Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

April 18, 2013

காட்மண்டு – A mirror in the sky


Kathmandu a mirror in the sky
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் அதிகவித்தியாசமில்லையென்பதால் இக்கதையை இந்தியத்தன்மையோடு நாம் உணர்ந்துகொள்ளலாம். திரைப்படத்தை இசியார் பொலைன் என்னும் ஸ்பானிய பெண் இயக்குனர் இயக்கி இருக்கிறார். தன்னார்வ ஆசிரியப்பணி செய்ய காட்மண்டுவிற்கு வந்தவர், கல்வியாளர் விக்டோரியா சுபரைனா. .ஆசிரியப்பயிற்சி மற்றும் கல்விமுறைகளைப்பற்றி ஆய்வுகள், உடல்மொழி பற்றிய பாடங்கள் எனப்பலவற்றை பயின்ற Victoria Subirana தன் வாழ்வின் 25 ஆண்டுகளை நேபாளத்தில் எளியமக்களுக்காக செலவிட்டிருக்கிறார். Vicki Sherpa, a teacher in Kathmandu” என்கிற அவருடைய சுயசரிதையை அடிப்படையாக்கொண்டு அமைக்கப்பட்ட கதை.ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் 2011 ல் வெளிவந்த திரைப்படம்.

நேபாளத்தில் பள்ளிக்கல்வியின் மோசமான நிலை மற்றும் தண்டனை அளிக்கும் விதங்களைத் தவிர்த்து மாண்டிசோரி முறை போன்ற குழந்தை மையக் கல்வித் திட்டங்களைக் கொண்டுவரவிரும்பும் ஆசிரியை லயா. கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்காக பள்ளி தொடங்கும் முயற்சியில் ஆசிரியைக்கு நேரும் பல இடர்பாடுகளின் நடுவில் நமது நாடுகளின் ஏற்றத்தாழ்வுகளையும், ஊழல்களையும் ,பெண்ணடிமைத்தனத்தையும் கூடவே  அவருக்கு எதிர்பாரதவிதத்தில் அமையும் அன்பான வாழ்க்கையையும் அவ்வாழ்க்கைக்கும் குறிக்கோளுக்கும் இடையிலான போராட்டத்தையும் சொல்லும் கதை. ஒருபக்கம் நேபாளத்தின் நகரவாழ்க்கையின் வேறுபாடுகளும் மறுபக்கத்தில் அமைதியும் அழகும் அன்பும் மிகு மலைக்கிராமமும் பள்ளத்தாக்குகளும் கதைப்பயணத்தில் உண்டு.
“I wanted to tell the learning process of a woman, her journey by another culture, how it comes to arrogance, bump into this new society, but eventually learns to understand and respect rather than prejudge “says Bollaín .
லையாவாக வெரோனிகா செகுயி , (ஷர்மிளா) சௌம்யதா பட்டாரை, (நொப்ரு ஷிரிங்) ஷிரிங்
மற்றும் முனா தமி சங்கீதா தமங்க்
தனக்கென சில மாணவர்களையும் ஒரு உதவியாளராக ஷர்மிளாவையும் பெற்றுக்கொண்டு தான் வேலை செய்த பள்ளியிலேயே ஒருவகுப்பை தன் வழிமுறையில் நடத்த துவங்குகிறார் லயா.. வழக்கமாக குடிசைப்பகுதிகளில் களமிறங்கி வேலைசெய்வதென்றால் குளிப்பாட்டுதலில் இருந்து துவங்குவது போலவே, ஒரு சிறுவனின் தலையில் பேன் நிறைந்திருப்பதாகக் கூறி முடிதிருத்துபவரை அழைக்கிறார். அதை கவனிக்கும் ஷர்மிளா கோவத்தில் உன் நாட்டில் இருப்பவரிடமும் இதே போல நடப்பாயா? என்று கேட்கும்போது லயா தானும் கற்றுக்கொள்ளும் பாதையில் தான் இருக்கிறோம் என்று உணரத்தொடங்குகிறாள். சில கிழமைகளில் பிறந்தகுழந்தைகளுக்கு முடிநேர்ச்சைகள் இருந்ததால் அவர்களின் மதநம்பிக்கையை மதிக்காததாகக் கூறி சில பெற்றோர் பள்ளியில் வந்து பிரச்சனைசெய்கிறார்கள். லயாவின் சார்பாக பெற்றோர்களிடம் ஷர்மிளாவே அவர்களின் நம்பிக்கைக்காக பரிகாரம் செய்கிறோம் என்று பேசி சமாதானம் செய்துவைக்கிறாள்.
