January 23, 2009

ஃபிடில்லர் ஆன் தி ரூஃப் (1971)

காதல் நுழையமுடியாத கிராமத்துல காதலிச்சுட்டாங்கன்னு ஊரே திரண்டு தீப்பந்தத்தைத் தூக்கிப்பிடிச்சு ஓடும் படங்களை எல்லாம் நூறு நாள் ஓடவிட்ட நமக்கு இது புதிய விசயமே இல்லை. நம்ம கிராமங்களைப் போல கட்டுக்கோப்பான ஒரு ஜூவிஸ் குடும்பத்தைச் சுற்றியே நகர்கிற ஒரு கதை.Fiddler on the Roof . ஒரு ஏழை தகப்பன். ஐந்து மகள்கள். நம்ம ஊரு தரகரைப்போல மேட்ச் மேக்கர் தான் கல்யாணம் செய்து வைக்கனும். தானாகவே ஒரு பெண் கணவனைத்தேர்ந்தெடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுள்ள ஒரு இடத்தில் தானும் அந்த கட்டுப்பாடுக்குள் அடங்கியும் சில நேரம் மீறியும் சஞ்சலப்படுகிறார். நான் பணக்காரனா இருந்தான்னு ஒரு பாட்டுல ஆடறார் பாருங்க ஆட்டம் மனுசன்( chaim topol )அவார்ட் வாங்கி இருக்காரு இந்த படத்துக்கு.


உண்மையில் இப்போது அதிக காதல் திருமணங்கள் அரேஞ்ச்டு மேரேஜாக நடக்கிறது. சம்மதத்துடன். அரேஞ்சுடு மேரேஜ் கள் காதல் திருமணங்களாக நிச்சயதார்த்ததிற்கு பிறகு மாற்றப்படுகிறது. தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது. நேற்று ஒரு தோழி சொன்னார் அவர் கட்டிக்கபோறவருக்கு கண்டபடி திட்டிக்கொஞ்சலையேன்னு வருத்தமாம்.. அட காசா பணமா திட்டுங்களேன்னு சொன்னேன். :-)

படத்தைப்பற்றி எக்கச்சக்கமா எழுத ஆசை.. அவர் கடினமான உழைப்பும், பாசமும் , அதை காட்டற விதமும் சொல்லிக்கிட்டே போகலாம். முதல் மகளுக்கு வயதான ஒருவரை கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்யும் போது அவள் பட்டினி இன்றி வாழ்வாள் என்று மட்டுமே அவர் பார்க்கிறார். மகளின் முடிவு தெரிந்தபின் மனைவியிடம் அவர் ஆடும் நாடகம்னக்கு மிகவும் பிடித்தது. கள்ளம்கபடமில்லா மனிதனாக அழகாக நடித்திருக்கிறார். அந்த ஊருலயும் பேத்திக்கு பாட்டி பேரை நினைவா வச்சிருக்காங்கப்பா..

படம் நம்ம ஊரு அந்த காலப்படம் போலவே தான் நின்னா பாட்டு உக்காந்தா பாட்டு ... கோவம் வந்தாக்கூட பாட்டு தான்.. லிரிக்ஸ் தேடிப்பிடிச்சுப் படிச்சேன் ஆகா.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
[TEVYE]
Tradition, tradition! Tradition!
Tradition, tradition! Tradition!

[TEVYE & PAPAS]
Who, day and night, must scramble for a living,
Feed a wife and children, say his daily prayers?
And who has the right, as master of the house,
To have the final word at home?

The Papa, the Papa! Tradition.
The Papa, the Papa! Tradition.

[GOLDE & MAMAS]
Who must know the way to make a proper home,
A quiet home, a kosher home?
Who must raise the family and run the home,
So Papa's free to read the holy books?

The Mama, the Mama! Tradition!
The Mama, the Mama! Tradition!

[SONS]
At three, I started Hebrew school. At ten, I learned a trade.
I hear they've picked a bride for me. I hope she's pretty.

The son, the son! Tradition!
The son, the son! Tradition!

[DAUGHTERS]
And who does Mama teach to mend and tend and fix,
Preparing me to marry whoever Papa picks?

The daughter, the daughter! Tradition!
The daughter, the daughter! Tradition!

