July 23, 2014

புறக்கணிக்க இயலாத தாமதங்கள்

இலகுவிற்கு பழகிய 
கரையை விட்டு 
நகர்ந்துவிட்ட  படகுகள்


துடுப்புகளின் இருப்பிற்கும்
பாய்மரத்தின் இழுப்பிற்கும்
நதியின் நடுவிலிருந்து
புதியகோணங்கள் எழுதும் 
போலிப்படகுகள்

----------------------------
புறக்கணிக்க இயலாத தாமதங்கள்
அவதியற்றிருந்தும் கூட 
ஓர்   நிலையின்மை
உரிமையற்றதாகிவிட்ட பின்னும்
சிறுதொலைவுக்குள்
வண்ணம் நிறைக்கும் அந்திச்சூரியன்
முற்றாய் 
கரைத்துவிடத் தயாரான  இரவு

உறக்கம் தொலைத்து 
கீழ்நோக்கி விழுந்து 
பறக்கத்தயாராய்
நாளெல்லாம் பற்றியிருந்த கிளையை 
விடுவிக்கும் வாவல்

ஒவ்வொரு சங்கிலியாய் 
இளகிக்கொண்டிருக்கும்  மனம்
 

No comments: