விரல்களுக்குள் அடங்கிவிடும்
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய்
அர்த்தப்படுத்தியபின்
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக
மீதி இறக்கை விரித்து
பறந்து மறைந்தது
ஆண்டாண்டுகளாய்
உறங்கி
விழித்தெழுந்து
தானாய் பூத்தது தாமரை
உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய்
அர்த்தப்படுத்தியபின்
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக
மீதி இறக்கை விரித்து
பறந்து மறைந்தது
ஆண்டாண்டுகளாய்
உறங்கி
விழித்தெழுந்து
தானாய் பூத்தது தாமரை
உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை
5 comments:
/ஆண்டாண்டுகளாய்
உறங்கி
விழித்தெழுந்து
தானாய் பூத்தது தாமரை/
அழகு வரிகள்.
/உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை/
அதானே? சிறப்பான கவிதை முத்துலெட்சுமி!
கடைசி வரிகள் சூப்பரு ;))
நன்றி ராமலக்ஷ்மி :)
நன்றி கோபி :)
கவிதை அருமையாயிருக்கு..
நன்றி சாரல்..:)
Post a Comment