எங்க தாத்தா அப்பா எல்லாம் முறையா தேவாரம் திருப்புகழ் பாடுவார்கள் என்றாலும் நான் முறையாகக் கற்றுக்கொ ள்ளவில்லை. இப்போ அதுக்கு ஒரு நேரம் கிடைச்சிருக்கு.
இங்கே தில்லியிலும்(பம்பாய் , சென்னை, கல்கத்தா இன்னும் நிறைய இடங்களில் இதன் கிளைகள் விரிந்து வருகிறது.)திருப்புகழ் அன்பர்கள் என்று ஒருகுழு
இருக்கிறது. குருஜி என அழைக்கப்படும் திரு ஏ.எஸ்.ராகவன் அவர்களின் உழைப்பில் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.
அன்பையும் அவிரோதத்தையும் தெய்வீக நெறியையும்
இசையோடு இலவசமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.நீங்களும் கேட்டு மகிழலாம் .