தூங்குவதற்கு முன்பு சில நாள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது குட்டிபையனுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றும்.. பெரியவளுக்கு விதவிதமான கதைகள் கேட்பதில் விருப்பமிருந்தது ஒருகாலத்தில்.
கேள்வி: அம்மா நீ பூடி(வயதானவள்) ஆனதும் கூட சமைச்சுத்தருவியா எனக்கு ?
ம் ஆமாடா ஏன்?
கேள்வி : அக்காவும் சமைப்பாளா?
ஏண்டா அவள் சமைக்கனும்.. என்று கேட்டுவிட்டு பின், சரிதான் அவளுக்கும் உனக்கும் சேர்த்தே தான் சொல்லித்தருவேன் சமைக்க.. ஒருநாள் நீ ஒருநாள் அவள் சரியா?
கேள்வி: அப்ப நாம மூணுபேரும் சமைக்க அப்பா மட்டும் சாப்பிடுவாங்களா?
அட அவங்களுக்கும் சிலதெல்லாம் சமைக்கத்தெரியுமே அதெல்லாம் அவங்களை செய்ய சொல்லலாமேடா..
கேள்வி: அப்ப நாம நாலு பேருமே சமைச்சா யாரு சாப்பிடுவது..
நாம தான் ..மாத்தி மாத்தி சாப்பிட்டுக்கலாம் வேணா யாரையாச்சும் கூப்பிட்டு சாப்பாடு குடுக்கலாம்..
ம் சரி..கொர் கொர்
-----------------------
கேள்வி: அம்மா ராத்திரி பல் தேய்க்கும் போது மூக்கில் தண்ணி ஏறிடுச்சு ..அந்த தண்ணி எங்க போகும்?
ம் தொண்டை கிட்ட சாப்பாடு போற பைப் கூட ஒரு கனெக்சன் இருக்கு அது வயிற்றுக்குள்ள போயிடும்..
கேள்வி: அய்யோ வாஷ்பேசின் தண்ணி அழுக்குத்தண்ணி அதை குடிக்கக்கூடாதுன்னியே? இப்ப என்ன ஆகும் ? :(
அதெல்லாம் ஒன்னும் ஆகாது ..இன்னிக்குத்தான் பால் , சாப்பாடு எல்லாம் நல்லா சாப்பிட்டியே அதனால் உள்ள ரத்தத்துல இருக்கிற ஃபைட்டர் செல் எல்லாம் சண்டைபோட்டு கிருமிய கொன்னுடும்
ஓ அப்ப சரி கொர் கொர்..
-------------------------
டைக்வாண்டோவில் சேர்ந்து ஒருவருடத்திற்குள் மஞ்சள் மற்றும் பச்சை பெல்ட் கள் வாங்கி விட்டார்.. ஒயிட் பெல்ட் ஆரம்பநிலைக்கானது.
கேள்வி: அம்மா அக்காக்கும் ஆசையா இருக்காம் டைக்வாண்டோ..அப்ப அவ ஒயிட் பெல்ட் ஆகிடுவாளா?
ஆமா ஒயிட் பெல்ட் இப்பத்தானே சேரப்போகிறா..
நான் க்ரீன் பெல்ட(பெருமையுடன்)..சொல்லித்தருவேன் அக்காக்கு..

அக்காவைப்பார்த்து தம்பி பாடவும் ஆடவும் விரும்பியது போக ..தம்பியைப்பார்த்து அக்காவுக்கு இந்த ஆசையோ அல்லது அடிவிழும் வேகம் பார்த்து தன்னை தற்காத்துக்கொள்ளவோ :)
------------------------------
பள்ளியில் விட்டுவந்த நோட்காக ஒரே அழுகை..அதில் ஹிந்தி வீட்டுப்பாடம் இருந்ததாம்..டீச்சர் மேல் ஓவர் மரியாதையும் பயமும் அழுகைக்கு காரணம்.. அவன் அழுவதை சகிக்காத போது இத்தனை ஒழுக்கமாக இருக்கனுமா என்று வருந்தினேன்.
----------------------------
பக்கத்துவீட்டு தோழன் துருவ், இவன் வாங்கிய பொம்மையைக் காட்டி அவன் ஒன்று வாங்கி இருப்பான். அதைக்காட்டி நம்மை வாங்கித்தர சொல்லி இவன்... (டீலிங்க் நல்லா இருக்கே..)
பொம்மையிலிருந்து இப்ப சினிமாவிற்கும் இடம்பெயர்ந்துவிட்டது இந்த டீலிங்க்..
ரோபோ எந்திரன் குட்டிப்பையன் பார்த்தான்.
பதிலுக்கு தோழன் இராமாயன் போகிறான். மீண்டும் கண்ணீர் விட்டு அழுகை.. ஓ இந்த பட்ஜெட் கட்டுபடியாகாதப்பா..:)