நேற்று பலூன்மாமா கல்வெட்டு வின் பஸ்ஸை எல்லாரும் பகிர்ந்திருந்தார்கள், திண்ணை மற்றும் காலியிடங்களில் வழிபோக்கர்கள் தங்குவதற்கு அனுமதிக்காத நம் ஊர்களில் மனிதம் செத்துவிட்டதாகக் கூறி இருந்தார். தங்க விடுகிறோமோ இல்லையோ இன்றளவில் தண்ணீர் கொடுக்கக்கூடப் பயமாக இருக்கிறதாம்.
கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றோமா என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்கு மணிநேரக்கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றதாக நினைவில்லை. பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அங்கு ஒரு குடிசை வீட்டில் தண்ணீர் கேட்போம் அவர்களும் ஒரு செம்பு நிறைய தண்ணீர் தருவார்கள்.ஊரில் எங்கள் வீடும் ரோடு பார்க்க இருந்ததால் யாராவது தண்ணீர் என்று கேட்டு வருவார்கள்.நாங்களும் கொடுப்பதுண்டு. வீட்டுக்கு எதிர்புறத்தில் ஒரு பொதுக்குழாயும் உண்டு. அதில் தண்ணீர் வருகின்ற நேரத்தில் போவோர் வருவோரும் அங்கே தண்ணீர் குடிப்பதுண்டு. பலசமயம் உடைந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.
தனிவீடுகளில் இன்று தண்ணீர் கேட்கவந்து அடித்துபோட்டு கொள்ளை என்கிறார்கள். சரி அடுக்குமாடிகளிலோ காவலுக்கு ஆள் இருப்பான் உள்ளே நுழைய முடியாது. இப்படி ஒரு படத்தைப் பார்த்தது நினைவு வந்தது.
ஜாக்தே ரஹோ.. (விழித்து இரு..)1956
ராஜ்கபூர் நடித்தபடம் .இப்படி ஒரு நல்லபடத்தை சொந்த செலவில் எடுத்திருக்கிறார். படத்தில் அவருக்கு அதிகம் வசனமில்லை. எல்லாம் முகக்குறிப்பில் தான். மிக அருமையான நடிப்பு. ஒரு ஏழை விவசாயி நகர்புறத்திற்கு தன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக வந்து சேர்கிறான். அவனுக்கு தண்ணீரக்கு தட்டழிந்து ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்குள் இருந்த தண்ணீர்குழாயில் தண்ணீர் குடிக்க நுழைகிறான். அழுக்கு உடையும் பஞ்சப்பராரி தோற்றமும் அவனை ஒரு திருடன் என நினைக்கவைத்து குடியிருப்பே அவனைத்தேடி அலைய அவன் ஒவ்வொரு வீடாக ஒளிந்து தப்பிக்க முனையும் போது ... அங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் , பெரியமனிதப்போர்வையில் செய்கின்ற திருட்டுத்தனங்களை , தவறுகளை காண்கிறான்.
மனைவியிடம் திருடும் கணவன், குடிகாரன் மனைவியை படுத்தும்பாடு, கள்ளநோட்டு அச்சடிப்பவன், ஜோசியம் என்று பொய்வேசம் போடுபவன் என இருக்கிறது அந்த பெரியமனிதர்களின் இடம் . கள்ளநோட்டுக்களை அடிப்பவனோடு மருத்துவர் உடந்தை. அவர்களிருவரும் வீடுகளுக்கு இடையில் ரகசியப்பாதை வைத்து திருடனைத் தேடிவரும் போலீஸ் குழுவிலிருந்து தங்கள் தவறை மறைக்க முயல அங்கே போய் ராஜ்கபூர் சிக்கிக்கொள்கிறார். தங்களுக்காக ராஜ்கபூரை பலியிடவும் அவர்கள் தயங்கவில்லை.. போலீஸ் வந்து சோதனை செய்வதும் அதற்கு முன் ஒரு குழுவாக காவல் செய்பவர்களும் பின் வருகின்ற பத்திரிக்கையாளர்களும்.. 1956 லேயே அப்படித்தான், இன்னமும் பிப்லிலைவ் எடுக்கவும் நம்மிடம் கதை இருக்கிறது.
படத்தைப் பார்த்து பலநாட்களாகிவிட்டதால் சில பகுதிகள் நினைவில் இல்லை. ரோந்துகுழு அமைக்கப்படும்போது அதன் தலைவன் மிக நல்ல வசனங்கள் பேசுவான் . அதற்கான வீடியோ கிடைக்கவில்லை. இந்தப்பாடலைக் கேளுங்கள், படத்தில் வரும் ஒரு பஞ்சாபி ரோந்துக்குழுவின் பாடல்..
