எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை. என் பொழுதுபோக்குக்கு இப்பொழுது மிகப்பெரிய சோதனை. பல பதிவர்கள் சாதாரண டெம்ளேட்டில் போரடித்துப்போய் தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக மிக அழகாக வடிவமைத்த டெம்ப்ளேட் டிசைன்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள்..
ப்ளாக்கரில் நான் சிறிதே கலர் மாற்றங்களை செய்த போதே பாலபாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. எளிமையான பக்கமாக கண்களுக்கு பாதிப்பில்லாத பின்புலம் இருந்தால் மட்டுமே படிக்கவருபவர்களுக்கு பதிவைப் படிக்க வசதியாக இருக்கும் . சிலர் கருப்பு பின்புலம் வைத்திருக்கிறார்கள் (உதாரணம்: சசி... ப்ளீஸ் மாத்துங்களேன் கண் வலிக்குது) அப்படிப்பட்ட பதிவுகளை வேகமாக போஸ்ட் கமெண்ட் தேடி ஓடி க்ளிக் செய்து ஷோ போஸ்ட் என்பதை க்ளிக் செய்து படித்து முடிப்பதுவழக்கம்.
உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி போன்றவர்களின் டெம்ளேட் அவர்களின் அழகுணர்ச்சியையும் தனித்தன்மையினையும் காட்டுகிறது மகிழ்ச்சி. ஆனால் என்னால் அவர்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பதிவுக்கு சென்றேனோ தொலைந்தேன். குறைஞ்சபட்சம் 5 நிமிடத்திலிருந்து 10 ..15 நிமிடத்திற்கு என் கணினி அப்படியே நின்றுவிடும். வேறு எந்த வேலையும் கூட செய்ய இயலாது. .. சில நேரம் ஃபயர்பாக்ஸ் க்ராஷ் ஆகி காணமலே போய்விடும்.
ஆனால் எனக்கு ஆச்சரியம் அங்கே கும்மியிலிருந்து பெரிய விவாதங்கள் வரை நடைபெறுகிறது. வருபவர்களுக்கு என்னைப்போல ப்ரச்சனைகளே வருவதில்லையா..? முன்பு எண்ணுவான் ( கவுண்ட்டர்) இதுபோன்ற ப்ரச்சனைகளை பலருக்கும் செய்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த டெம்ளேட்களா அல்லது பக்கங்களில் அவர்கள் இணைத்திருக்கும் வேறு எதும் அதிகப்படியான கேட்ஜெட்களா? என்று தெரியவில்லை மொத்தத்தில் என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை.