July 22, 2009

துவக்கப்பள்ளிக்காலம்


தோழியாக அவார்ட் குடுத்த புதுகைத்தென்றலுக்கு நன்றி . போனமுறை சுவாரசியப்பதிவு என்று பாராட்டவேண்டி இருந்ததால் அவார்டை பிரித்துக்கொடுத்தேன். இது நண்பர்களுக்கான விருது தானே..என் நண்பர்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதால் பிரித்துக்கொடுக்கவில்லை.
--------------------------------------
தொடர்பதிவுக்குன்னே இந்த தளத்தை வைச்சிடலாமாங்கற அளவு மக்கள் தொடர்ந்து தலைப்புகளை தந்தவண்ணம் இருக்க.. நானும் அம்மா தலைப்பப் பிடிச்சக் குழந்தையாக போய்க்கொண்டிருக்கிறேன். இப்போ தமிழ்பிரியனின் தொடரழைப்புக்காக என் இளமைக்காலங்களுக்குள்ளே நுழையலாம்...

நான் முதல் முதலில் பள்ளிக்கூடம் போனது ஒன்றாம் வகுப்பு. சிலர் அரைக்ளாஸ் , பேபிக்ளாஸ் எல்லாம் முடிந்து போயிருப்பீர்கள். அது ஒரு சின்னக்கிராமம் திருவெண்காடுன்னு பெயர். ...பள்ளிக்கூடம் பெயர் ... மெய்கண்டார் துவக்கப்பள்ளி. அது இப்போது இடிக்கப்பட்டு சங்கரமடம் வந்திருப்பதாகக் கேள்விபட்டேன். முதல் வகுப்பு ஆசிரியை பெயர் ஜானகியாம் .. அது என்ன ஆம் என்றால், என் அம்மாவிடம் நேற்று கேட்டு நினைவுப்படுத்திக்கொள்ள முயற்சித்தேன்.. அத்தனை நினைவாற்றல். முதல் நாள் வகுப்பறைக்காட்சி மட்டுமே என் மனதில் நிழலாடுகிறது. இருட்டான வகுப்பறையில் மேலிருக்கும் கண்ணாடிவழி ஒளிகசிய அந்த ஒளிக்கற்றைக்கு பின்னால் ஆரஞ்சு வண்ணத்தில் சேலையணிந்த ஆசிரியை.பின் ஒருநாள் நாங்கள் மாயவரத்துக்கு மாறிப்போய்விட்டபின் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்ததாக நினைவு.

இரண்டாம் வகுப்பு சுத்தமாக நினைவே இல்லை.. சோம்பேறியின் ”ஏ நீ ரெண்டாம்ப்பு பாஸ் பண்ணி இருக்கியா நினைவு வருகிறது ” பாஸ் செய்திருப்பேனாத்தான் இருக்கனும். அதற்கு ஒரு ஆசிரியர் பிரம்போடு இருப்பது போன்ற ஒரு காட்சி ஒரு நொடிப்பொழுது வந்து மறைகிறது. அப்போது என்னோடு படித்த என் தோழி ஒருத்தி இன்றும் தொடர்பில் இருக்கிறாள். அவர்கள் குடும்பமே எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்கள் ..அந்த ஒரு காரணத்தால் தான் அந்த தோழி இன்னும் நட்பில் இருக்கிறாள். அவள் அடிக்கடி நினைவுபடுத்துவது நாங்கள் இருவரும் சிலேட்டில் எங்கள் மார்க்கைத் திருத்திக் காண்பித்தோமாம்.

