ப்ரோமிலைட்ஸ் (Bromeliads)
யுபோர்பியா மிலி (Euphorbia milii )
இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.
அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.
இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.
அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.
கறிவேப்பிலை முதலில் சவலைப்பிள்ளையாக இருந்து இப்போது தான் நல்ல நிலைக்கு வந்திருக்காங்க.. பாக்க என்ன அழகு!!
மணிப்பிளாண்ட் அப்பப்ப டிரிம் செய்து பண்ணிரண்டு வருசமாக இளமையாவே இருக்கறவங்க இவங்க..
மணத்தக்காளி.. இவங்க ஒருத்தவங்களா வந்து பெரிய குடும்பமாகிட்டவங்க .. ஒரு செடியில் பழம் ஆரஞ்சாவும் ஒரு செடியில் கருப்பாவும் இருக்கும்.. திடீர்ன்னு பூச்சி வந்து இலைகள் சுருங்கிபோவாங்க.. திடீர்ன்னு நல்லா வளமாவும் இருப்பாங்க..
நந்தியாவட்டை ... இவங்க ஒல்லிப்பிச்சான் . தொட்டியில் வேர் போக இடமில்லாம இலை சிறுத்து இருக்காங்க. இந்த காலநிலையில் நல்லா பூகொடுக்கிறாங்க..
இது தவிரவும் துளசி இருக்காங்க , பன்னீர் ரோஸ் இருக்காங்க..செம்பருத்தி இருக்காங்க
கற்றாழை இருக்காங்க அவங்களை இன்னொரு நாளில் அறிமுகப்படுத்துகிறேன்.
ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)