February 8, 2007

மாறித்தான் ஆகவேண்டும்

அமைதி எல்லாரும் விரும்பும் மதிப்புடைய செல்வம்.
நாம் காண்பதோ கோபம் ,அச்சம் , பகை , போர் . தனி மனிதரிடம் , சமுதாயத்திடம், உலக நாடுகளுக்கு இடையே என்று அமைதியின்மை பெருகிக் கொண்டே போகிறது.


இந்த நிலைமை நீடிக்கலாமா? மாறித்தான் ஆக வேண்டும்.

வேதாத்திரி மகரிஷி யின் நாள் ஒரு நற்சிந்தனை புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்கள்.

இயற்கை நியதியை _ ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம் , சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும்.


தற்சோதனை செய்வதால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி அதிகப்படும். பிறரோடு ஒத்து வாழும் நிலையும் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptablility) உண்டாகும். தன்னலம் கருதாத தகைமையுணர்வும் (Magnanimity) மேலோங்கும்.


இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை ,ஆக்கச் செயலில் மட்டுமே ஈடும்படக்கூடிய தெளிவு தானே உண்டாகிவிடும்.


ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு. ஒவ்வொருவரும் தனக்கோ , பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ , உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேரா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.

No comments: