொல்லி இருப்போம், என்று அவளறிவாள்.
கல்யாணத்திற்கு பின் காதல், முன்பிருப்பது போல் நல்லவற்றை மட்டும் காட்டுவதில்லை. குடிபழக்கம் உடையவனாக இருந்திருக்கிறான். தன்னையே கதி என்று வந்தவள் சொல்வதை ஏன் கேட்க போகிறான் அவன். இவளும் தான் தற்கொலை செய்து கொள்வதாய் பலமுறை மிரட்டி இருக்கிறாள்.. பலனேதும் இல்லாத போது மனம் உடைந்து ஒரு நாள் தன் மீதே எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவள் எரிய, காப்பற்ற முயற்சித்த அவன் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டான்.
வாழ்க்கையில் எப்போதெல்லாம் காத்திருந்து தன் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமோ அப்போதெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்தாள்.
தானே முடிவெடுத்து செய்து கொண்டோமே யாரிடம் சொல்லி தேற்றிக்கொள்வது என்று தன்னையே நொந்து கொண்டு போய்விட்டாள்.
காதலில் வெற்றி, கல்யாணத்தில் முடிந்தது.ஆனால் வாழ்க்கையில் தோல்வி.
யாராவது ஒரு பக்கத்து மனிதர்கள் துணையாவது இருந்தால் அவளுக்கு இப்படி நேர்ந்திருக்குமா?
காதலென்னும் வெறும் வார்த்தையினால் வாழ்க்கையிழந்தவரும் இருக்கிறார்கள். நட்புக்கும் காதலுக்கும் வேற்றுமை அறியாத பெற்றோரின் கேள்விக்கணைக்கு வெட்கப்பட்டு
வாழ்வதையே விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்னும் இருவர்..
பள்ளியிலோ கல்லூரியிலோ ஆண்களுடன் படிக்க விடுவதாலேயே நட்புடன் பழகுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்க முடிவதில்லை. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க பயந்தோ, இனி எப்படி இவர்கள் முகத்தில் விழிப்பது என்று வெட்கப்பட்டோ தன்னையே மாய்த்துக்கொண்டார்கள். மென்மையான குணம்கொண்ட அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்தார்கள் என்று இன்றும் எனக்கு புரியவில்லை.
காதலை தவறு என்றும், அது அவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகமென்றும் சமூகம் நினைக்கும் வரை இவர்களைப் போல் இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்கவேண்டும் நாம்?
பருவத்தில் காதல் வரும். ஆனால் அது வாழ்க்கையை புரட்டி போடும் என்று சிலருக்கு தெரியாது. அவள் அதிர்ந்து பேசி யாரும் பார்த்தது இல்லை. கல்லூரியின் கடைசி நாள். யாரிடமும் சொல்லாமல் அவள் கிளம்பிய போது ஏதோ பிரியும் சங்கடம் என்று நினைத்தோம். ஆனால் அவள் அன்றே தன் காதலனை திருமணம் முடிக்க எண்ணி இருந்திருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. காதலுக்கு துணை போகும் எவரும் கல்யாணத்துக்கு தைரியம் தரமாட்டார்கள் என்று எண்ணி இருப்பாள். உண்மை தான் ..யாரும் துணை போயிருக்கமாட்டோம். சம்மதத்திற்கு காத்திருக்க சொல்லி இருப்போம், என்று அவளறிவாள்.
கல்யாணத்திற்கு பின் காதல், முன்பிருப்பது போல் நல்லவற்றை மட்டும் காட்டுவதில்லை. குடிபழக்கம் உடையவனாக இருந்திருக்கிறான். தன்னையே கதி என்று வந்தவள் சொல்வதை ஏன் கேட்க போகிறான் அவன். இவளும் தான் தற்கொலை செய்து கொள்வதாய் பலமுறை மிரட்டி இருக்கிறாள்.. பலனேதும் இல்லாத போது மனம் உடைந்து ஒரு நாள் தன் மீதே எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவள் எரிய, காப்பற்ற முயற்சித்த அவன் மட்டும் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டான்.
வாழ்க்கையில் எப்போதெல்லாம் காத்திருந்து தன் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமோ அப்போதெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்தாள்.
தானே முடிவெடுத்து செய்து கொண்டோமே யாரிடம் சொல்லி தேற்றிக்கொள்வது என்று தன்னையே நொந்து கொண்டு போய்விட்டாள்.