The Lyrics and its Translation
Oye aiwe duniya dewe duhai,
jhootha pondi shor
te apne dil to pooch ke vekho
kaun nahi hai chor
The world appeals for no reason
the liar makes hue and cry
Why don't you ask your heart
who is not a thief!
te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya
Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!
Oye hath dooje ka maar maar ke
ban de log ameer
mein ainu kainda chori
dunika kendi taqdeer
By pulling stuff from others hands
people become rich
I call it thievery
the world calls it destiny
te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya
Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!
O hut ke
Paraji bach ke
Hey move aside
Sir, be careful!
O vekhe pandit gyaani-dhyaani
daya-dharam de bande
Ram naam japte
khaave goshala de chande
I have seen wise and pious
men of religion and kindness
They chant the name of Ram
and hoard all the charity
te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya
Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!
O hut ke
Paraji bach ke
Hey move aside
Sir, be careful!
O sachche phansi chade vekhe
jhoota mauj udave
Loki kende rab di maya
Mein kenda anyay
I have seen honest people hanged
while the culprit enjoys life
People say it god's will
I call it injustice
te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya
Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!
O hut ke
Paraji bach ke
Hey move aside
Sir, be careful!
(thanks to
sandeep)
இரக்கமே இல்லாமல் ராஜ்கபூரின் உடம்பில் பணக்கட்டுகளை அடுக்கி ஜன்னல் வழியாக வெளியேறவைக்கிறார்கள். மேலே இருந்து தொங்கும் துணியை அறுக்கிறான் முதலாளி. கீழே இருந்து நெருப்பு பற்றவைக்கிறான் ஒருவன். கீழே திரண்ட மக்கள் ( யாரு எவன் என்று தெரியாவிட்டாலும் கூட்டமாக சேர்ந்து கொடிபிடித்தால் கொடிபிடிப்போம், தர்ம அடி போட்டுகிட்டிருந்தால் அதையும் செய்வோம்) ராஜ்கபூரை கீழே இருந்து பொருட்களால் அடிக்கத்தொடங்குகிறார்கள். திருடன் திருடன் என்று திட்டும் அவர்கள் பணம் பையிலிருந்து கீழே விழும்போது அடுத்தவன் பணமென்ற உணர்வின்றி பணம் பணம் என்று பொறுக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.
மேலும் கொஞ்சம் பணத்தை இறைத்து கவனம் திருப்பி ,தப்பி மேல் மாடிக்கு சென்று நீங்கள் படித்தவர்கள் , பெரியமனிதர்கள் ,நீங்கள் என்னைத்திருடன் என்றா சொல்கிறீர்கள் .. நீங்கள் மட்டுமென்ன..அனைவருமே திருடர்கள் என்று அவர்களின் குற்றங்களைச்சொல்லும்போது அனைவரும் அவனைக் கொல்ல நெருங்குகிறார்கள். அந்தக்காட்சியில் வசத்தின் வீச்சு அருமையானதாக இருக்கும். (அதன் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.)
மீண்டும் தப்பி ஒரு வீட்டில் நுழையும் போது டெய்சி ராணி (குழந்தைநட்சத்திரம் )அங்கே அவரிடம் கனிவுடன் பேசுகிறார். நீ திருடனா ? இல்லை தானே? அப்பறம் எதுக்காக நீ பயப்படனும் தைரியமாக நட . யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள் என்று தன்னம்பிக்கை கொள்ளச்செய்கிறாள். தைரியமாக அவர் நெஞ்சு நிமிர்த்தி நடந்துவெளியேறுகையில் சோதனையிடவந்த போலீஸ் அங்கே தவறு செய்த பெரியமனிதர்களைக் கையும்களவுமாகப் பிடித்துச்செல்கிறார்கள். எளிய விவசாயியை யாரும் கவனிக்கவே இல்லை. அந்த காட்சியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இந்தப்படத்தை என் மகனோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா என்று சொல்லிக்கொண்டிருந்தேன். குழந்தை அவனுக்கு தைரியம் சொல்லும் காட்சி வரை கவலையாக இருந்த அவன் முகம் மலர்ந்ததைக் கண்டேன். இன்று இப்பதிவை எழுதத் தயார் செய்தபோது கூட.. இந்தக்காட்சியை மீண்டுமொருமுறை பார்க்கவேண்டுமென்று உட்கார்ந்திருந்தான்.
Jaago mohan pyaare, jaago
Jisne mann ka deep jalaaya
(Who ever lit the lamp in heart)
Duniya ko usne hi ujalaa paaya
(has found the world lit)
Mat rehna ankhiyon ke sahaare
(Do not depend on eyes only)
Jaago mohan pyaare, jaago
(Arise dear Mohan, Wake up)