எல்லாப்பாட்டுமே நல்லாவே இருந்தது.. எல்லாத்தையும் இங்கே காப்பி பேஸ்ட் செய்தா பதிவு நான் பேசுவதை விட பெரிசாகிவிடும் .. உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாக் கூட ஆகிடும். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் போட்டுக்கிறேனே.. மகளின் காதலுக்கப்பறமாக, அப்பா மெதுவாக அம்மாவிடம் நீ என்னைக்காதலிக்கிறாயா என்று கேட்டு வெக்கப்படுவார் பாருங்க.. ஆகா..உடனே அம்மாக்கு ஒரு பொய் கோபம் சும்மாப்போய்யான்னு ஒரு திட்டு.. பின்னாடி அப்படியே பேசிப்பேசி சேர்ந்து உக்காந்து ஒரு முடிவுக்கும் வந்திடறாங்க.. காட்சியைக் கண்டிப்பா பாருங்க..



(Tevye)
"Golde, I have decided to give Perchik permission to become engaged to our daughter, Hodel."

(Golde)
"What??? He's poor! He has nothing, absolutely nothing!"

(Tevye)
"He's a good man, Golde.
I like him. And what's more important, Hodel likes him. Hodel loves him.
So what can we do?
It's a new world... A new world. Love. Golde..."

Do you love me?

(Golde)
Do I what?

(Tevye)
Do you love me?

(Golde)
Do I love you?
With our daughters getting married
And this trouble in the town
You're upset, you're worn out
Go inside, go lie down!
Maybe it's indigestion

(Tevye)
"Golde I'm asking you a question..."

Do you love me?

(Golde)
You're a fool

(Tevye)
"I know..."

But do you love me?

(Golde)
Do I love you?
For twenty-five years I've washed your clothes
Cooked your meals, cleaned your house
Given you children, milked the cow
After twenty-five years, why talk about love right now?

(Tevye)
Golde, The first time I met you
Was on our wedding day
I was scared

(Golde)
I was shy

(Tevye)
I was nervous

(Golde)
So was I

(Tevye)
But my father and my mother
Said we'd learn to love each other
And now I'm asking, Golde
Do you love me?

(Golde)
I'm your wife

(Tevye)
"I know..."
But do you love me?

(Golde)
Do I love him?
For twenty-five years I've lived with him
Fought him, starved with him
Twenty-five years my bed is his
If that's not love, what is?

(Tevye)
Then you love me?

(Golde)
I suppose I do

(Tevye)
And I suppose I love you too

(Both)
It change a thing
But even so
After twenty-five years
It's nice to know
-----------------------------------------
அப்படியே இன்னும் நிறைய பாட்டு இருக்கு நேரமிருந்தால் படிச்சுப்பாருங்க அங்கேயே...

36 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு..

சென்ஷி said...

/அரேஞ்சுடு மேரேஜ் கள் காதல் திருமணங்களாக நிச்சயதார்த்ததிற்கு பிறகு மாற்றப்படுகிறது.//

அப்படியா!!!!!!!!!!!!!

சென்ஷி said...

//உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாக் கூட ஆகிடும். //

வெறும் மூன்று பக்கத்திற்கு ஒரு பதிவை எழுதிட்டு அண்ணனின் பெருமையை களங்கப்படுத்துவது போல என்று கூறி உ.த.வுக்கு போட்டி என்று சொல்வத அண்ணனின் கொலவெறி மன்றம் சார்பாய் இந்த பின்னூட்டம் இடுகின்றோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன சென்ஷி அப்படியாங்கற.. மாப்பிள்ளை போன்ம்மா ன்னு சொல்லிக் கொண்டுவந்து குடுக்க.. இவங்க மூலை தேடி உக்காந்து பிடிச்ச கலருலேர்ந்து நடிகர் நடிகை வர சூப்ப்ரா நிச்சய்மானதிலேர்ந்து கல்யாணத்துக்குள்ள எல்லாம் பேசி முடிவுக்கு வந்துடறாங்க.. இல்ல அதை சொன்னேன்.. :))

சென்ஷி said...

//தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது.//

இங்க எங்கயோ எனக்கு புகையற வாசனை வீசுதே.....!!!! :)))

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்ன சென்ஷி அப்படியாங்கற.. மாப்பிள்ளை போன்ம்மா ன்னு சொல்லிக் கொண்டுவந்து குடுக்க.. இவங்க மூலை தேடி உக்காந்து பிடிச்ச கலருலேர்ந்து நடிகர் நடிகை வர சூப்ப்ரா நிச்சய்மானதிலேர்ந்து கல்யாணத்துக்குள்ள எல்லாம் பேசி முடிவுக்கு வந்துடறாங்க.. இல்ல அதை சொன்னேன்.. :))
//

இதுல எல்லாம் பேசின்னு சொல்றதை நான் கடுமையா ஆட்சேபிக்கறேன். அவங்க சொல்றத இவங்க ஏத்துக்கனும்னு கட்டாயப்படுத்தும் முயற்சியின் முதல் வினை இது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உ. த சொந்தமாவே பல பக்கங்கள் எழுதுவார்.. நான் காப்பி பேஸ்ட் அந்த பாடல்களை செய்தா கூட அவரு ரெக்கார்டை பீட் செய்வது கஷ்டம் தான்னு..நான் சொல்லி இருக்கேன் நீங்க தவறா எடுத்துக்கூடாது.. ( நாங்க கவுண்டம்ணி ஸ்டைல்ல தடால்ன்னு காலில் விழுந்துடுவோம்ல)

சென்ஷி said...

கடைசி வரைக்கும் படத்தோட கதை என்னன்னு சொல்லவே இல்லியேக்கா :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படியே வாய் பேசிட்டிரு. ஒர்க் அவுட் ஆகிரும்ப்பா ஒர்க் அவுட் ஆகிரும் நல்லா.. க்ர்ர்

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இப்படியே வாய் பேசிட்டிரு. ஒர்க் அவுட் ஆகிரும்ப்பா ஒர்க் அவுட் ஆகிரும் நல்லா.. க்ர்ர்
//

இது சரியில்ல. ஒரு பி.ந.வனாவ இ.வா. ஆக்குற முயற்சி இதுன்னு சொல்ல வந்தேன்.

ஆயில்யன் said...

//ஒரு பாட்டுல ஆடறார் பாருங்க ஆட்டம் மனுசன்///

பணக்காரனாகினால் எப்படி வாழ்க்கை தரம் உயரும் என்பதை உயரமான இடத்தில் நின்று கொண்டு பாடும் பாட்டில்லும் அதில் இடையிடையே ஆர்ப்பரித்து ஆடும் ஆட்டமும் ரசிக்க வைத்தது!

:)

ஆயில்யன் said...

//ஒரு தோழி சொன்னார் அவர் கட்டிக்கபோறவருக்கு கண்டபடி திட்டிக்கொஞ்சலையேன்னு வருத்தமாம்.. அட காசா பணமா திட்டுங்களேன்னு சொன்னேன். :-)//

ரொம்ப விவரமானவரு போல கட்டிக்கப்போறவரு...! இப்பவே ஆரம்பிச்சிட்டா கல்யாணம் ஆனதும் பழகிடும்ன்னு பிரியப்படுறாரு போல!

திட்டுங்கம்மா திட்டுங்க :)))

ஆயில்யன் said...

//வயதான ஒருவரை கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்யும் போது அவள் பட்டினி இன்றி வாழ்வாள் என்று மட்டுமே அவர் பார்க்கிறார்//

படம் வந்த அதே ஆண்டுகளில் நம் ஊர்களில் கூட இந்த விவாகம் ரொம்ப சகஜமான பழக்கமாகத்தான் இருந்திருக்கிறது! ஏழ்மையிலிருந்து தன் மக்களாவது விடுபட்டு நல்ல வாழ்க்கை அட்லீஸ்ட் நல்ல உணவு இருப்பிடமாவது பெறட்டும் என்று நினைத்தவர்கள் எத்தனையோ பேர்! :(

ஆயில்யன் said...

//அப்பா மெதுவாக அம்மாவிடம் நீ என்னைக்காதலிக்கிறாயா என்று கேட்டு வெக்கப்படுவார் பாருங்க.. ஆகா..உடனே அம்மாக்கு ஒரு பொய் கோபம் சும்மாப்போய்யான்னு ஒரு திட்டு.. பின்னாடி அப்படியே பேசிப்பேசி சேர்ந்து உக்காந்து ஒரு முடிவுக்கும் வந்திடறாங்க.. காட்சியைக் கண்டிப்பா பாருங்க..
///

சூப்பரூ நான் பார்த்துட்டேன்ன்ன்ன்!
மிக தயக்கத்துடன் ஆரம்பித்து,தயக்கமான பதில் பெற்று முடிவில் இணைந்த வரிகள்
It change a thing
But even so
After twenty-five years
It's nice to know