மூன்றாம் வகுப்புக்கு நாங்கள் மாயவரம் வந்துவிட்டோம். சர்ச்சை சேர்ந்த ஸ்கூல் ..நர்ஸ் போன்ற வெள்ளை உடையும் தொப்பியுமாக ஜெர்மன் அம்மா தான் தலைமை.
அங்கே பல ஏழைகிராமக் குழந்தைகள் விடுதியில் தங்கிப்படிப்பது உண்டு. மூன்றாம் வகுப்பு சேர்ந்த புதிதில் நோட் வேண்டும் என்று டீச்சர் சொல்லி அதை நான் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டதால் பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு. அப்போது தான் இந்த மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகள் அறிமுகம்.. தரையோடு ஒட்டிய பலகைகள் நினைவுக்கு இருக்கிறது
நாலாம் வகுப்பு டீச்சரை நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. ஆனால் பெயர் நினைவில்லை. அவர்கள் தான் முதன் முதலில் எனக்கு கண் பார்வையில் கோளாறு இருக்குமோ என்று சொன்னது. வகுப்புப்பாடங்களை தப்பும் தவறுமாக எழுதிவிட்டு போர்டில் க்ளார் அடிப்பதாகக் குற்றம் சாட்டி வந்தேன்.

ஐந்தாம் வகுப்பு டீச்சரை நல்லா நியாபகம் இருக்கு. நித்யா டீச்சர். அவங்க தலைமை ஆசிரியராவும் இருந்ததால் அவங்களுக்கு பாடம் எடுக்கவே நேரம் இருக்காது. பல நேரம் நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவும் சபி முனிசா தான் டாக்டர்.. பசங்க எல்லாம் பெஞ்சுகளில் ஏறி குதித்து விளையாடுவார்கள். அந்த வகுப்பில் படித்த நாலைந்து பெண்கள் கல்லூரியிலும் ஒன்றாக படிக்க நேர்ந்ததால் தொடர்பில் இருக்கிறார்கள். வகுப்பருகில் இருந்த மகிழம்பூ மரம் எனக்கு மிகப்பிடித்தமானது. பலநேரம் அவற்றை தொகுத்து மாலையாக்குவோம்.

பள்ளியில் தோட்டம் இருந்தது வெண்டைக்காய் , அவரைக்காய் போன்றவற்றை அங்கே நாங்களே வளர்த்து பறித்தது நினைவுக்கு இருக்கிறது. வாத்துகள் நிறைந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவோம். தென்னந்தோப்பிலிருந்து காய்களை இழுத்துவந்து ஓரிடத்தில் குவிப்பது, தென்னை குச்சிகளால் இடங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் கூட செய்திருக்கிறோம். படிப்பைத்தவிர எல்லாம் நினைவுக்கு வருகிறது.

கிருஸ்துமஸுக்காக குழுநடனம் கோலாட்டம் ஆடி இருக்கிறேன். அப்போதெல்லாம் பயிற்சிக்கென்று வகுப்பிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோம். அது மிகப்பிடித்தமானது. அங்கே நடக்கும் கிருஸ்துமஸ் நாடகமென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த தேவதைகளும் வழிகாட்டும் நட்சத்திரங்களும் மேய்ப்பர்களும் நேரிலேயே பெத்தலகேமில் இருந்து பார்த்த உணர்வைத்தரும்.பெத்தலகேம் பிறந்தவரை போற்றி துதி மனமே!!

எனக்கு வகுப்பெடுக்காவிட்டாலும் ஒன்னாப்பு டீச்சரை மட்டும் பள்ளிக்கே பிடிக்கும்..என் தம்பி அவர்களிடம் படித்ததால் பின்னொரு நாள் நாங்களிருவருமாய் போய் பார்த்துவந்தோம். திருமணம் செய்துகொள்ளாமல் பள்ளியிலேயே தங்கி இருந்த அவர்களை பெயர் சொல்லியாருமே அதிகம் அழைப்பதில்லை ஒன்னாப் டீச்சரென்றாலே ப்ரபலம் தான். என் தம்பி மட்டும் பேபிக்ளாஸ் படித்தான். அங்கே ஜெர்மனில் இருந்து வந்த பல விதமான விளையாட்டு ப் பொருட்கள் இருக்கும். பொம்மை பிஸ்கட்கள் இருக்கும். மதியம் பாய் விரித்துத் தூங்குவார்கள். பின்னால் தலை சீவி கையில் பிஸ்கட்களுடன் வெளியே வரும் அவர்களைப் பார்த்து நாம் பேபிக்ளாஸ் படிக்கவில்லையே என்று பல நாள் சோகமாக இருந்திருக்கிறேன்.