பரிகாரம் செய்கிற நாளில் ஷர்மிளா தான் திருமணமான நாளிலிருந்து நான்குவருடங்களாக சிவனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைவரம் வேண்டுதலைக் கூறுகிறாள். கோயில் வாயிலில் காத்திருக்கநேர்கையில் அங்கே பிச்சை எடுக்கும் சிறுவர்களைக் கண்டு லயா வேதனைப்படுகிறாள். அவர்களின் குடியிருப்புக்கு நேரில் சென்று வந்த பின் அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை ? அவர்களின் நிலை பல நூறுவருடங்களாக இப்படித்தான் என்பதை எப்படி ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு நீ சொல்லமுடிகிறது? கல்வி கற்றுக்கொடுப்பது பற்றிய உனது கருத்து என்ன? கல்வியளிப்பது என்பது ஒருவர் சுதந்திரமாக அவர்கள் என்னவாகவேண்டுமென்று முடிவெடுக்க வாய்ப்பளிக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்படியே இருக்கவேண்டும் என்று மதம் அல்லது ஜாதி எதுவாயினும் எப்படி கட்டாயப்படுத்தமுடியும் ? என ஷர்மிளாவிடம் கேட்கிறாள்.
ஷர்மிளாவுக்கு தன் மதத்தின் சில பழக்கவழக்கங்கள் மாறுபாடாக இருந்தாலும் தன் குடும்பத்தின் பார்வையிலிருந்து தன் வளர்ப்பின் வழியிலிருந்து முழுவதுமாக அதை வெறுக்கமுடியாத நிலையில் இருப்பதைத்தான் அவளுடைய வெற்றுவாதங்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் இயலாமல் விசா முடியும் நிலையேற்படும்போது தன் குறிக்கோளுக்காக மட்டுமே ஒரு திருமணத்தையும் செய்துகொள்கிறாள். யாரென்று அறியாமலே திருமணம் மற்றும் வசதிக்கென்று அமைத்துக்கொள்ளும் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. துறவி ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு நல்ல மனிதன் ஷிரிங் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கிறான். எதற்காக என்னைத்திருமணம் செய்கிறாய் ? என அவள் கேட்கும் பொழுது நீ செய்கின்ற வேலை நிறைவு பெற என் உதவி உனக்கு தேவைப்படுகிறது. அந்தக்குழந்தைகளைப்போலத்தான் நான். நீ அவர்களுக்கு செய்கிற சேவையைத் தொடர என்னாலான உதவி என்று சொல்கிற அன்பானவன். தோழமையுடன் துவங்குகிறது அவர்கள் வாழ்வு. அந்தத்தோழமை ஒரு காதலாகவும் மலர்கிறது.
அந்த வாழ்க்கைத்தோழனுடைய சொந்த கிராமத்துக்கு நீண்ட தூர நடைப் பயணம் மேற்கொள்ளும் போது ஷிரிங் ”என்னுடைய தாத்தா அடிக்கடி என் வாழ்வு அந்த வானத்தில் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.. (மை மிரர் இன் த ஸ்கை) வாழ்வில் உன் இடம் எது? ”எனக்கேட்கிறான் அவளால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. பணத்திற்காக கஷ்டப்படும்போதும் இந்த வேலைகளை நீ உன் மதத்துக்கிற்காகவா அல்லது அரசியல் காரணத்திற்காகவா ஏன் செய்கிறாய் என்றக் கேள்விக்கும் அவளால் சரியாகச் சொல்லமுடியவில்லை..
பள்ளியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு புதிய பள்ளி தொடங்குகிறாள். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு இலவச உணவு அளிப்பதாக ஷர்மிளா வாக்குறுதி கொடுத்து அழைத்துவருகிறாள். அந்தப்பள்ளிக்கு வருகின்ற ஒரு சிறுமி தன் பெயரைத்தொலைத்துவிட்டு தன் தம்பியைச்சுமப்பவள் என்றே தன் பெயரைக்கூறுகிறாள். கண்ணாடி முன் அமர்ந்து தொலைந்த தன்னைத்தேடும் அந்தச்சிறுமிக்கு மீண்டும் விமலா என்கிற அவளைக் கண்டடைய உதவுகிறாள்.
தொடர்ந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் இருக்கின்ற பின்னடைவுகளுக்கு குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளேக் காரணம் என்று அறிகின்ற லயா குழந்தைகளின் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய நினைக்கிறாள். கணவனோ உன்னால் எல்லாவற்றையும் எப்படி செய்யமுடியும் என்று மலைக்கிறான். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு அவளுடைய குறிக்கோளின் தீவிரம் புரிபடவில்லை. மேலும் தன் தந்தையின் உடல்நிலை மோசமடைவதால் தன் கிராமம் நோக்கி பயணிக்கிறான்.