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்ன சென்ஷி அப்படியாங்கற.. மாப்பிள்ளை போன்ம்மா ன்னு சொல்லிக் கொண்டுவந்து குடுக்க.. இவங்க மூலை தேடி உக்காந்து பிடிச்ச கலருலேர்ந்து நடிகர் நடிகை வர சூப்ப்ரா நிச்சய்மானதிலேர்ந்து கல்யாணத்துக்குள்ள எல்லாம் பேசி முடிவுக்கு வந்துடறாங்க.. இல்ல அதை சொன்னேன்.. :))
///

உண்மை!

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது.//

இங்க எங்கயோ எனக்கு புகையற வாசனை வீசுதே.....!!!! :)))
//

உங்களுக்கும் புகையுற வாசனை வீசுதா ??? :)))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் மெயலில் நீங்க அடிச்சிருந்த உங்க வரிகள் இதை விட அழகா இருந்தது அது இங்க >>>>
\\பாடல் எக்ஸ்பிரசன்ஸ் பெரியவரு கொடுக்கறது செமகலக்கல் அதுவும் if i were rich manla ஏணிப்படியேறி மேல போய் நின்னுக்கிட்டு போடற ஆட்டமும் பிறகு கீழே வந்த பிறகு அப்படி மெல்ல நிதர்சன உலகத்துக்கு மாறதும் ரியலி சூப்பர்!//

கானா பிரபா said...

வெகு நாட்களாகப் பார்க்கவேண்டும், பின்னர் அதைப் பதிவாகத் தரவேண்டும் என்று ஆசைபட்ட படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கானா.. நீங்களும் தான் எழுதுங்க நான் கால் வாசி தானே எழுதினேன்..

Thekkikattan|தெகா said...

:-) Thanks!

//தினம் நான்கு முறை போன். ஒவ்வொன்றும் 1 மணி நேரம் என்று அட்டகாசக்காதல்களும் , பரிசுகள் பரிமாறுதலும் என்று நடக்கிறது.//

அட இதுதான் காதலா...~~~

கவிதா | Kavitha said...

என்னங்க இது பாடல் வரிகள் எல்லாம் தேடி கண்டுபிடிச்சி போட்டு இருக்கீங்க..... உங்க பரஸன்டேஷன் நல்லா இருக்கு..:)

மங்கை said...

கோவை ரெயின்போ தியேட்டர்ல பார்த்தேன்.. ஸ்கூல்ல படிச்சப்போ பார்த்தது...

நல்லா நினைவுல இருக்குற படத்துல இதுவும் ஒன்னு...Good one

dondu(#11168674346665545885) said...

அரசு அவர்களுக்கு சமீபத்தில் 1976-ல் நான் இட்ட கேள்வி இது:
"Fiddler on the roof படம் பார்த்து விட்டீர்களா? அதில் கதாநாயகனாக வரும் எனது அபிமான இஸ்ரவேல யூத நடிகர் டோப்போலின் நடிப்பு எப்படி?

அதற்கு அரசு அவர்களின் பதில் (நினைவிலிருந்து தருகிறேன், வார்த்தைகள் சற்று முன்னே பின்னே இருக்கலாம்). "இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடின்றி அலைந்ததை இக்கதையின் மூலம் இயக்குனர் கூற முயன்றுள்ளார். டோப்போலின் நடிப்பு அபாரம்".

அதிகம் தாக்கிய படம் Fiddler on the roof. சமீபத்தில் 1976-ல் பார்த்தேன். யூதக்கதை. நடிப்பு எனது அபிமான இஸ்ரவேல நடிகர் டோபோல். டோண்டு ராகவனுக்கு பிடிக்காமல் இருக்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

ரீடர்ல உங்க பதிவைப் படிச்சிட்டு படம் பாக்கணும்னு ஆசையா இருக்குங்க. நடிகரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், உங்க விடியோ-துண்டு பாத்தேன்! டோபோல் கிடுக்கிக் கேள்வியா கேட்டு அந்தம்மா கடோசியில "அப்படித்தான் போல" (ஐ சப்போஸ் ஐ டூ)ன்னவுடனே டோபோல் வசனத்துக்கேற்ற ("ஓ, அப்ப நானும் உன்னைக் காதலிக்கிறேன்") உடல்மொழி அற்புதம்!! படத்தைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