பைபிள் க்ளாஸ் உண்டு . அதில் பரிட்சை உண்டு. பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவே என்று ஆரம்பித்த ப்ரேயர் உண்டு. ஆற்றுமணலாகக் குவிந்த முன் திடலும் மாமரங்களும் கூரைவேய்ந்த சாப்பாடுகூடமும் நினைவுக்கு வருகிறது. ஒன்றே ஒன்று தான் பள்ளியில் பிடிக்காதது. அது கழிப்பறை. மிகக்கொடுமையானதாக இருக்கும். அத்தனை குழந்தைகளுக்கு அது போதுமானதாக இருந்ததில்லை. மேலும் மிகத்தொலைவும் கூட.
----------------------------------------------

யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

34 comments:

Radhakrishnan said...

ஆசிரியர்கள் பற்றி நினைவு கூர்ந்த விதம் அருமை. எதையும் நினைவில் சேர்த்து வைக்க வேண்டும் என எண்ணமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை அது என்பதால் பல விசயங்கள் மறந்து போயிருக்கும்.

இதுபோன்று கற்றுத்தந்த ஆசான்களை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறேன், எனது ஆசைகளையும், சில்வண்டுகளையும் முடித்த பின்னர் வெளியிடுகிறேன்.

மிக்க நன்றி.

Admin said...

உங்கள் இளமைக்காலம் வாசிக்கும்போது நானும் இளமைககாலத்த்துக்கே போய் வந்து விட்டேன்.

க.பாலாசி said...

//பின் ஒருநாள் நாங்கள் மாயவரத்துக்கு மாறிப்போய்விட்டபின் அவர்களை அவர்கள் வீட்டில் சந்தித்ததாக நினைவு. //

அக்கா நீங்களும் மாயவரமா. பரவாயில்லை..நான் கண்ட பதிவர்களில் நிறைய ஒருங்கினைந்த தஞ்சைமாவட்டத்துக்காரர்களாக இருக்கிறார்கள். என்ன ஓற்றுமை. எங்கேயோ பிறந்து வளர்ந்து இவ்விடத்தில் ஒன்றுபடுகிறோம். வாழ்க பிளாகர்.காம்.


அப்பறம் பள்ளிவயது அனுபவங்கள் என்றுமே இளமைதான். முதுமையிலும் பள்ளிவாழ்க்கை ஒரு இனிமையான இளமையை நம்மிடம் தருகிறது. மறக்கமுடியா, மறுக்கமுடியா சுகம். தங்களின் அனுபவமும் கண்டேன். நீங்கள் இதை எழுதும்போதே மனதில் ஒரு மகிழ்ச்சி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படிதானே.

சென்ஷி said...

//யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.//

யாரும் கமெண்டு போடவேணாம்னுன்னு சொல்றீங்களாக்கா :)

ஆயில்யன் said...

அழகாய் ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி முத்தக்கா & முத்தக்கா அம்மா :))

♫சோம்பேறி♫ said...

/*சோம்பேறியின் ஏ நீ ரெண்டாம்ப்பு பாஸ் பண்ணி இருக்கியா நினைவு வருகிறது */

விளம்பரத்துக்கு டேங்க்ஸ் கா.. ஆனாலும் அந்தப் பதிவின் உரல் கொடுக்காததால், கோவமாக கோவிச்சுக்கிட்டு போறேன்.

இனி சக்திவேல் திரும்பி வரும் வரை நானும் எழுத மாட்டேன்.. விடை பெறுகிறேன்.. (என்னாது விடை தெரியாதா? மாதினி, சபரி யாரு கிட்டயாவது கேட்டு சொல்லுங்க) ஆதரவுக்கு நன்றி..