ஷர்மிளாவின் நிலையோ குழந்தை இல்லாததோடு இதுபோன்ற தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் இருப்பதால் அவர்களின் குடும்பத்துக்கு கெடுதியை துர்சகுனத்தை மேலும் கூட்டுவதாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறாள். ஷர்மிளா ஜோசியம் பார்ப்பவரிடம் இருவருடைய எதிர்காலத்தை கணிக்க முயல்கிறாள். ஷர்மிளாவுக்கு ஆண்குழந்தையும் லயாவிற்கு தன் முயற்சியில் வெற்றியும் உறுதி என்ற அவரின் நம்பிக்கை வார்த்தை கிடைக்கிறது.
பணம் ஏற்பாடு செய்ய தன் நாட்டிற்கு திரும்பச்செல்லும் போது லயா தன் துணையை அழைக்கிறாள். அவனோ தந்தையின் உடல்நிலை மற்றும் தன் ஊர் இதுதான், தன் வாழ்வு இங்குதான் என்று குறிப்பிட்டு தன் மனநிலைக்கு அவளையும் கொண்டுவர முயல்கிறான். உனக்கு குடும்பம் முக்கியமில்லையா.. உனக்கு இந்தப்பள்ளி மட்டும் தான் வேண்டுமா.. நம் வாழ்க்கை என்ன ஆவது ?நீ திரும்ப ஊர் செல்வதையும் நான் விரும்பவில்லை எனச்சொல்லும் ஷிரிங்கின் முன் , பள்ளியும் நம் வாழ்க்கை இல்லையா? என்று அவர்களின் வாழ்வின் பேதம் அவளைக் குழப்புகிறது.
தன் ஊர் சென்று அங்கிருந்து ஷிரிங் க்கு கடிதங்கள் எழுதும் போது அவள் அவனுடைய கேள்விக்கான பதிலை எழுதுகிறாள் இவ்வாறு..” என் வாழ்வு காட்மண்டுவில் அந்தக் குழந்தைகள், ஷர்மிளா மற்றும் உன்னுடன் இருக்கிறது. ” ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்திற்கான முழு ஏற்பாட்டுடன் அவள் திரும்ப வந்து பள்ளியின் ஒவ்வொரு நிகழ்விலும் தன் வாழ்வின் மகிழ்ச்சியை உணர்கிறாள்.
பிரியமாணவியான குசிலா குழந்தைக்கடத்தல் முறையில் இந்தியாவிற்கு சென்று பாதிக்கப்பட்டு திரும்பிவந்ததும் அவளை அவள் குடும்பத்தினர் ஏற்காதபோது அவளைத் தன் பள்ளியில் தன்னுடனே அழைத்து வந்து அவளுடைய முழுகவனத்தையும் கொடுக்கிறாள். ஷிரிங் தனிமையை உணர்கிறான் .அவளை விட்டுப்பிரிந்து தன் மலைக்கிராமத்திற்கே செல்ல முடிவெடுக்கிறான்.
ஷர்மிளா தன் குடும்பத்தினரின் பேச்சுக்களை எல்லாம் மீறி வேறு திருமணம் செய்யாமல் தனக்கு பலவிதத்தில் துணையாக நின்ற கணவனுக்கு பெண்குழந்தையைக் கொடுப்பது சரியில்லை என்றும் அதனால் அவள் வாழ்வு இன்னும் போராட்டத்துக்குள்ளாகும் என்றும் நினைத்து அதனை அழிக்க நினைத்து தன் வாழ்வையே அழித்துக்கொள்கிறாள்.
கதையின் தொடக்கத்தில் பெண்களை மதத்தின் பெயரில் தூய்மையாக்க என்று இருட்டறையில் வைத்திருப்பதைக் குறிப்பிடுகிறாள் ஷர்மிளா. ஷர்மிளாவின் மூலம் லயாவிற்கு ஒரு பாடம் சொல்கிறது வாழ்வு. ஷர்மிளாவை பிடித்து வைத்திருக்கின்றவை அவளால் உடைக்கமுடியாத அறியாமைச் சங்கிலிகள் . அவள் தன் முடிவை அறிந்தவளாக எழுதிய கடிதத்தில். அறியாமையிலிருந்தும் வறுமையிலிருந்தும் வெளியே வர உதவும் சாவியை அளிப்பதே கல்வி. வெளியேற உதவுவது போலவே உள்ளே செல்லவும் ..நான் இருட்டறையில் நுழைந்துவிட்டேனோ அல்லது ஒரு போதும் வெளியேறாமலே வாழ்க்கையைத்தொலைத்தவளோ.. ஆனால் நீ வெளியில் இருக்கிறாய். இன்னும் பலரை இருட்டறையிலிருந்து வெளியேற்ற நீ உன் வாழ்வை சரியான பாதையில் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.





