இதுவரை வந்த சினிமா கேள்விபதில் பதிவுகளைப்பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கிறது. வெட்டி ஒரு படி மேலே போய் 6 மாசத்துலயே சினிமா தியேட்டரில் கல்யாணம் பேசி முடிச்சிருக்கறதெல்லாம் நினைவுப்படுத்திச் சொல்கிறார்.. எனக்கு ஞாபகமறதி நிறைய. அதனால் என்னால் நினைவுப்படுத்தி சொல்லமுடிவது மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. அழைத்த
ஆயில்யன் மற்றும்
மை ப்ரண்டுக்கு நன்றி.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?ரொம்ப சின்ன வயதிலும் படம் பார்த்திருப்பேன் . எனக்கு நினைவுக்கு வருவது பாலும் பழமும்(ரீலீஸ் ஆன காலமில்லங்க பழய படம் தியேட்டருக்கு திரும்ப வருமில்ல ) படத்தைப் ரயிலடி ஆச்சியைக் கூட்டிக்கிட்டுப்போனதா ஞாபகம். சுந்தரம் தியேட்டரில் எனக்கு உட்கார இடமில்லாம , சின்னப்பிள்ளைதானே நின்னுக்கிட்டேப்பார்த்தமாதிரி கலங்கலாத் தெரியுது . பெரிய திரையில் படம் பார்ப்பது சிறுவயதில் பெரிய பிரமிப்பு தான். வீட்டிலும் வேறு சின்னத்திரை கிடையாது. ஒரு முறை எங்க பெரியப்பா என்னை தாய்வீடு படத்துக்கு கூட்டிச் சென்றார்களாம். எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) வீட்டுக்கு வந்து ரஜினி மாதிரியே " புட்டு புட்டு வச்சிடுவேன்னு" ஆக்சனோட எல்லாரையும் மிரட்டினேனாம் . இன்னமும் எல்லாரும் அதை சொல்லி சிரிப்பது வழக்கம்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?தில்லியில் தமிழ்ப்படங்கள் தமிழ்ச்சங்கத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் திரையரங்கிலும் வருகிறது. சமீபத்தில் பார்த்தது சிவாஜி ,தசாவதாரம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?ஜெயங்கொண்டான் சிடியில் பார்த்தேன். படம் நல்லா இருந்தது. போன படத்தை விட ஹீரோ இந்த படத்துல நல்லா நடிச்சிருந்தார்ன்னு தோண்றியது. இயல்பான படமா இருந்தது போல இருந்தது. ஹீரோ எல்லாரையும் நல்லா அடிக்கிறார். ஆனா அதுல ரஜினி விஜய் மாதிரி அடிச்சா பறக்குறாங்கன்னு முதல்ல ஒரு இண்ட்ரோ காட்சி வராததால் .. இயல்பாவே அவன் கொஞ்சம் அடிக்கக்கூடிய ஆளுன்னு தோணும்படி இருந்தது என்று நினைக்கிறேன். தங்கச்சியா வந்த பெண் நல்லா நடிச்சிருக்கான்னு நினைச்சேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?கருத்தம்மா ... அந்த படத்தை கல்லூரித்தோழிகளுடன் பார்த்தேன். கருத்தம்மா அவள் அப்பாவை குளிப்பாட்டி விடும் காட்சியில் அவர் மனசில் பழசை நினைப்பதும் .. கருத்தம்மாவின் அக்கறையும் கண்ணீர் சிந்த வைத்தது. தாக்கிய என்பதற்கு, மனசில் இடம் பிடித்த படம் என்றால்.. மணல் கயிறு , தில்லு முல்லு , இன்று போய் நாளை வா..இப்பவும் இந்த படங்களெல்லாம் சின்னத்திரையில் எப்பொழுது வந்தாலும் உட்கார்ந்து ரசித்து சிரிப்பேன்.. கூடவே மனப்பாடமாய் எல்லா வசனமும் சொல்லிக்கொண்டே ..:)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?தமிழ் சினிமா- அரசியலா? அப்படின்னா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?நிச்சயமாக .
புத்தகம் , நியூஸ் பேப்பரில் வரும் செய்திகளை படிப்பதுண்டு. ஆயில்யன் சொன்னதுபோல கிசுகிசுக்கள் யாரைக்குறிப்பிடுகிறது என்று மண்டை உடைய யோசிப்பது வழக்கம்.
7.தமிழ்ச்சினிமா இசை?இந்த இசையைக் கேட்காமல் இப்பொழுதெல்லாம் ஒரு குழந்தை கூட வளருவதில்லை. முக்கியமாக இதான் முதல் இசை பயிற்சி. எப்பொழுதும் சினிமா இசையைக் கேட்பது என்பது ந்ம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து போயிருக்கிறதே.இன்னார் என்று இல்லாமல் எல்லா இசையமைப்பாளர் இசையும் ரசிப்பேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?தொலைகாட்சி பெட்டி வாங்கிய காலத்திலிருந்தே பிறமொழி படம் பார்ப்பது என்பது பழக்கமாகிவிட்டது. பெங்காலி படங்கள் அந்த காலத்துப்படங்கள் பிடிக்கும். சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றிய "நிதர்சனத்தின் பதிவுகள் " என்கிற எஸ். ராமகிருஷ்ணனி ன் புத்தகத்தை அன்புடன் காட்சிக்கவிதைப்போட்டியின் போது பரிசாகக்கேட்டிருந்தேன். அது திரைப்படத்தைப்பற்றிய இன்னொரு கோணத்தை காட்டியது.
ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்,
பே இட் ஃபார்வேர்ட்,
நாட் ஒன் லெஸ் மனதை பாதித்த படங்கள்.
இது போல படங்கள் பார்க்க நேரிட்டால் அவ்வப்போது பதிவில் பகிர்ந்து கொள்வேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?எங்கம்மாவோட மாமா அந்த காலத்துல( ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்துல) கதை வசனகர்த்தாவா இருந்தாங்க.. எங்கமாமா சத்யராஜோட ப்ரண்ட் . பள்ளிக்கூடக்காலத்துல அவங்க சேர்ந்து சுத்தியிருப்பதா சொல்லி இருக்காங்க. அவர் கூடப்போய் போட்டோ எடுத்துட்டுவந்தாங்க. இப்பத்தான் நம்ம ப்ளாக்கர்ஸ் பலரும் சினிமாத்துறைக்குப்போறாங்க.. சினிமாத்துறை ஆளுங்க ப்ளாக்கர்ஸ் ஆகிறாங்க. :) தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?எதிர்காலம் பற்றி சொல்ல நான் காலக்கடிகாரமா வச்சிருக்கேன். இருந்தாலும் நல்லா ப்ரகாசமா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். சினிமா வந்த காலத்திலிருந்து இப்ப வரைக்கும் வளர்ந்து கிட்டேயும் தான் இருக்கிறது. எங்கயாவது சறுக்கினா எங்கயாவது உயர்ந்து கிட்டு பேலன்ஸ்டா கொஞ்சமா வளர்ந்துகிட்டு இருக்கு.
1
1. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?இனிமே எப்பவுமே வராது என்ற நிலைதான் கவலைப்பட வைக்கும். ஓராண்டு என்பது பெரிய விசயம் இல்லை . இதுவரை வந்த எத்தனையோ படங்கள் பார்க்காமல் விட்டிருப்போம். ஆனால் தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்.
பின்.நவீனத்துவ கதாசிரியர் சென்ஷி
ஆங்கிலப்பேராசிரியை ராப்
என் குரு துளசி
இவர்களை கேள்விபதிலை தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்.