Thekkikattan|தெகா said...

பின்னால் தலை சீவி கையில் பிஸ்கட்களுடன் வெளியே வரும் அவர்களைப் பார்த்து நாம் பேபிக்ளாஸ் படிக்கவில்லையே என்று பல நாள் சோகமாக இருந்திருக்கிறேன். ///

அதானே என்னடா இன்னும் இது மாதிரி ஒரு கட்டம் வரலைன்னு படிச்சிட்டே வந்தேன்... அது பிஸ்கட் மூலமா வந்துருச்சு :-). அந்த வயசில ஏதையாவது வைச்சு பொறாமை கொஞ்சம் எட்டிப் பார்க்கலன்னா எப்பூடி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இராதாகிருஷ்ணன் நன்றி கண்டிப்பா உங்கள் அனுபவங்களை சீக்கிரமே எழுதுங்க ..
-----------------------------
சந்ரு நன்றி :)
-------------------
ஆமா பாலாஜி நினைத்துப்பார்க்க இனிமையாத்தான் இருந்தது.. :)
--------------------------
சென்ஷி முதல்லயே நீ தான் போட்டுட்டியே இளமைக்காலம் போஸ்ட் .. அவார்ட்ன்னாலும் ஓடறீங்க .. என்னதான் செய்ய சொல்றீங்க.
---------------------
ஆயில்யன் அம்மாக்கு உங்க பாராட்டை போஸ்ட் செய்துடறேன்.. நன்றி..
--------------------------
சோம்பேறி உங்க சோம்பேறித்தனத்துக்கு எங்கள குறை சொல்லக்கூடாது .. :)

☀நான் ஆதவன்☀ said...

//யாருக்கேனும் தொடர ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.//

இந்த பதிவுக்கு யாரும் கமெண்ட் போடாதீங்கன்னு டீசண்ட்டா சொல்ல வேண்டியது தானே. எதுக்கு சுத்தி வளைச்சுகிட்டு :)

☀நான் ஆதவன்☀ said...

//இனி சக்திவேல் திரும்பி வரும் வரை நானும் எழுத மாட்டேன்.. விடை பெறுகிறேன்.. (என்னாது விடை தெரியாதா? மாதினி, சபரி யாரு கிட்டயாவது கேட்டு சொல்லுங்க) ஆதரவுக்கு நன்றி..//

தெரிஞ்சிருந்தா லின்ங்கே கொடுத்திருக்க மாட்டேனே!

rapp said...

அந்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்லாம் ஆகாதே:):):) சோம்பேறி, சக்திவேலை முந்தி, முத்து, முத்தான அந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்துட்டாங்க:):):)

☀நான் ஆதவன்☀ said...

இதுவரைக்கும் ஞாபகம் வைத்திருப்பதே பெரிய விசயம் மேடம். என்ன தான் தொடர் பதிவா?ன்னு சலிப்பு வந்தாலும் இந்த மாதிரி பழைய ஞாபகங்களை கிளறும் பல தொடர் பதிவை படிக்கும் போது சுவாரஸியமாகத்தான் இருக்கிறது :)

உங்கள போல நானும் நேரா ஒன்னாப்பு தான். இந்த பேபி க்ளாஸ், எல்.கே.ஜின்னு எதுவும் கிடையாது.

rapp said...