நன்றி பண்புடன் இணைய இதழ்

January 9, 2010

பாலைவனச் சோலை

இணையம் கிடைக்காத நேரமொன்றில் வழக்கம்போல பாதியிலிருந்து இந்த கொரிய திரைப்படம் ஒயாசிஸ் (Oasis) ஐ பார்க்கத்தொடங்கினேன் . அழகான பாடல் ஒன்றின் வரிகள் கீழே வந்து கொண்டிருந்தது. ஆனால் பாடலுக்கு வாயசைத்து நடிப்பதோ மூளையின் கட்டளைக்கு உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு பெண். ஆவலால் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். சற்றே குறைப்பாடு உடைய ஹீரோ. அதிகப்படியான பாதிப்பை உடையவளாக ஹீரோயின்.(cerebral palsy)

தனியாக அறையில் இருக்கும் கதை நாயகிக்கு ஜன்னல் வழியாகத் தெரிகிற மரக்கிளையின் நிழல் தினம் பயமுறுத்துவதாக இருக்கவே .. அவன் அதை மந்திரத்தில் ஒரு நாள் மறைத்துவிடுவதாக வாக்களிக்கிறான். வீட்டிற்கு அவளின் அண்ணனும் அண்ணியும் வரும் முன்னர் அவன் மீண்டும் கதவைப் பூட்டி சாவியை பழையபடி இருந்த இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். மறுநாள் அவர்கள் இருவருமாக அவுட்டிங் செல்கிறார்கள். அவளை உப்புமூட்டையாகத் தூக்கிக்கொண்டு அவளின் சக்கர நாற்காலியையும் தூக்கியபடி அழைத்துச் செல்கிறான்.


ரயிலில் மற்ற சாதரண காதலர்களைப் போல அவர்களும் இருக்கவேண்டுமென்று அவள் கற்பனை செய்கிற காட்சியில் கதாநாயகி எழுந்து நின்ற போது தான் சாதாரணமான ஒரு நடிகை எப்படி அப்படி பாதிப்பினை உடையவளாக நடித்தாள் என்று எனக்கு ஆச்சரியாக இருந்தது. மூன்ஸோரி (moon so-ri) நல்ல அழகான நடிகை. அதே சமயம் குறைப்பாடு உடையவராக கை கால் முகம் எனக் கோணியபடி அதே சமயம் கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் காண்பிக்க அதே கோணல்களிலேயே வேறுபாடுகளைக் காட்டி அசத்தி இருந்தார். கதை நாயகனும் நன்றாக நடித்திருந்தார்.