தெ.கா. சொன்னாற்போல, எனக்கும் இந்த கருத்து உண்டு: நாம் பார்க்கும் பல நம்மூர் 'காதல் திருமணங்கள்', ஏன் அரேஞ்சுடு-காதல் திருமணங்கள்லாம் கூட, சௌகரிய / புரிதல் திருமணங்களோ? ஏதோ, அவிங்க சந்தோஷமா இருந்தா சரி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா கிண்டலா... காதல்ங்கறது புரிதல்ன்னு நினைச்சு அந்த வரியை எழுதிகிட்டேன்..

---------------------

கவிதா, நன்றிப்பா.. நல்லா இருந்ததுன்னு சொல்லலாம்ன்னா எல்லாருக்கும் அப்படியே ரசிக்க ஒரு வாய்ப்பா இருக்கட்டுமேன்னு தான் அதையும் போட்டேன்.. அப்பறம் எனக்கும் திரும்ப ஞாபகம் செய்துக்க வசதியா இருகுமில்ல லிங்க் சேமிப்பு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமீபத்திலா... ஆகா டோண்டு .. அப்ப நான் 2 வயசு தான் இருந்திருப்பேன்..


----------------------------

எப்படின்னாலும் புரிஞ்சாத்தான் வாழ்க்கை இல்லையா கேக்கே பிக்குணி.. :)

உண்மைத்தமிழன் said...

//எல்லாப் பாட்டுமே நல்லாவே இருந்தது.. எல்லாத்தையும் இங்கே காப்பி பேஸ்ட் செய்தா பதிவு நான் பேசுவதைவிட பெரிசாகிவிடும். உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாகூட ஆகிடும்.//

ஆஹா.. இதுதானா அந்த போஸ்ட்டு..

இப்பத்தான் யாரோ கூவுனாங்க.. முத்தக்கா பதிவுல உம்பேர கும்முறாங்கப்பான்னு.. அதான் பதறியடிச்சு ஓடியாந்தேன்..

இம்புட்டுத்தானா மேட்டரு..?

ஏன் தாயி.. நான் மட்டுமா பெரிசு, பெரிசா எழுதுறேன்.. பிளாக்ல அல்லாரும்தான் அப்பப்ப எழுதிக் குமுக்கிறாய்ங்க.. உங்களுக்குத்தான் என்னைத் தவிர வேற யாரையும் தெரிய மாட்டேங்குது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆ.. ரொம்ப ஃபீலாகிட்டீங்களா உண்மைத்தமிழன்.. விசயம் என்னன்னா .. இப்ப முத்துக்கா ன்னா மைக் கிடைச்சா விடமாட்டாங்க.. சிபி ன்னா கலாய்ப்பாரு.. அது மாதிரி உ. தமிழன்னா பெரிசா பதிவெழுதுவார்ன்னு ஒரு இது அதாங்க அடையாளம் உண்டாக்கி வச்சுக்கிட்டு.. கலாய்ச்சிக்கறது தான்.. அதான் அடிக்கடி சின்னப்பதிவு எழுதி பட்டத்தை வாபஸ் வாங்க சொல்றீங்களோ.. :)

உண்மைத்தமிழன் said...

///சென்ஷி said...
//உண்மைத்தமிழனுக்குப் போட்டியா போட்ட போஸ்டாக் கூட ஆகிடும். //
வெறும் மூன்று பக்கத்திற்கு ஒரு பதிவை எழுதிட்டு அண்ணனின் பெருமையை களங்கப்படுத்துவது போல என்று கூறி உ.த.வுக்கு போட்டி என்று சொல்வத அண்ணனின் கொலவெறி மன்றம் சார்பாய் இந்த பின்னூட்டம் இடுகின்றோம்.///

அடப்பாவி..

பாராட்டுற மாதிரி பாராட்டிட்டு, திட்டுற மாதிரி திட்டுட்டுப் போறது..

இதுல அண்ணன்.. மன்றம்ங்கிறது..

இப்படி உசுப்பி, உசுப்பித்தான்..

இதற்கு மேல் ஏதோ வசனம் இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன்.. அது என்னன்னு தெரியாததால முத்தக்கா நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
உ. த சொந்தமாவே பல பக்கங்கள் எழுதுவார்..//

அப்பாடா.. இது ஒண்ணையாச்சும் ஒத்துக்கிட்டீங்களே.. தேங்க்ஸ் சிஸ்டர்..

