October 30, 2007

திருப்புகழ் ராகத்துடன் கற்க..

எங்க தாத்தா அப்பா எல்லாம் முறையா தேவாரம் திருப்புகழ் பாடுவார்கள் என்றாலும் நான் முறையாகக் கற்றுக்கொ ள்ளவில்லை. இப்போ அதுக்கு ஒரு நேரம் கிடைச்சிருக்கு.
இங்கே தில்லியிலும்(பம்பாய் , சென்னை, கல்கத்தா இன்னும் நிறைய இடங்களில் இதன் கிளைகள் விரிந்து வருகிறது.)திருப்புகழ் அன்பர்கள் என்று ஒருகுழு
இருக்கிறது. குருஜி என அழைக்கப்படும் திரு ஏ.எஸ்.ராகவன் அவர்களின் உழைப்பில் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.

அன்பையும் அவிரோதத்தையும் தெய்வீக நெறியையும்
இசையோடு இலவசமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.நீங்களும் கேட்டு மகிழலாம் .

10 comments:

MyFriend said...

நல்ல ஒரு தகவல். முயற்சிக்கலாம். :-)

Anonymous said...

கந்தன் கருணையை காசினி யெங்கும் பரப்பும் திரு ஏ.எஸ்.ராகவன் அவர்களுக்கு
எனது மனம் நிறைந்த நன்றிகள்.

இக்காலகட்டத்தில் இதுவே மிகவும் அத்தியாவசியமுமாகும்

மேன்மேலும் அவரது அரிய பணி
தொடர, வளர, பரவ வேலனை வேண்டுகிறேன்.

நாகை சிவா said...

நல்ல தகவல்...


கேட்டு பாத்துட்டுடா போச்சு... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்துமலைக்கருகில் இருக்கும் தங்கச்சி மை பிரண்ட் கண்டிப்பா முயற்சி செய்து கத்துக்கோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனானிமஸ் உங்கள் வாழ்த்துக்கள் தற்போது உடல்நலமில்லாமல் இருக்கும் குருஜிக்கு நன்மையளிக்கட்டும். உங்கள் பெயரை கையெழுத்தாக இட்டிருக்கலாமே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

""கேட்டுப்பாத்துடுடா"" அப்படின்னு
உங்களுக்கே நீங்க சொல்லிக்கறீங்களா நாகைசிவா :) சரி சரி.. அவசரமா அடிச்சீங்களாக்கும்..

மங்கை said...

ennappaa...periaya velai ellaam seyyareenga....hmmm....carry on...
inga 41 la irukkura Koila kooda class irukku pola irukku

Dubukku said...

எனது மாமா நீங்கள் சொன்ன குழுவில் மிக தீவிரமான அன்பர். உங்களுக்குத் அவரைத் தெரிந்திருக்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை பல இடங்களில் நடக்கிறது இந்த குழு.. நேரம் இருக்குது போகிறேன்.. இதிலென்ன பெரிய வேலை என்றெல்லாம் சொல்லிக்கிட்டு அப்படியாவது மனம் பக்குவப்படட்டுமேன்னு தான் ஒரு சிறுமுயற்சி. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டுபுக்கு நான் சேர்ந்தே 4 வகுப்பு தான் போயிருக்கேன்.. சொல்லிக்குடுக்கற மாமி (குருஜியோட சிஷ்யை) எந்த வீட்டுல நடக்குதோ அந்த மாமி இத்தனைப் பேரைத்தான் இப்போதைக்கு தெரியும் .. ;) ஒகேவா...