இவர்கள் இருவருமாக உணவருந்த சென்ற இடத்தில் நாசூக்காக வெளியேற்றப்படுகிறார்கள்.ஒரு முறை கதைநாயகனின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பெரிய உணவு விடுதியின் குடும்ப நிகழ்ச்சிக்கே அழைத்துப் போகிறான். அனைவரும் அவளை அழைத்து வந்ததற்காக அவன் மேல் கோவம் கொள்கிறார்கள். அண்ணன்காரனின் பேச்சு மூலம் அண்ணன் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் இறந்துபோனவர் நாயகியின் அப்பா என்றும் குடும்பத்தின் முக்கிய சம்பாதிக்கும் ஆள் என்பதால் அண்ணனுக்கு பதில் தான் சிறைக்கு செல்வதாகக் கூறி கதாநாயகன் சென்றதும் எனக்குத் தெரிந்தது. (அது படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி போலும். சீரியல் ரீகேப் போல இதை திரும்பச் சொன்னது எனக்கு வசதியாக இருந்தது.) தான் குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டுக்குப் தேடிப்போய் பார்த்ததாகவும் இப்போது தாங்கள் நண்பர்கள் என்றும் சொல்கிறான். நான் செய்ததற்கு உனக்கு எப்படி குற்ற உணர்ச்சி வருகிறது என்று அவன் அண்ணன் கோபிக்கிறான்.

பிறகு இருவருமாக கரோக்கி இடத்தில் சென்று பாட்டு பாடி தங்கள் வருத்தம் கோபங்களை மறந்து வீடு திரும்பும் நேரம் கதாநாயகிக்கு கதாநாயகன் மேல் அன்பு மிகுந்து அவளே அவனை தன்னோடு இரவு தங்கும்படி கேட்கிறாள். இருவரும் தனித்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் அண்ணனும் அண்ணியும் வந்து கதாநாயகன் நாயகியை பலாத்காரம் செய்ததாக பிடித்துக்கொடுக்கிறார்கள்.

அவளுக்கு கிடைக்கும் உதவித்தொகையைக் கொண்டு வாழ்ந்து வரும் அண்ணனும் அண்ணியும் மேலும் இக்குற்றத்திற்காக கதாநாயகனின் அண்ணனிடம் பணம் கேட்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடுகிறபடியால் கதாநாயகன் சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. கதாநாயகிக்கு நோயின் தீவிரத்தினால் தன் பக்கத்து நியாயத்தை சொல்ல முடியாத துயரத்தில் முட்டி மோதி அழுவதை அவள் பயத்தில் அழுவதாக போலீசாரும் கணக்கில் எடுக்கிறார்கள்.

நாயகனின் அம்மா ஒரு பாஸ்டரை அழைத்து வந்து நாயகனுக்கு புத்தி வரும்படி ப்ரார்த்திக்கிறார் அப்போது கதாநாயகன் தப்பித்துச் சென்று கதாநாயகியின் வீட்டு ஜன்னலுக்கருகில் இருக்கும் மரத்தை மேலே ஏறி வெட்டுகிறான். இவனுக்கு புத்தி மழுங்கி இருப்பது உண்மைதான் . எதற்காக செய்கிறான் என்று எல்லாரும் கோவப்படும் போது கதாநாயகி மரம் வெட்டப்படுவதைப் பார்த்து தன் ஒரே பொழுதுபோக்கான வானொலியின் ஒலியை அதிகமாக வைத்து அவனுக்காக ஜன்னலில் முட்டிக்கொள்கிறாள்.

அவன் அங்கிருந்தே மரத்தின் மேல் நின்றபடி அந்த பாடலுக்கு ஆடுகிறான். இந்த சிறைவாசம் முடியட்டும் இளவரசி உனக்கு மீண்டும் பணிவிடை செய்ய வருவேனென்று அவன் கடிதம் வருவதோடு படம் முடிந்து விட்டது.