காதலில் வெற்றி, கல்யாணத்தில் முடிந்தது.ஆனால் வாழ்க்கையில் தோல்வி.
யாராவது ஒரு பக்கத்து மனிதர்கள் துணையாவது இருந்தால் அவளுக்கு இப்படி நேர்ந்திருக்குமா?
காதலென்னும் வெறும் வார்த்தையினால் வாழ்க்கையிழந்தவரும் இருக்கிறார்கள். நட்புக்கும் காதலுக்கும் வேற்றுமை அறியாத பெற்றோரின் கேள்விக்கணைக்கு வெட்கப்பட்டு
வாழ்வதையே விரும்பாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் இன்னும் இருவர்..
பள்ளியிலோ கல்லூரியிலோ ஆண்களுடன் படிக்க விடுவதாலேயே நட்புடன் பழகுவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்க முடிவதில்லை. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க பயந்தோ, இனி எப்படி இவர்கள் முகத்தில் விழிப்பது என்று வெட்கப்பட்டோ தன்னையே மாய்த்துக்கொண்டார்கள். மென்மையான குணம்கொண்ட அவர்கள் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்தார்கள் என்று இன்றும் எனக்கு புரியவில்லை.
காதலை தவறு என்றும், அது அவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகமென்றும் சமூகம் நினைக்கும் வரை இவர்களைப் போல் இன்னும் எத்தனை இழப்புகளை பார்க்கவேண்டும் நாம்?
December 13, 2006
பஜ்ஜி விளையாட்டு
குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது இந்த பஜ்ஜி பஜ்ஜின்னு ஒன்னு இருக்குமே அதைக் கொஞ்சம் கண்ணுல காட்டறதுன்னு கணவர் கேட்கும் போதுதான் சரி செய்வோமேன்னு தோணும். சமைப்பது முழுநேரப் பொழுது போக்காகி விட்ட இப்போது பஜ்ஜி செய்யணும் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை.
ஆனால் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது [மத்தவங்க என்னைவிட சின்னவங்க] எல்லாரும் கூட்டாஞ்சாதம் செய்து விளையாடுவார்களே அது போல பஜ்ஜி செய்தோம் நாங்கள்.. காலனியில் இருந்த குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில், [ அதிகமில்லை பத்திலிருந்து இருபத்தைந்து பைசா ]
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம்.
கொஞ்சம் சேர்த்ததும்...ரெண்டு பேர் போய் கடையிலிருந்து பொறிக்க கொஞ்சம் எண்ணெய், கடலைமாவு வாங்கி வந்தாங்க. வெங்காயம் மட்டும் வீட்டில் எடுத்து வந்தாள் ஒருத்தி. மொட்டை மாடியில் கொஞ்சம் கல் வைத்து, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி , எரிக்க தென்னை ஓலை . ஆம்பள பசங்க நாங்க தான் சமைப்போம்ன்னு ஒரே அடம்வேற. ஒரு வழியா பஜ்ஜி சுட்டோம் பெரிய சாதனை மாதிரி.
நாங்கள் சாப்பிட்டது போக வீட்டுக்கு ஒன்று என்று சுவை பார்க்க கொண்டு போனோம். ஆமா உன்னவிட சின்னவ எதிர் வீட்டு பலகாரகடைகாரங்க பொண்ணு கடை பாத்திரமெல்லாம் அண்டா அண்டாவா கழுவி சமையலுக்கும் உதவி செய்யுறா. ஆனா நல்லாதான் இருக்கு பஜ்ஜின்னு சொன்னாங்க அம்மா. பின்ன சாப்பிட மட்டும் தானே எட்டி பார்ப்பேன் சமையல்கட்டில்.
ஆனால் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது [மத்தவங்க என்னைவிட சின்னவங்க] எல்லாரும் கூட்டாஞ்சாதம் செய்து விளையாடுவார்களே அது போல பஜ்ஜி செய்தோம் நாங்கள்.. காலனியில் இருந்த குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில், [ அதிகமில்லை பத்திலிருந்து இருபத்தைந்து பைசா ]
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம்.
