Showing posts with label எதிர்கவிதை. Show all posts
Showing posts with label எதிர்கவிதை. Show all posts

November 12, 2009

இஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்

என் கணினியின் ஆமை வேகத்தால் முன்பே சிலர் ’தங்கள் பதிவை மாற்றம் செய்திருக்கிறோம் ..கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லவும்’.. என்று டெஸ்ட் இஞ்சினியர் வேலை பார்க்கச்சொல்லிவந்த விசயம் அனைவரும் அறிந்ததே! இதனால் ரீடர் மூலமாக படித்து மடல் மற்றும் அரட்டைப் பெட்டிகளின் மூலமோ அல்லது அவர்களிடமே உங்கள் பின்னூட்ட உரலைத் தாருங்கள் என்று சொல்லி நேராக பின்னூட்டங்களில் நுழைந்தோ கடமையாற்றிவந்தேன்.

சரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஒரு நாளைக்கு ஒரு கேம் தான்
அதிகம் கணினி பார்த்தால்
கண் மூன்றாகிப்போகும் என்று
நான் சொன்ன பொய்யை நம்பி
நீ
ஆன்லைனிலேயே விட்டு வந்த
டவுன்லோட் ஆக தாமதிக்கும்
அந்த ஏஃபார் கேம்.காம்
என் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்
ஹேங்க் செய்துகொண்டே இருக்கிறது
இன்னமும்!



சரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன். ( முல்லை கொடுத்த அவார்ட் ஒன்றும்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டி இருந்தது . அவார்ட் பெயரை மாற்றி கொடுத்துவிடலாம் என்ற ஐடியா தான்)

முதல் ஐடியா மணி தமிழ்பிரியன் - சாட் பூட் த்ரி
நல்லாதான் இருக்கு .. ஆனா ரீடர்ஸ் ப்ரண்ட்லிக்கு தமிழில் என்னவா இருக்கும் என்றதும் ’பயனாளருக்கு இலகுவான்?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். இப்படியே டமில் டமில் ன்னா நம்ம கருப்பாக்கிடுவாங்களாமே (நன்றி : கடகம் ஆயில்யன்) கருப்பு= block

இரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)

மூன்றாவது ஐடியா அம்மணி - அப்பத்தான் எங்கருந்தோ இம்சை அரசி குதிச்சாங்க.. அவங்க எப்பேர்ப்பட்ட நகைச்சுவை வித்தகின்னு உங்க எல்லாருக்கும் தெரியுமில்லயா.. வந்ததும் ’படா பட் விருது’ ந்னாங்க.. ஆமா படாபட் ஜெயலக்‌ஷ்மிய யாரும் மறக்கமுடியாது. ஆனா யாராவது வந்து ஹிந்தி ஒழிக என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று நான் இழுக்க..

சட்டென்று சொன்னாங்க ‘ வாம்மா மின்னல் விருது ‘ எப்பூடி?

சரி விருதுக்கான பெயர் கிடைச்சாச்சு .. “வாம்மாமின்னல் பதிவு விருது”



யாருக்கு குடுக்கலாம் .. அதான் நம்ம டெஸ்ட் இஞ்சினியர் வேலை அனுபவம் இருக்கே.. முதலில் மாட்டியது வல்லி சிம்ஹன் பதிவு.. சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .

சரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு
லிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.
அதிகம் படிப்பாளிகளைப் பெற்று நீங்க நூறு நூறு ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகிறேன்.

December 5, 2008

ரசம் பூசிய கண்ணாடியென வாழ்க்கை...

எதுவும் தனியே கிடைப்பதில்லை.
நான் எனும் தனிமைச்சொல்
கொண்டிருப்பதோ இரண்டெழுத்து.
இன்பமிருக்கும் இடத்தில் துன்பமிருக்கும்
துன்பமிருக்கும் இடத்தில் இன்பமிருக்கும்
பிரிக்க இயலா உறவு அது
உறவின் பொருளி்லிலும் இவையடங்கியே இருக்கும்.
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .
தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்.





photo .. thanks Leslie marr


சென்ஷியின் நான் எனும் தனிமைச் சொல் கவிதைக்கு எதிர் கவிதை. மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))