நடுவீதியில் இரவில் ட்ராபிக் ஜாமில் இளவரசி இளவரசி என்று அவளை குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு ஆடுகிறான்.(படத்தில் கதாநாயகின் பெயருக்கு கொரியனில் அர்த்தம் இளவரசியாம் ) அவளுக்கு உணவை ஊட்டியபடியே தன் கனவில் அவர்கள் இருவரும் நடனம் ஆடியதையும் கூடவே ஒரு இந்தியப்பெண்ணும் ஒரு குட்டி யானையும் .. ஒரு பையனும் நடனமாடியதாகக் கூற கற்பனைக்காட்சி உருபெற்று நிஜமாகவே ஒரு குட்டியானையும் ஒரு பெங்காலிப் பெண் என நினைக்கிறேன் இவர்களோடு நடனமாடுகிறார்கள். வாழ்க்கையில் இருவருக்குமான பல சோகங்களுக்கு நடுவே இந்த சொர்க்கமான நொடிகள் ஒயாசிஸாக ..
எளிமையான அழகான காதல்கதை. இன்னோரு முறை முழுதுமாகப் பார்த்து ரசிக்க ஆசை.

January 23, 2009

ஃபிடில்லர் ஆன் தி ரூஃப் (1971)

காதல் நுழையமுடியாத கிராமத்துல காதலிச்சுட்டாங்கன்னு ஊரே திரண்டு தீப்பந்தத்தைத் தூக்கிப்பிடிச்சு ஓடும் படங்களை எல்லாம் நூறு நாள் ஓடவிட்ட நமக்கு இது புதிய விசயமே இல்லை. நம்ம கிராமங்களைப் போல கட்டுக்கோப்பான ஒரு ஜூவிஸ் குடும்பத்தைச் சுற்றியே நகர்கிற ஒரு கதை.Fiddler on the Roof . ஒரு ஏழை தகப்பன். ஐந்து மகள்கள். நம்ம ஊரு தரகரைப்போல மேட்ச் மேக்கர் தான் கல்யாணம் செய்து வைக்கனும். தானாகவே ஒரு பெண் கணவனைத்தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுள்ள ஒரு இடத்தில் தானும் அந்த கட்டுப்பாடுக்குள் அடங்கியும் சில நேரம் மீறியும் சஞ்சலப்படுகிறார். நான் பணக்காரனா இருந்தான்னு ஒரு பாட்டுல ஆடறார் பாருங்க ஆட்டம் மனுசன்( chaim topol )அவார்ட் வாங்கி இருக்காரு இந்த படத்துக்கு.


உண்மையில் இப்போது அதிக காதல் திருமணங்கள் அரேஞ்ச்டு மேரேஜாக நடக்கிறது. சம்மதத்துடன். அரேஞ்சுடு மேரேஜ் கள் காதல் திருமணங்களாக நிச்சயதார்த்ததிற்கு பிறகு மாற்றப்படுகிறது. தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது. நேற்று ஒரு தோழி சொன்னார் அவர் கட்டிக்கபோறவருக்கு கண்டபடி திட்டிக்கொஞ்சலையேன்னு வருத்தமாம்.. அட காசா பணமா திட்டுங்களேன்னு சொன்னேன். :-)

படத்தைப்பற்றி எக்கச்சக்கமா எழுத ஆசை.. அவர் கடினமான உழைப்பும், பாசமும் , அதை காட்டற விதமும் சொல்லிக்கிட்டே போகலாம். முதல் மகளுக்கு வயதான ஒருவரை கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்யும் போது அவள் பட்டினி இன்றி வாழ்வாள் என்று மட்டுமே அவர் பார்க்கிறார். மகளின் முடிவு தெரிந்தபின் மனைவியிடம் அவர் ஆடும் நாடகம்னக்கு மிகவும் பிடித்தது. கள்ளம்கபடமில்லா மனிதனாக அழகாக நடித்திருக்கிறார். அந்த ஊருலயும் பேத்திக்கு பாட்டி பேரை நினைவா வச்சிருக்காங்கப்பா..

