April 6, 2009

விருது , மகுடம், தோல்வி..

நான் போட்ட புத்தகம் நல்ல விற்பனை( பின்னூட்டம்)தமிழ்பிரியன் உபயத்துல தமிழ்மண மகுடத்தில் கூட ஏறிடுச்சு.. முதல்ல இது தப்போன்னு தோன்றிக்கொண்டிருந்தாலும் திட்டிவர கண்ட பதிவெல்லாம் வரும் போது நான் வரைஞ்ச புக்கைப்போட்ட பதிவு.. இதிலென்ன தவறுன்னு நானே சொல்லிக்கிட்டேன்.. :)

ஆனா கொஞ்ச நேரம் மகுடத்தில் ஏறியதுமே தம்ஸ் டவுன் குத்து குத்துன்னு யாரோ குத்தி இறக்கிவிட்டுட்டாங்க.. இப்படி ஒரு சீசா நடக்குதான்னு கேட்டாங்க தோழி.. சீசாவில் ஏறினால் தானே ஏற்ற இறக்கம் தெரியும்...இதனால் நல்லா பொழுது போச்சு.
----------------------------------
தமிழ்சங்கத்தில் மகளிர் தினப் போட்டிகள் வருடா வருடம் நடந்த சுவடு தெரியாமல் நடந்து விடும். பரிசளிப்பு நடக்கையில் மட்டும் தான் தெரியவரும். இந்த முறை விண்ணப்பதாள்கள் முன்னமே வழங்கப்பட்டு நடந்தது. என்னையும் நம்பி நாலு பேர் கலந்துக்க சொல்லி வற்புறுத்தவே நான் ஒரு அனுபவம் தானே என்று ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் பெயரளித்திருந்தேன். கவிதை கட்டுரைக்கு ஸ்லாஷ் போட்டு இருந்தது. 15 நிமிடம் முன்பு நூலகத்தில் கூடியவர்களுக்கு தலைப்பு வழங்கப்படும்.. பின்னர் எழுத 30 நிமிடம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கட்டுரையும் கவிதையும் இரண்டுமே செய்யுங்களேன் என்று சொன்னதும் சும்மாத்தானே இருக்கோம் என்று தலையாட்டிவிட்டேன்.
அறிவித்திருந்தது போல அல்லாமல் பரிட்சை கேள்விகளைப்போல தலைப்பை சொன்ன மறுநிமிடம் டைம் ஸ்டார்ட்ஸ் சொல்லிவிட்டார்கள். 15 நிமிடம் தான் என்றும் சொன்னார்கள். என்ன என்று தலை நிமிர்ந்தவர்களுக்க்கு .. இதைக்கேட்டு இன்னும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். இருப்பதிலேயே டப்பா தலைப்பாகப் பார்த்து கட்டுரையை ஆரம்பித்தேன்.

கவிதைக்கும் அப்படியே .. ஆனால் மக்கள் மிகத் தெளிவாக பெண் சமூகம் இரண்டு தலைப்பும் எப்படியும் ஒத்துப்போகும் என்று சில நோட்ஸ்களை நெட்டுருவும் செய்துகொண்டிருந்தார்கள்.. வந்திருந்தவர்களில் சிலர் ஆசிரியர்களாம், ஒரு பெண்மணி பட்டிமன்றத்தில் பேசுபவர்கள். நான் 15 நிமிசம் டைம் என்றதுமே முடிவு செய்துவிட்டேன் . நம்மாலாகாது என்று. ..

சிவசங்கரி கையால் பரிசு எனக்கில்லை ... சொக்கா என்று கிளம்பி வந்துவிட்டேன் .. நடுவரம்மாவைத்தவிர யாரும் படித்துவிடக்கூடாதே என்று தான் இப்போதைய கவலை.. :))

கவிதையெல்லாம் தானாகவே தன்னை எழுதிக்கொள்ளும் என்ற கொள்கையே என் கொள்கை. இதுவரை தலைப்புக்கெல்லாம் கவிதை எழுதியதில்லையாக்கும் நான். உள்ளுக்குள் பாதிக்கப்பட்டு வார்த்தைகள் தானாகவே உள்ளே உருப்பெற்ற பின் தான் கவிதை என்று எதையோ எழுதி வைப்பது பின்னர் தான் தலைப்பிடுவது.. சரி சரி.. நிறுத்திட்டேன்..
-----------------------------------------
இந்த பட்டாம்பூச்சி விருது ரெண்டு பேரு தரேன்னு சொன்னாங்க.. வீட்டுல இடமில்லங்கன்னு சொல்லிட்டேன்.. இதெல்லாம் என்னவோ நாம தான் குடுத்துக்கறமான்னா இல்லீங்க.. ஆங்கில ப்ளாக்கர்ஸ் பக்கம் போனா .. ஸ்க்ரோல் டவுன் மெனு போட்டு எக்கச்சக்க விருது வச்சிருக்காங்க.. ஸ்டார் ல வர்ரதெல்லாம் விஜய் டிவியில் தமிழ்படுத்தி வராதா? அது மாதிரி தான் இதுவும். ட்ராப் டவுன் மெனுவெல்லாம் இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன் .. வீட்டுல இடமில்லன்னாலும் விருது வச்சிக்கலாம் போலயே.. :))

என் பதிவில் வகைகள் (லேபிள்) ஸ்க்ரோல் டவுனில் மாற்றிவிட்டேன்.. ரொம்ப நாட்கள் கழித்து டெம்ப்ளேட்டில் கை வைத்திருக்கிறேன். வழக்கமாக இப்படி எதும் செய்தால் தமிழ்மணத்துல இணைக்க போராட வேண்டி இருக்கும்..அப்படி இல்லாமல் இந்த கூட்டு தமிழ்மணத்துல மணக்குதா பார்க்கலாம்..