//நான் காப்பி பேஸ்ட் அந்த பாடல்களை செய்தாகூட அவரு ரெக்கார்டை பீட் செய்வது கஷ்டம்தான்னு நான் சொல்லி இருக்கேன்.. நீங்க தவறா எடுத்துக்கூடாது.. (நாங்க கவுண்டம்ணி ஸ்டைல்ல தடால்ன்னு காலில் விழுந்துடுவோம்ல)//

தப்பா எடுத்துக்கலக்கா.. இதெல்லாம் ஓசில கிடைக்குற விளம்பரம் மாதிரிதான்..

உண்மைத்தமிழன் said...

முத்தக்கா..

சந்தோஷத்துல பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லாமப் போயிட்டேன்..

அந்தக் காட்சியைப் பார்த்தேன். தத்ரூபம்.. இது போன்ற சில காட்சிகள் மட்டுமே ஒரு திரைப்படத்தை நம் நினைவில் என்றென்றைக்கும் வைத்திருக்கும்.. இதனால்தான் உங்களுக்குப் பிடித்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அக்கா..

உண்மைத்தமிழன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆ.. ரொம்ப ஃபீலாகிட்டீங்களா உண்மைத்தமிழன்.. விசயம் என்னன்னா.. இப்ப முத்துக்கான்னா மைக் கிடைச்சா விடமாட்டாங்க.. சிபின்னா கலாய்ப்பாரு.. அது மாதிரி உ. தமிழன்னா பெரிசா பதிவெழுதுவார்ன்னு ஒரு இது.. அதாங்க அடையாளம் உண்டாக்கி வச்சுக்கிட்டு.. கலாய்ச்சிக்கறதுதான்.. அதான் அடிக்கடி சின்னப்பதிவு எழுதி பட்டத்தை வாபஸ் வாங்க சொல்றீங்களோ:)//

இப்படி எழுதியாவது வாபஸ் வாங்க வைச்சுக்கலாம்னு பாக்குறேன்தான்..

உடனடி பதிலுக்கு நன்றி..

ஆனாலும் நாங்கதான் வேலை வெட்டி இல்லாதவங்க.. குடும்பம், குட்டின்னு இல்லாத மனுஷங்க.. இணையத்தைக் கட்டி மேய்ச்சுக்கிட்டு இருக்கோம் தூக்கம் வராம..

நீங்களுமா..? இந்த நேரத்துலேயும் கணிணி முன்பு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.. பாராட்டுகிறேன்..

அபி அப்பா said...

/அரேஞ்சுடு மேரேஜ் கள் காதல் திருமணங்களாக நிச்சயதார்த்ததிற்கு பிறகு மாற்றப்படுகிறது.//

அப்படியா!!!!!!!!!!!!!

enakkum athu pathi ellaam suthama theriyathu:-))

அபி அப்பா said...

//என்ன சென்ஷி அப்படியாங்கற.. மாப்பிள்ளை போன்ம்மா ன்னு சொல்லிக் கொண்டுவந்து குடுக்க.. இவங்க மூலை தேடி உக்காந்து பிடிச்ச கலருலேர்ந்து நடிகர் நடிகை வர சூப்ப்ரா நிச்சய்மானதிலேர்ந்து கல்யாணத்துக்குள்ள எல்லாம் பேசி முடிவுக்கு வந்துடறாங்க.. இல்ல அதை சொன்னேன்.. :))
//

ata ramaa, ippadiyellaamaa natakkum! perumale kali muththiduchu:-))

கப்பி | Kappi said...

அறிமுகத்திற்கு நன்றி ஹை! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி உண்மைத்தமிழன்... உலகம் பூரா உறவினர்களும் நண்பர்களும் இருக்கையில் நமக்கு கால நேரமென்ன இணையத்தில்... :)

------------------
அபி அப்பா உங்களுக்கு எதுவுமே தெரியாது .. அபி அம்மா கிட்டத்தான் கேக்கனும்.. :)

என்ன கலிகாலத்தைப்பத்தி எல்லாம் பேசறீங்க அப்ப உங்களுக்கு வயதாகிடுச்சுன்னு சொல்லறாங்களே உண்மைதானா..?

-----------------------
கப்பிஜி நன்றி ஜி...