படம் நம்ம ஊரு அந்த காலப்படம் போலவே தான் நின்னா பாட்டு உக்காந்தா பாட்டு ... கோவம் வந்தாக்கூட பாட்டு தான்.. லிரிக்ஸ் தேடிப்பிடிச்சுப் படிச்சேன் ஆகா.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
[TEVYE]
Tradition, tradition! Tradition!
Tradition, tradition! Tradition!

[TEVYE & PAPAS]
Who, day and night, must scramble for a living,
Feed a wife and children, say his daily prayers?
And who has the right, as master of the house,
To have the final word at home?

The Papa, the Papa! Tradition.
The Papa, the Papa! Tradition.

[GOLDE & MAMAS]
Who must know the way to make a proper home,
A quiet home, a kosher home?
Who must raise the family and run the home,
So Papa's free to read the holy books?

The Mama, the Mama! Tradition!
The Mama, the Mama! Tradition!

[SONS]
At three, I started Hebrew school. At ten, I learned a trade.
I hear they've picked a bride for me. I hope she's pretty.

The son, the son! Tradition!
The son, the son! Tradition!

[DAUGHTERS]
And who does Mama teach to mend and tend and fix,
Preparing me to marry whoever Papa picks?

The daughter, the daughter! Tradition!
The daughter, the daughter! Tradition!

எல்லாப்பாட்டுமே நல்லாவே இருந்தது.. எல்லாத்தையும் இங்கே காப்பி பேஸ்ட் செய்தா பதிவு நான் பேசுவதை விட பெரிசாகிவிடும் .. உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாக் கூட ஆகிடும். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் போட்டுக்கிறேனே.. மகளின் காதலுக்கப்பறமாக, அப்பா மெதுவாக அம்மாவிடம் நீ என்னைக்காதலிக்கிறாயா என்று கேட்டு வெக்கப்படுவார் பாருங்க.. ஆகா..உடனே அம்மாக்கு ஒரு பொய் கோபம் சும்மாப்போய்யான்னு ஒரு திட்டு.. பின்னாடி அப்படியே பேசிப்பேசி சேர்ந்து உக்காந்து ஒரு முடிவுக்கும் வந்திடறாங்க.. காட்சியைக் கண்டிப்பா பாருங்க..



(Tevye)
"Golde, I have decided to give Perchik permission to become engaged to our daughter, Hodel."

(Golde)
"What??? He's poor! He has nothing, absolutely nothing!"

(Tevye)
"He's a good man, Golde.
I like him. And what's more important, Hodel likes him. Hodel loves him.
So what can we do?
It's a new world... A new world. Love. Golde..."

Do you love me?

(Golde)
Do I what?

(Tevye)
Do you love me?

(Golde)
Do I love you?
With our daughters getting married
And this trouble in the town
You're upset, you're worn out
Go inside, go lie down!
Maybe it's indigestion

(Tevye)
"Golde I'm asking you a question..."

Do you love me?

(Golde)
You're a fool

(Tevye)
"I know..."

But do you love me?

(Golde)
Do I love you?
For twenty-five years I've washed your clothes
Cooked your meals, cleaned your house
Given you children, milked the cow
After twenty-five years, why talk about love right now?

(Tevye)
Golde, The first time I met you
Was on our wedding day
I was scared

(Golde)
I was shy

(Tevye)
I was nervous

(Golde)
So was I

(Tevye)
But my father and my mother
Said we'd learn to love each other
And now I'm asking, Golde
Do you love me?

(Golde)
I'm your wife

(Tevye)
"I know..."
But do you love me?

(Golde)
Do I love him?
For twenty-five years I've lived with him
Fought him, starved with him
Twenty-five years my bed is his
If that's not love, what is?

(Tevye)
Then you love me?

(Golde)
I suppose I do

(Tevye)
And I suppose I love you too

(Both)
It change a thing
But even so
After twenty-five years
It's nice to know
-----------------------------------------
அப்படியே இன்னும் நிறைய பாட்டு இருக்கு நேரமிருந்தால் படிச்சுப்பாருங்க அங்கேயே...