உண்டி சுருக்கி
உணர்வு சுருக்கியும்
போதாமல்
பேயுரு பெற
அம்மையில்லை
அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க
இன்று பேயுமில்லை
நேரிட்டே சொல்லித் தீர்
------------------------------
காற்றை கிழித்து
சரியான நோக்கில்
வீச வீச
மீண்டும் வாகாக
திரும்பிக்கொண்டிருந்தவரை
விளையாட்டு
திரும்பாமல் தாக்கிய
தினத்தில்
தொடங்குகிறது போர்
நிறுவிக்கொள்ளவென்று
முகமூடியிட்டபின்
முயன்றாலும்
முடியப்போவதில்லை
இளைப்பாறுதல்
-----------------------------------
17 comments:
மூன்றும் அருமை.
இரண்டாவது மிகப் பிடித்தது.
இரண்டாவது மிகப் பிடித்தது.
நன்றி ராமலக்ஷ்மி :)
நன்றி ஆயில்யன்..:)
எல்லாமே பிடிச்சுருக்குங்க..
எனக்கு முதலும் பிடித்தது. தினந்தோறும் சில நேரமாவது நான் பேயாடுகிறேன்:)
ஆடியும் பயனில்லை.
மூன்றும் நல்லாயிருக்கு ;-)
இரண்டாவது மிகவும் அருமை..வாகாய் வளைந்து கொடுக்கிறது உங்களுக்கு எழுத்து...இன்னும் இன்னும் மேலும் மேலும் எழுத வாழ்த்துகள்..
நன்றி சாரல் :)
நன்றி வல்லி..:))
நன்றி கோபி :)
நன்றி பாசமலர் :)
mudal kavithai super (azunthiya manadal aadi theerka inru peyumillai, neritte solli theer). pinniteenga muthu
sathya asokan
அருமைக்கவிதைகள்.
//அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க
இன்று பேயுமில்லை//
பல இளம்பெண்களை திருநீறு அடித்து, வேப்பிலை அடித்து, மேளமடித்து ஆடித்தீர்க்க வைத்து இளைப்பாற்றும் எங்கள் ஊர் கோமரத்தாடி(சாமியாடி)தானே, எங்கள் ஊர் மனநல மருத்துவர்.
நல்ல பளீர் கவிதைகள்.
மூன்றுமே நல்லா இருந்துச்சுங்க....
மூன்றுமே மிக அருமை.வார்த்தைகள் உணர்வுகளை அழகாய் சித்தரித்துள்ளன.
மூன்றும் நன்றாக இருக்கிறது முத்துலெட்சுமி.
மூன்றுமே அருமை....
இரண்டாவது - யதார்த்தம்.... நமக்குப் பிடித்தவரை தானே அது விளையாட்டு... பிடிக்காத போது “இந்த பழம் புளிக்கும்” கதைதான்...
விளையாட்டு, போர் பற்றிய இரண்டாவது ஸ்டான்சா - நல்ல சிந்தனை.....
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
Post a Comment