கவிஞர் தாமரையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ( யாருக்குத்தான் பிடிக்காதுங்கறீங்களா? )
பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்த பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்புகளற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ் வார்த்தைகளை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்த புதிய தமிழ்வார்த்தைகளை என்னவென்று தேடி தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.
தாமரை அவர்களிடம் நான் கண்ட சிறு பேட்டியினை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.
என் முயற்சிக்கு ஊக்கங்களும் , அவற்றை திறம்பட செய்ய தங்கள் அறிவுரைகளையும் நேரத்தையும் தந்து உதவிவரும் நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரிந்துணர்தலுக்கு நன்றி
பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்த பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்புகளற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ் வார்த்தைகளை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்த புதிய தமிழ்வார்த்தைகளை என்னவென்று தேடி தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.
தாமரை அவர்களிடம் நான் கண்ட சிறு பேட்டியினை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.
என் முயற்சிக்கு ஊக்கங்களும் , அவற்றை திறம்பட செய்ய தங்கள் அறிவுரைகளையும் நேரத்தையும் தந்து உதவிவரும் நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரிந்துணர்தலுக்கு நன்றி