//இருட்டான வகுப்பறையில் மேலிருக்கும் கண்ணாடிவழி ஒளிகசிய அந்த ஒளிக்கற்றைக்கு பின்னால் ஆரஞ்சு வண்ணத்தில் சேலையணிந்த ஆசிரியை.//

ஒளிமயமான எதிர்காலம் உங்க கண்களில் தெரிஞ்சிருக்கு:):):)

//வகுப்புப்பாடங்களை தப்பும் தவறுமாக எழுதிவிட்டு போர்டில் க்ளார் அடிப்பதாகக் குற்றம் சாட்டி வந்தேன். //

:):):)

//அவள் அடிக்கடி நினைவுபடுத்துவது நாங்கள் இருவரும் சிலேட்டில் எங்கள் மார்க்கைத் திருத்திக் காண்பித்தோமாம்.//

சைல்டு லேபராட்டம், சைல்டு கிரிமினலா நீங்க? என்னைய மாதிரி குட்டி பூலான்தேவிங்கக் கிட்ட பயிற்சி எடுத்துருந்தா இன்னும் செம்மையாக இருந்திருக்கும்:):):)

//பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு. //

என்னா வில்லத்தனம்:):):)

rapp said...

super:):):)

Beski said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
---
நான் எல்கேஜி யூகேஜி எல்லாம் கடந்துதான் வந்தேன். எல்லாம் குறைவாகவே ஞாபகம் உள்ளது.
---
அல்ரெடி நாங்க இந்தத் தொடரை ஸ்டார்ட் பண்ணியாச்சு. அழைத்ததற்கு நன்றி.

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
சோம்பேறி, சக்திவேலை முந்தி, முத்து, முத்தான அந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்துட்டாங்க:):):) */

ஹைய்யா.. ஜாலி.. டபுள் தமாக்கா..

ஷக்தி இஸ் பேக்.. ஸோ ஐ'ம் ஆல்சோ பேக்.. நாளையே டெரரான பதிவோடு வருகிறேன்.

Thamiz Priyan said...

நன்றிகள் அக்கா!

கோபிநாத் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ;))

பள்ளிக்காலம் - ம்ம்ம்ம்...நிறைய இருக்கு....நீங்க கொசுவத்தி சுத்தி என்னையும் சுத்தவச்சிட்டிங்க ;)

Anonymous said...

அருமையான நினைவுகள்.

sindhusubash said...

அருமையான பள்ளிக்காலம்! யாருக்கு தான் பிடிக்காம போகும்.எனக்கு டீச்சர் வீட்டிருந்து பொங்கல், தீபாவளி பலகாரமெல்லாம் கிடைச்சிருக்கு.

ராமலக்ஷ்மி said...

ரசிக்கும்படி வெகு அழகாய் நினைவு கூர்ந்து தொகுத்திருக்கிறீர்கள். ஹை, நான் படித்த நர்சரியில் பிஸ்கட் சாப்பிட்டு பாய் விரித்து படுத்துத் தூங்குவோமே:)!

தமிழ்பிரியனை அழைத்த சுசி எனக்கும் வைத்திருக்கிறார் அழைப்பு. ஏற்கனவே துளசி மேடத்தின் பள்ளி நினைவுகளைப் படித்ததில் இருந்தே எழுத ஆசை உண்டு. நேரம் வாய்க்கையில் எழுதுவாய் ஒப்புக் கொண்டிருக்கிறேன் சுசியிடம்:)!

pudugaithendral said...

உங்க கொசுவத்தியை பாத்து எனக்கும் கொசுவத்தி சுத்த் ஆசை வந்திடுச்சு.
சுத்திக்கறேன்

சந்தனமுல்லை said...

//அதை நான் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டதால் பல நாட்கள் கழித்து புது நோட் வாங்கி என் அம்மாவே எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை வந்ததாக நினைவு.//

அவ்வ்வ்வ்வ்!! :-)

நல்ல நினைவுகள் முத்துலெட்சுமி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா.. பொறாமைன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.. இதை விட நல்லா சொல்லனும்ன்னா ஒருத்தங்களுக்கு பொறாமைப்படக்கூடாதுன்னு அட்வைஸ் செய்து குடும்பத்தோட வந்து என்னை பெரிய புத்தராட்டம் பேசறன்னு திட்டி இருக்காங்க.. அப்ப நான் மூணாவதோ நாளாவதோ படிக்கும்போது.. :))

இது வெறும் சோகம்.. அழகம்படத்துல வருமே வேற வீட்டுல பிறந்திருக்கலாம் நாமன்னு அது போல.. கொஞ்சம் வருசம் கழிச்சி பிறந்திருக்கலாமேனு .. :))
----------------------------------
அவசரத்துக்கு சோம்பேறி லிங்க்கைத் தேடிக்கொடுத்த ஆதவனுக்கு நன்றிகள்.. :))
------------------------------
ராப் எப்படியோ எங்க முற்பகல் வினையெல்லாம் தெரிஞ்சுகிட்ட இல்ல நீ.. ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எவனோ ஒருவன் நன்றி.. இந்த வயசிலேயே உங்களுக்கும் நினைவு கம்மியா.. அய்யோ பாவம்..
_________________________-----
திரும்பி வந்ததுக்கு நன்றி சோம்பேறி.. ஆனா திரும்பி வாங்கன்னு கூப்பிட்டு உங்களுக்காக போஸ்ட் போடும் வேலை மிச்சம் போலயே..
---------------------------
தமிழ்பிரியன் தொடருக்கு அழைத்ததற்கு உங்களுக்க்கும் நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி அப்ப மாசக் கோட்டாக்கு இந்த தலைப்பையே தேர்ந்தெடுக்கலாமே..
:)
----------------------------
நன்றி சின்னம்மணி:)
------------------------
சிந்து ,எஙக் வீட்டிலிருந்தும் தீபாவளி க்கு மட்டும் ஒரு பாக்கெட்டில் முறுக்கு ஸ்வீட் போட்டு டீச்சருக்கு குடுப்பது வழக்கம் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி எழுதுங்க .. ஆனா கவனம். இந்த முதல் டீச்சர் முதல் ஸ்கூல் எல்லாம் எழுதும்போது.. ஏன்னா அது சிலர் பாஸ்வேர்ட் ரெக்கவ்ரிக்கு குடுப்பாங்க..
-------------------------
புதுகைத்தென்றல் பாருங்க நீங்க சுத்தாத கொசுவத்தின்னு ஒன்னு எப்பவும் இருந்திட்டே இருக்கு.. :P
----------------------------------
முல்லை அந்த முற்பகல் வினைக்கு இன்று நான் அனுபவிக்கிறேன். என்பையன் எப்போதும் பள்ளிக்கூடத்தில் நடப்பதை சொல்ல பிகு செய்துக்கிறானே.. :)))

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.நினைவுகள் மீள்வாகிப்போனது.

R.Gopi said...

While reading this i went back to my school days............

BTW, i studied in Ramakrishna Mission High School, Kodambakkam..

Yaaravadhu pazhaiya friends kedaikkaraangalaannu pappom....

கோமதி அரசு said...

கயல்விழி,
பள்ளி பருவ நீங்காத நினைவுகள் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நர்சிம் :)
------------------------
ஆர்.கோபி மறுமொழிக்கு நன்றி..
உங்க நண்பர்கள் உங்களுக்கு சீக்கிரமே கிடைக்கட்டும்..
உங்கள் பள்ளி மிக நல்ல பெயருடையது..
---------------------------
நன்றி கோமதிம்மா.. :)

"உழவன்" "Uzhavan" said...

பள்ளிக்கால அனுபவங்களை அழகா சொன்னீங்க. எனக்கு அ, ஆ சொல்லித்தந்த என் முதலாம் வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ் அவர்களை நினைத்துக்கொண்டேன்.

//சர்ச்சை சேர்ந்த ஸ்கூல் //

என்னது சர்ச்சையா??? :-))

//பெத்தலகேம் பிறந்தவரை போற்றி துதி மனமே!!
பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவே //

எல்லா ஊர்லயும் இதே பாடல்தானா :-)) நான் பயின்ற TDTA தொடக்கப்பள்ளியிலும் இதே..

Iyappan Krishnan said...

ஹ்ம்ம்.. இப்ப நானும் ஒண்ணு போடனுமோ?

Annam said...

super ninaivugal