நான் அஞ்சாப்பு படிக்கும்போது நடந்த கதை இது.
என் வகுப்பு தோழி ஒருத்திக்கு என் வகுப்பு தோழன் ஒருவன் காதல் கடிதம் குடுத்துவிட்டான். அந்த பொண்ணு ஒரே அழுகை. விசயம் ஆசிரியைக்கு தெரிஞ்சதும் அவனைக்கூப்பிட்டு ஏண்டான்னு கேட்டதுமில்லாம அவன் என் கூட தான் ரிக்ஷால வருவாங்கறதால் ..அவங்கப்பாக்கு ஒரு கடிதம் எழுதி இதை குடுத்துடுன்னு என் கிட்ட குடுத்துட்டாங்க.
சாயங்காலம் நானும் குடுத்துட்டேன் வேற வழி. அடுத்தநாள் அவன் பள்ளிக்கு வந்தான். ஆனா சட்டை போடல. அடிச்ச அடியில் சட்டை போடமுடியாம ஆகிடுச்சு. 12 வருடங்களுக்கு பிறகு அதே தோழி வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டாள். அந்த நண்பன் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் ..
இப்ப புதுகைத்தென்றலோட கேள்விக்கென்ன பதில்? பதிவைப்படித்ததும் எனக்கு அந்த நிகழ்வுதான் மனசுக்குள் வந்தது.
இப்ப நண்பர்கள் தினம் வந்தபோது மகள் நிறைய ப்ரெண்ட்ஷிப் பேண்ட் வாங்கினா. எல்லாம் பெண்கள் அணிவது. ஆண்களுக்கான் ஒன்று கூட இல்லை. இப்போது 5 ம் வகுப்பு . இரண்டுவருடங்களுக்கு முன்புவரை ஆண்கள் பெண்கள் என்ற பிரிவு இல்லாமல் தான் பழகிவந்தார்கள். ஏன் பையன்கள் ஒருவர்கூட நண்பர்கள் இல்லையா என்றால்.. இல்லம்மா எல்லாம் சேட்டை பசங்கதான் . இரண்டு பசங்க நல்ல பசங்க ஆனால் கட்ட முடியாது. எங்கள் வகுப்பில் யாருமே ஆண்களுக்கு கட்டுவதாக இல்லை. நான் எப்படி ?
ஆனால் பிறகு இரண்டு பையன்களுக்கான் பேண்ட் களை வாங்கிக்கொண்டாள்..விசாரித்ததில் ஆண்கள் பெண்கள் என்று வகுப்பில் பிரிவாக இருக்கத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
எப்போது ஆரம்பித்தது ஏன் என்றால் தெரியவில்லையாம்.என்ன சொல்வது ? குழப்பமாக இருக்கிறது புதுகை எனி ஐடியா?