கொஞ்சம் சேர்த்ததும்...ரெண்டு பேர் போய் கடையிலிருந்து பொறிக்க கொஞ்சம் எண்ணெய், கடலைமாவு வாங்கி வந்தாங்க. வெங்காயம் மட்டும் வீட்டில் எடுத்து வந்தாள் ஒருத்தி. மொட்டை மாடியில் கொஞ்சம் கல் வைத்து, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி , எரிக்க தென்னை ஓலை . ஆம்பள பசங்க நாங்க தான் சமைப்போம்ன்னு ஒரே அடம்வேற. ஒரு வழியா பஜ்ஜி சுட்டோம் பெரிய சாதனை மாதிரி.
நாங்கள் சாப்பிட்டது போக வீட்டுக்கு ஒன்று என்று சுவை பார்க்க கொண்டு போனோம். ஆமா உன்னவிட சின்னவ எதிர் வீட்டு பலகாரகடைகாரங்க பொண்ணு கடை பாத்திரமெல்லாம் அண்டா அண்டாவா கழுவி சமையலுக்கும் உதவி செய்யுறா. ஆனா நல்லாதான் இருக்கு பஜ்ஜின்னு சொன்னாங்க அம்மா. பின்ன சாப்பிட மட்டும் தானே எட்டி பார்ப்பேன் சமையல்கட்டில்.
December 8, 2006
மேம்பாலம் போகலாமா?
எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.
அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.
மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.
பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.
தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது. இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.
இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.
முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.
அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.
மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.
பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.
தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது. இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.
இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.
முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.
November 27, 2006
அம்மாவும் பண்டிகையும்
பண்டிகை நாட்களில் அம்மா மேலும் அழகாகத் தோன்றுவார்கள்.புத்துணர்ச்சியோடு வேலைகளை செய்யும் போது மற்ற நாட்களை போல அல்லாமல் நாமும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுவார்கள். கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.
50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்....விபூதி குழைத்து விளக்கின் பக்கங்களில் வைத்து அவை காயும் முன் குங்குமம் அதன் மேல் வைத்து அழகு செய்து என்று தம்பியும் நானும் உதவி செய்யும் போதே அம்மா எங்களுக்கு சில விசயங்கள் சொல்வார்கள்.
அரிசி மாவினால் கோலங்கள் இடும் போது சிறு எறும்புக்கும் நாம் உதவியாக இருக்கவே அரிசி மாவுக் கோலம் இடுகிறோம். மஞ்சளில் கதவில்
பட்டைகள் இடும் போது மஞ்சள் கிருமி நாசினி அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நம் வீட்டில் நுழைவதிலிருந்து காக்கும்
என்று சொல்வார்கள்.
செவிக்கும் உணவளித்து பின் வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் .

50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்....விபூதி குழைத்து விளக்கின் பக்கங்களில் வைத்து அவை காயும் முன் குங்குமம் அதன் மேல் வைத்து அழகு செய்து என்று தம்பியும் நானும் உதவி செய்யும் போதே அம்மா எங்களுக்கு சில விசயங்கள் சொல்வார்கள்.
அரிசி மாவினால் கோலங்கள் இடும் போது சிறு எறும்புக்கும் நாம் உதவியாக இருக்கவே அரிசி மாவுக் கோலம் இடுகிறோம். மஞ்சளில் கதவில்
பட்டைகள் இடும் போது மஞ்சள் கிருமி நாசினி அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நம் வீட்டில் நுழைவதிலிருந்து காக்கும்
என்று சொல்வார்கள்.
சில கதைகளும் கிடைக்கும் பண்டிகை தினத்தில். அம்மா அரிசி மாவினை குழைத்து கை அச்சினை கதவின் மேல் பதிப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு ஒரு கதை.
மகாபலி வருடம் ஒரு முறை ஓணத்தன்று வருவதாய் கேரளத்தில் சொல்வது போல் கார்த்திகை அன்று வருவார் என்றும் அதற்காக கை பதிப்பது நம் பக்கத்து ஒரு நம்பிக்கை...என்பார்கள்.
கார்த்திகை மாதம் காற்று நிறைய இருக்கும் . தீய சக்தி இந்த அச்சினால் ஏதும் வீட்டில் வர அஞ்சும் என்றும் அவர்கள் பாட்டி காலத்து நம்பிக்கை ப் பற்றியும் சொல்வார்கள்.செவிக்கும் உணவளித்து பின் வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் .

Subscribe to:
Posts (Atom)