February 15, 2007

காதலில் காத்திருத்தல்

நான் -
உனைக் காணும் முன்
மழையை ரசித்ததுண்டு.
இன்றோ உன்னுடன் மழையில்
கை கோர்த்து நடக்க நினைக்கிறேன்.
ஏன் வரவில்லை நேற்று நீ?

நீ -
மழை பெய்ததே!



---------------------------------------
என் மெளனம் அன்று உனக்கும்,
சம்மதிக்கும் முன்.
உன் தாமதம் இன்று எனக்கும்,
சம்மதித்த பின்.
வலி தான்.

-----------------------------------------

நேற்று இன்றைய நினைவுகளாய்,
நாளை இன்றைய கனவுகளாய்,
நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய்,
காத்திருப்பதில்
காதலும் தண்டனை தான்.

மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,
தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,
வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,
காத்திருப்பதில்
அன்பும் துன்பம் தான்.
-----------------------------------------------------------

10 comments:

நாமக்கல் சிபி said...

//மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,
தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,
வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,
காத்திருப்பதில்
அன்பும் துன்பம் தான்.
//

அன்பும் துன்பம்தான்!
வித்தியாசமான சிந்தனைதான்!

வாழ்த்துக்கள்!

பங்காளி... said...

ஒரு ஈ..காக்காயக் கூட கானோம்...ஹி..ஹி.

கொஞ்சம் நெகிழ்வாய் எழுதலாமே...ம்ம்ம்...

ஏதோ என் பேரறிவுக்கு(எத்தன நாளைக்குத்தான் சிற்றரிவுன்னு சொல்லீட்டு இருக்கறது) எட்டினது.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாமக்கல் சிபி அனுப்பிய பின்னூட்டம் எப்படியோ காணாம போயிட்டுது.
நாமக்கல் சிபி சொன்னது,

//மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,
தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,
வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,
காத்திருப்பதில்
அன்பும் துன்பம் தான்.
//

அன்பும் துன்பம்தான்!
வித்தியாசமான சிந்தனைதான்!

வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி , பங்காளி...., வராதவங்கள நினைச்சு சோகமா இருக்கும் போது ...எங்கங்க நெகிழ்வு வரது .:((

நன்றி சிபி சொன்னதுக்காக வந்து பின்னூட்டமிட்டீங்களே.

Unknown said...

/நேற்று இன்றைய நினைவுகளாய்,
நாளை இன்றைய கனவுகளாய்,
நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய்,
காத்திருப்பதில்
காதலும் தண்டனை தான்.

மழைக்காய் காத்திருக்கும் பாலையாய்,
தீபத்திற்கு ஏங்கும் இருளாய்,
வார்த்தைக்கு தவிக்கும் கவிதையாய்,
காத்திருப்பதில்
அன்பும் துன்பம் தான்./

காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\காத்திருப்பின் வலி கொடுமையானதுதான். ஆனால் அதற்குப் பிறகு கிடைக்கும் அன்பு இன்பம்தான்... //

ம்...அன்பு கிடைத்திருந்தால்.??!!

நன்றி அருட்பெருங்கோ காதல் கவிஞர் ஒருத்தர் வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப மகிழ்ச்சி.

சென்ஷி said...

//நேற்று இன்றைய நினைவுகளாய்,
நாளை இன்றைய கனவுகளாய்,
நாட்கள் ஒவ்வொன்றும் வருடங்களாய்,
காத்திருப்பதில்
காதலும் தண்டனை தான்.//

:))

நல்லாயிருக்குது

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷீ .

அபி அப்பா said...

ம் படிச்சாச்சு:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபி அப்பா..